Friday, October 10, 2008

சில கேள்விகள் – சில பதில்கள்


ஐயா, குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?

ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா. ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா. ஒரு குழந்தைக்கு செவ்வாய் கிரகமும், குருவும் எப்படி இருக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா. ஆ மெனில் செக்ஸ் கல்வியும் அவசியம்.

நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? எனக்கு பல கனவுகள் வருகின்றன. நான் அந்தக் கனவில் கத்துகிறேன் என்று துணைவியார் சொல்கிறார். ஆ னால் எழுந்தப் பிறகு எனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. கனவுகள் பற்றி சற்று விளக்க முடியுமா.

மனதின் இன்னொரு மொழிதான் கனவு. அந்த மொழிக்கு லிபி இல்லை. ஏன் சப்தம் கூட இல்லை. மனதின் மெள ன மொழி நாடகமாக கண் முன்னே விரியும். இயக்கங்களும், ஆ சைகளும், பயங்களும், கோபங்களும் மனதின் மெள ன மொழியில் வெளிப்படும். கனவு காணும் பொழுது விழிப்பாக இருந்தால் விழிக்கும்போது அந்தக் கனவைக் கைபற்றி விடலாம். கனவு காணும் பொழுதே “அட கனவு” என்று எவருக்கு தோன்றுகிறதோ அவர் கனவின் உத்தேசங்களை அறியக் கூடியவர். இதற்கு படுக்கும்பொழுதே என்ன கனவு வந்தாலும் நான் நிதானமாக புரிந்துக் கொள்வேன் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது. உங்கள் உறுதியைப் பொறுத்து கனவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும். கனவு முடிந்த பிறகு, விழிப்பு ஏற்பட்ட பிறகு கனவு காணாமல் போகும். அது தான் இயல்பு. உடனே கனவைத் துரத்தக்கூடாது. என்ன கனவு, என்ன கனவு என்று பதறக்கூடாது. பதறினால் கனவு இன்னும் அடி ஆ ழ த்தில் போய் சொருகிக் கொள்ளும். வெளியே வராது. கனவை மறந்து விடுங்கள். கனவை நோண்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குள் அந்தக் கனவு வந்து நிற்கும் அல்லது அதன் ஏதாவது ஒரு நுனி உங்கள் முன்பு வந்து நிற்கும். அந்த நுனியைப் பிடித்து இழுக்க மொத்தப் புடவையும் வெளியே வந்து விடும். அப்பொழுது கனவின் உத்தேசமும் உங்களுக்கு தெரிந்து விடும். கனவு என்பது சில சமயம் நீங்கள் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யலாம் என்றும் சொல்லக்கூடிய திறம் வாய்ந்தவை. கனவோடு போரிடாமல், கனவு மறுபடியும் நினைவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கனவு காணும்பொழுதே கனவைப் பற்றிய அறிவு வேண்டும் என்று படுக்கும் முன்பு தீர்மானம் செய்யுங்கள். பழக பழக இது எளிதாக கைகூடும்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பார்த்து நீங்கள் கோபப்படுவதை கவனித்திருக்கிறேன். இந்த அவசர யுகத்தில் இந்த விதிகள் எல்லாம் அவசியமா?

