<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810</id><updated>2012-02-16T01:13:50.343-08:00</updated><category term='புத்தகம் - மதிப்புரை'/><category term='ஆன்மீகம்'/><category term='சரித்திர பக்கங்கள்'/><category term='கேள்வி - பதில்'/><category term='-&#x9;கேள்வி – பதில்'/><category term='ஜோக்'/><category term='போராட்டம்'/><category term='கடிதம்'/><category term='அனுபவம்'/><category term='கலை'/><category term='கேள்வி- பதில்'/><category term='கட்டுரை'/><category term='கேள்வி-பதில்'/><category term='சரித்திரப் பக்கங்கள்'/><category term='பிரார்த்தனை - தேடல்'/><category term='அனுபவங்கள்'/><category term='பேட்டி'/><category term='சரித்திரம் - வீடியோ'/><category term='பயணம்'/><category term='கவிதை - குதிரை'/><category term='கேள்வி – பதில்'/><category term='இலக்கியம்'/><title type='text'>பாலகுமாரன் பேசுகிறார்</title><subtitle type='html'>எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - சில பதிவுகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>85</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-4763832581908032049</id><published>2011-01-24T05:46:00.000-08:00</published><updated>2011-01-24T06:01:22.414-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்</title><content type='html'>தோழனே! தியானம் என்பது மந்திரமல்ல, ஒரு மதத்தின் கோட்பாடும் இல்லை. யாரோ பொழுது போகாதவர்களின் வேலையும் அல்ல. இது சும்மா  இருத்தலின் ஆரம்ப நிலை. &lt;br /&gt;  சும்மா இருத்தல் என்பது சோம்பி இருத்தல் அல்ல. எந்த செயலும் செய்யாது ஏதோ கற்பனையில் மூழ்கி இருத்தலும் அல்ல. ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்த்தலே சும்மா இருத்தல். இது துறவிகளுக்கான விஷயமல்லவா என்று கேள்வி வரும். எல்லோருக்கும் தேவைப்படும் நிலை அது. எவரெல்லாம் வெற்றி பெற விரும்புகிறாரோ, அவருக்கு உண்டான ஆதார சக்தி இது.&lt;br /&gt;&lt;br /&gt;  எவரால் சும்மா இருக்க முடிகிறதோ, அதாவது எவரால் ஒரு விஷயத்தை விருப்பு வெறுப்பின்றி பார்க்க முடிகிறதோ, அவர் அந்த விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். ‘தியானம் பண்ணா பக்கத்து வீட்டு விஷயம் பளிச்சுன்னு சினிமா மாதிரி தெரியுமா?’ பேராசை இது. விருப்பு தலை விரித்தாடும் புத்தி இது. அடுத்த வீட்டை ஏன் பார்க்க வேண்டும் என்கிற கேள்வி தனக்குள் இல்லாத ஆவல் இது, உன் வீட்டை பார். உன்னை உற்றுப்பார், உன்னிலிருந்து துவங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;  தன்னையே விருப்பு வெறுப்பின்றி பார்ப்பவருக்கு அடுத்த வீடு பற்றி அதிக அக்கறை இல்லாது போகும். அங்கே யார் என்ன பேசுகின்றார்கள். என்ன செய்கின்றார்கள் என்ற ஆவல் இல்லாது போகும். அந்தரங்கம் தெரியும். பேராசையற்றுப் போகும். அவர்களும் நம்மைப் போல் நல்லதும், கெட்டதும் நிறைந்தவர்கள் என்கிற விருப்பு வெறுப்பற்ற நிலை வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த நிறை வர அடுத்த வீடு என்ன என்பது எளிதாய் புரியும். அழகிய பெண் இருக்கிறாள் என்று ஆசைப்படாமல், அவலமான குடும்பம் என்று வெறுப்பு கொள்ளாமல் மனித சுபாவங்களை உணரமுடியும். அப்போது சிநேகம் எதிர்பார்ப்பின்றி இருக்கும். எதையும் எதிர்பார்க்கவில்லை என்று அவர்களுக்கு புரிய, உள்ளத்தைத் திறந்து தானே உன்னிடம் கொட்டுவார்கள். அப்போது சலனமற்று பேச அடி ஆழத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரும். அடுத்த வீடு பற்றி சகலமும் புரியும். நான் மனிதர்களை புரிந்து கொள்ளும் விதம் இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;  விருப்பு வெறுப்பற்ற மனம் எப்படி