அவசரமாக போவதற்கு தான் விதிகள். அலட்சியமாக போவதற்கு அல்ல. அவசரமாகப் போகிறவர் ஆ பத்தில்லாமல் போக வேண்டும் அல்லவா. அவசரமாக வேறு ஏதாவது இடத்திற்கு போவதற்குத் தானே முயற்சிக்கிறார். அவசரமாக மேல் உலகம் போகவா முயற்சிப்பது. அதைப் பார்த்து ஒருவர் பதறக்கூடாதா. ஒருவர் செய்கிற தவறு அவருக்கு மட்டும் மரணம் கொடுக்காமல் மற்றவருக்கும் பெரிய இடைஞ்சல் கொடுத்து விடுகிறது. இடது பக்கம் ஓவர்டேக் செய்வது போன்ற கேவலமான விஷயம் வேறெதுவும் இல்லை என்பது என் அபிப்ராயம். சந்து முனையில் லாரிகள், கார்கள், ஆ ட்டோகளை நிறுத்துதல் அடுத்தபடியான கேவலம். ஒரு தெருவில் திரும்பும் போது எதிரில் வரும் வண்டியை தெரியாமல் மறைக்க இம்மாதிரியான விஷயங்கள் தடை செய்கின்றன. போக்குவரத்தை மரியாதையாக மதிக்க கற்றுக்கொண்டால், போக்கும் வரத்தும் மிக எளிதாக இருக்கும். இல்லையெனில் நூற்றுகணக்கான விபத்துகள் ஒரு நாளைக்கு நிச்சயம். பட்டாலும் புத்தி வராத மனிதர்கள் இந்தியாவில் தான் நிறைய உண்டு.

நீங்கள் சமீபமாக பார்த்து ரசித்த படம்?



குறுந்தகட்டில் ஹோம் பாக்ஸ் ஆ பிஸ் என்கிற எச்.பி.ஒ.வின் “ரோம்” என்கிற டெலிவிஷன் சீரியல் பார்த்தேன். பன்னிரண்டு அத்தியாய ங்களாக ஜுலியஸ் சீஸர், மார்க் ஆ ண்டனி, புருட்டஸ் என்போரை வைத்து சாதாரண ரோமனிய போர்வீரர்களை மையமாக்கி, ரோமானிய பெண்களை முக்கியமான கதாப்பாத்திரம்
ஆ க்கி அருமையா டிவி சீரியல் செய்திருந்தார்கள். இதைப்போல நான் எழுதிய உடையார் என்கிற ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை சமூகப் பொறுப்போடும், கலை நயத்தோடும் எவ ரேனும் எடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு வந்தது. தமிழர் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும் என்றால் மானாட மயிலாட என்று இருக்க முடியாது. சரித்திரம் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். தமிழின் மேன்மை சரித்திரத்தில் இருக்கின்றது. வெறும் ஆ ட்டத்தில் இல்லை.

உங்களுக்கு பேண்டு வாத்தியம் பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும். நாதஸ்வரம், தவிலை விட, தாரை தப்பட்டையை விட இந்த ஸாக்ஸபோன், பேண்டு வாத்தியம் மிகவும் காதுக்கு இதமாக இருப்பதாக என்னுடைய அபிப்ராயம். முன்பெல்லாம் வட்டமாக பீச்சில், பார்கில் நின்று இந்தப் பேண்டு வாத்தியக் குழு இசைக்கும்.
நல்ல கர்னாடக சங்கீதங்களை துல்லியமாக வாசிப்பார்கள். கர்னாடக சங்கீதத்தை பேண்டு வாத்தியத்தில் கேட்பது தனி சுகம். அது தயிர் சாதத்தை ஸ்பூனும், முள் கரண்டியுமாய் சாப்பிடுவது போன்ற அழகு.

கயிலாய மலையை போய் காசுக் கொடுத்து பார்த்து விட்டு அது வேறொன்றுமில்லை வெறும் பனி படர்ந்த மலை என்று என் நண்பர் சொன்னார். அவர் சொல்வது சரிதானா. வெறும் கல்லைப் பார்த்து கடவுள் என்று எப்படி பரவசப்படுவது?

பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற பெற்ற தாயைப் பார்த்துவிட்டு இது என்ன வெறும் எலும்பும், சதையும், நரம்பும், ரத்தமும் கலந்த ஒரு பிண்டம். இதைப் பற்றி அம்மா என்று கொண்டாட என்ன இருக்கிறது என்று எவனாவது சொல்வானா. தாய்மை போன்ற உணர்வுகள் தோற்றம் தாண்டியவை என்று அறியாதவன் மனிதன் தானா.