வரும்? ஏகப்பட்ட விருப்பங்கள் உள்ளனவே, கண்டபடிக்கு வெறுப்பு இருக்கிறதே, மேலும் கேள்வி வரலாம். எனக்கும் இருந்தது தோழா, மெல்ல மெல்ல மாறினேன். சொடுக்கு நேரத்தில் இது கை கூடாதய்யா. சொல்லிக் கொடுத்து விட்டால் வராது தம்பி. கற்றுக்கொடுப்பதில் விசேஷம் இல்லை. கற்றுக் கொள்வதில்தான் காரியம் உண்டு. நீச்சல் தரையிலா சொல்லித் தர முடியும். தியானத்தை புத்தகத்திலா எழுதி காட்ட முடியும். ஆர்வம் தூண்டலாம். ஒன்று இரண்டு மூன்று என்று விதிகள் எழுதலாம், படித்து விட்டு நீச்சல் குளம் தேடிப்போய் நீரில் இறங்க வேண்டும். குளிரக் குளிர நனைய வேண்டும். நீச்சல் விதிகள் மறந்து சும்மா தரையைப் பிடித்துக் நீச்சலடிக்கிறவர்களை வேடிக்கை பார்க்கும் புத்தி வரும். அதை விலக்கி கம்பியை பிடித்து உடம்பு லேசாக்கி கால் மட்டும் தூக்கிப் போட்டு பயிற்சி துவங்க வேண்டும். உடம்பு அசைக்காமல் வெறுமே முடிந்த வரை மிதக்க வேண்டும். இடைவிடாது நீச்சல் வரும் வரை செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஏதோ ஒரு கணம் நீச்சல் வந்து விடும். என்ன காரணம்? தெரியாது. இது போலவே தியானமும். ‘தியானம் பண்றேன் மச்சி, நீயும் பண்ணு’ செய்து பழகும் முன்னே செயல்முறை பற்றி தம்பட்டம் அடிக்கத் தோன்றும். இந்த அலட்டல் தியானத்திற்கு எதிர் விஷயம், உடனே நிறுத்தி விடவேண்டும். இரண்டு நாள் செய்துவிட்டு முகம் மாறியிருக்கா என்று கண்ணாடி முன்பு பார்க்க தோன்றும். இது பொய், விலக்க வேண்டும். ‘இடுப்பு நோவுது, கால் மரத்தது போல் ஆகுது, இருபது நிமிஷம் சீக்கிரம் ஆயிட்டா நல்லா இருக்கும்’ இந்த வன்முறை வேண்டாம். இயலவில்லையெனில் எழுந்து உலவிவிட்டு மறுபடி உட்காருதல் நலம்.&lt;br /&gt;&lt;br /&gt; கண்ணை மூடிக்கொண்டு தியானம் வந்துவிட்டது போலவும், பாலகுமாரன் போல் தாடி குங்குமம் வைத்து கொண்டது போலவும், ஊர் உறவு எல்லாம் காலில் விழுந்து விபூதி வாங்கிக் கொள்வது போலவும் கற்பனை வரும். இது சுகம். ஆனால் விஷம். தவிர். இனியனே, பொய்யற்று இரு. உலகத்தாரிடையே பொய் சொல்வதை தவிர்க்க முடியாதிருக்கலாம், உனக்கு நீயே சொல்லலாமா. இதில் உபயோகம் உண்டா, யாரை ஏமாற்றப் பொய். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளப் போகிறாயா, ஆமெனில் அழிவு நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt; கடும் உண்மையோடு இரு. கண்டிப்பான உண்மையோடு இரு. எதற்கு எனக்கு தியானம் என்று கேள்வி கேள், விடை கண்டுபிடி. எனக்கு ஒரு குழப்பமும் இல்லை, சும்மா தெரிஞ்சுக்கலாமென்னு தான். தப்பா? ஏகப்பட்ட குழப்பம் சார், எவனை நம்பறதுன்னே தெரியலை, எது பண்ணாலும் தப்பு வருது. குத்தம் சொல்றாங்க, ரொம்ப அப்செட் ஆய்ட்டேன் சார், தூக்கமே வரலை; என்னைப் புரிந்துகொள்ள என் மனசின் உண்மையான நிலை பற்றி அறிய ஆவல். என்னை அறிய, எல்லாம் அறியமுடியும் என்கிற நம்பிக்கை. எல்லாம் கற்றுக் கொள்ள எண்ணம்  தியானம் அதில் ஒன்று அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt; இதில் எதுவாயினும் உங்கள் பதிலாய் இருக்கலாம். எதற்கும், எந்த பதிலுக்கும் வெட்கப்படத் தேவையில்லை. ஏனெனில், இது உங்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியப் போவதில்லை. எதுவாயினும், எந்த காரணம் இருந்தாலும் உண்மையானதாய் இருக்கட்டும். உள்ளுக்குள்ளே பொய்யில்லாது இருக்கட்டும். பொதுவாய் பேசுவதை விடுத்து, தியானம் பற்றி என்னிலிருந்து என் அனுபவத்திலிருந்து பேசுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; ஏனெனில் இந்த கட்டுரையின் நோக்கம் தியானம் செய்ய ஆர்வம் ஊட்டுதலே, தியானத்தில் தெளிவது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் உறுதியைப் பொறுத்து அமைவது. அந்த உறூதி எங்கிருந்து வரும் என்பதை என் அனுபவமாக சொல்ல நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-4763832581908032049?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/4763832581908032049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=4763832581908032049' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/4763832581908032049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/4763832581908032049'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2011/01/blog-post_24.html' title='கற்றுக் கொண்டால் குற்றமில்லை - தியானம் செய்யுங்கள்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-1334404268592323448</id><published>2011-01-10T18:42:00.000-08:00</published><updated>2011-01-10T19:06:25.102-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதம்'/><title type='text'>சொர்க்கம் நடுவிலே - வாசகர் குரல்</title><content type='html'>ஜெய விஜயீ பவ !&lt;br /&gt;&lt;br /&gt;டியர் மாஸ்டர், &lt;br /&gt;&lt;br /&gt;         சொர்க்கம் நடுவிலே படித்து முடித்த பிறகு, உங்களை இப்படித் தான் முகமன் சொல்லி வரவேற்க வேண்டும்; அழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கேசவன் நாராயணனோடு பயணித்துவிட்டு, இப்போது தான் பூமியில் இறங்கியது போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;          மரணத்தைப் பற்றிய அறிவைத் தந்து, மனித மனத்தின் அடி ஆழத்தில் இருக்கும் பயத்தை ஒரே வீச்சில் துடைத்தெறிந்து விட்டீர்கள். &lt;br /&gt;       &lt;br /&gt;          எல்லோருக்கும் நீங்கள் பார்த்தசாரதி. ஆனால், இந்த பார்த்தன் உங்களுக்கு சாரதி. இது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப் பேறை விட மிக உன்னதமான விஷயம் உங்களோடு காரில் பயணிக்கும் போது, நீங்கள் எழுதப் போகும் கதையைப் பற்றி விவரிப்பதைக் கேட்பது.&lt;br /&gt;  &lt;br /&gt;           சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருக்கும் என்று நினைக்கிறேன். “பாலாஜி, நான் மரணத்திற்கு அப்பால் வாழ்க்கையைப் பற்றி எழுதுவதாக நிச்சயித்திருக்கிறேன். எமப்பட்டினம் என்றால் என்ன என்று ஒரு அரை மணி நேரம் உனக்கு சொல்லுகிறேன். கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுவாயா” என்று கேட்டீர்கள். உடனடியாகத் தயாரானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;          மரணம் என்றால் என்ன?எமப்பட்டினம் என்பது என்ன? எமகிங்கரர்கள் யார்? மரணம் ஏன் வலி? வலியில்லா மரணம் உண்டா? நரகம் உண்டா? சொர்க்கம் உண்டா? நரகம் எது? சொர்க்கம் எது? வாழ்வின் அடிப்படையான கேள்விகளை நீங்களே எழுப்பி,  அதன் பதில்களை நீங்களே தெளிவாக விவரித்துக் கொண்டு போக, என் மனம் கை கட்டி, வாய் பொத்தி, உங்கள் உபநிஷத விளக்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தது. கார் தன்னிச்சையாக ஓடிக் கொண்டிருந்தது அதிசயமே.&lt;br /&gt;&lt;br /&gt;       கனத்த ஒரு அமைதி என்னை சூழ்ந்து கொண்டது. நன்றாக புரிந்தது போலவும் இருந்தது. புரியவில்லையோ என்ற சந்தேகமும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;       இவ்வளவு கடினமான ஒரு விஷயத்தை இவர் எப்படி நாவலாக்கப் போகிறார்? அப்படி நாவலாக்கினால் படிப்பதற்கு உவப்பாக இருக்குமா என்ற கவலையும் எழுந்தது. ஆண்-பெண் உறவு சிக்கல்களை விளக்கி வளமான வாழ்விற்கு வித்திட்ட உங்கள் எழுத்து, இல்லறத்தோடு கூடிய இறைதேடலை ஊக்குவித்த உங்கள் உற்சாகமான எழுத்து, வாழ்விற்கு எதிர்மறையான மரணத்தைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்ற பெரிய கேள்விக்குறி என் முன்னே நின்றது.&lt;br /&gt;என்றோ ஒரு நாள் மரணம் நிகழப் போகிறது. அதைப் பற்றி இன்று தெரிந்து கொண்டு ஏன் வாழ்வின் சுவையைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? வாழும் வாழ்க்கையையே முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் மரணத்தைப் பற்றி ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும். உங்களின் இந்த முயற்சி அவசியம் இல்லாத ஒன்றோ என்றும் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TSvHWv3H9gI/AAAAAAAAAuQ/mtuIY_iZdtw/s1600/Swargam.bmp"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 211px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TSvHWv3H9gI/AAAAAAAAAuQ/mtuIY_iZdtw/s320/Swargam.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560757358537733634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்,&lt;br /&gt;&lt;br /&gt;“நான் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. அந்தணன். ஆனாலும் போர்த் தொழில் செய்பவன். நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆயிற்று. இன்னும் பிறக்கவில்லை. இப்போது பூமியிலுமில்லாமல், பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். மரணத்திற்குப் பின் உடலில்லாத உலகத்திற்கு வருபவர்களுக்காக உதவிகள் செய்ய உத்தேசித்து இங்கே காத்திருக்கிறேன்” என்று ஆரம்பிக்கப் போகிறேன் பாலாஜி’, என்று நீங்கள் கூறியவுடன் I understood that the magician is back at his work.&lt;br /&gt;&lt;br /&gt;       மரணம் மற்றும் மறுபிறப்பு என்ற சுழற்சியைப் பற்றி நீங்கள் விவரித்த விஷயங்கள் அறிவியல் உலகின் அடிப்படை விதிகளோடு மிகச் சரியாகப் பொருந்தியது கண்டு ஆச்சரியப்பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;      For every action there is an equal and opposite reaction-&lt;br /&gt;                                  இது நியூட்டனின் மூன்றாம் விதி. &lt;br /&gt;&lt;br /&gt;      நாம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று நீங்கள் விளக்கும் கர்மா theoryஐ மறுக்கவே முடியவில்லை. நமது செயலின் எதிர்வினைகள் மரணத்திற்குள் முடிந்து விடுவதில்லையே என்று யோசிக்கும் போது, மரணத்திற்குப் பின்னும் இந்த வாழ்வின் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வாழ்விற்குள்ளேயே வினைகளை நிறுத்தியவருக்கு ஏது மறுபிறப்பு, அப்படிப்பட்டவர்கள் தான் ஞானிகளோ!&lt;br /&gt;&lt;br /&gt;         இப்போது அறிவியலின் மற்றொரு விதியும் நினைவுக்கு வருகிறது.&lt;br /&gt;          ‘Energy can neither be created nor be destroyed. It is transformed from    one from to another’.&lt;br /&gt;                          ----இது Law of conservation of energy. &lt;br /&gt;&lt;br /&gt;         விஞ்ஞானத்தின் அதிஉன்னத நிலை ஞானமோ. சத்தியத்திற்கு ஏது பிரிவினை. &lt;br /&gt;&lt;br /&gt;              இதுவரை பலப்பல ஞானிகளைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தீர்கள். இப்போது பகவான் ரமணர் போன்ற மகரிஷிகளின் ஞான தத்துவங்களை சர்க்கரை மிட்டாயாகத் தந்து கொண்டிருக்கிறீகளோ.&lt;br /&gt;    &lt;br /&gt;            உலகம் இரண்டு மாறுபட்ட நிலைகளுக்கிடையே இயங்கிக் கொண்டிருக்கிறது. விருப்பு-வெறுப்பு, இரவு-பகல், இன்ப-துன்பம், பாஸிடிவ்-நெகடிவ் என்பது உண்மையெனில் zero point என்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா. இந்த zero point தான் நீங்கள் சொல்லும் நடுநிலையோ. இந்த நடுநிலையிலேயே இருந்து நாம் செயலாற்றும் போது there won’t be any reaction, Isn’t it?   இப்படித் தானே பிறப்புச் சங்கிலியை அறுக்க வேண்டும். இது தானே நீங்கள் சொல்வது. &lt;br /&gt;&lt;br /&gt;            “சொர்க்கம் நடுவிலே” படித்து முடித்த பிறகு “சக்தி விகடனில்” நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் தத்துவார்த்த விளக்கங்களை மீண்டும் படித்தபோது நன்கு புரிந்தது. Thank you master.&lt;br /&gt;&lt;br /&gt;             இதைவிட எளிமையாக வேதாந்த கருத்துகளை யாரால் எழுத முடியும்? Hats off எழுத்துச் சித்தரே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/TSvIzyZ4yBI/AAAAAAAAAuY/8jwsH3ZrY2A/s1600/DSC_0087.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/TSvIzyZ4yBI/AAAAAAAAAuY/8jwsH3ZrY2A/s320/DSC_0087.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5560758956948244498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               வாழ்க்கை என்பது மரணத்தோடு முடிந்து விடவில்லை. மரணத்திற்கு அப்பாலும் தொடர்கிறது. ஒவ்வொரு செயலின் எதிர்வினயையும் நாம் அனுபவித்தேயாக வேண்டும். தப்பித்துக் கொள்ளவே முடியாது என்பதை “சொர்க்கம் நடுவிலே” படித்துத் தெளியும் போது ‘நம் வாழ்க்கை நம் கையில்’ என்பது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்பதும் புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                 வாழ்வை பயம் கலந்த மரியாதையுடன் அணுக வேண்டும் என்ற பொறுப்பை எங்களையும் அறியாமல் எங்களுக்குள் ஏற்படுத்தி விடுவதே “சொர்க்கம் நடுவிலே”யின் வெற்றி. இதைவிட பெரிய சமூக சேவை வேறு என்ன இருக்கக் கூடும். தனி மனிதன் மாறாமல் இங்கு என்ன மாற்றம் கொண்டு வந்து விட முடியும். உங்கள் எழுத்தின் மூலம் சப்தமே இல்லாமல் பெரும்புரட்சி செய்து விட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;                   பாரத கலாசாரத்தின் ஆணிவேரான ஞான தத்துவங்களை மேற்கத்திய மோகம் நிறைந்த இந்த சூழலில் convincing ஆக விளக்கி, மக்கள் மனதை நேர்வழிபடுத்தும் உங்கள் எழுத்து இலக்கிய உலகின் உயரிய விருதான “சாகித்ய அகாடமி” விருதால் கெளரவிக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;                   ஒரு வினைக்கு எதிர்வினை உண்டெனில்... விருது நிச்சயம் உண்டு.&lt;br /&gt;           &lt;br /&gt;                 ‘நான் வெறும் உடலல்ல, நான் யார் என்று என் மனதைப் பார்க்கும் போது, என் எண்ணங்கள் புரிகிறது. எண்ணங்கள் புரிய தியானம் இயல்பாகிறது. நடுநிலையில் நின்று இந்த உலக விஷயங்களை உற்று நோக்க ஆரம்பிக்க நானும் கேசவன் நாராயணனாகி விட்டேனோ!’&lt;br /&gt;&lt;br /&gt;                   ‘சொர்க்கம் நடுவிலே’ படிக்கும் ஒவ்வொருவரும் கேசவன் நாராயணன் ஆவதைத் தவிர்க்க முடியாது. Is the act witnessing itself Kesavan Narayanan, I think so. &lt;br /&gt;               சொர்க்கத்தை எந்த ஜென்மத்தில் அடைவோம் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையையே சொர்க்கமாக்கி விட்டீர்கள். பயனுள்ள வாழ்வு, பயமில்லா வாழ்வு சொர்க்கம் தானே! &lt;br /&gt; &lt;br /&gt;               இறப்பதற்கு முன்னாலேயே சொர்க்கத்தை அனுபவித்தால் அதைவிட பெரிய பேறு வேறு என்ன இருக்க முடியும். &lt;br /&gt; &lt;br /&gt;                Your ‘sorgam naduvile’ is a tribute to mankind. &lt;br /&gt; &lt;br /&gt;             ஒவ்வொரு அத்தியாயத்திலும் கேசவன் நாராயணன் அறிமுகப்படுத்திக் கொள்வது ஒரு புதுமை. மிக அருமை.&lt;br /&gt; &lt;br /&gt;              அந்த கமாண்டோ வீரனின் மரணம் மும்பையில் தாஜ் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலை நினைவூட்டியது. அங்கு மாய்ந்த வீரர்களும் இப்படித் தான் சொர்க்கம் சென்றிருப்பார்களோ என்ற மனமயக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;            உங்கள் எழுத்தின் மற்றுமொரு தாக்கம் என் உடனடியான ஸ்ரீரங்கப் பயணம். துலுக்க நாச்சியார் சந்நிதியில் உருகி நின்ற மணித்துளிகள். &lt;br /&gt;&lt;br /&gt;           விதம் விதமான மரணங்களைச் சொல்லி அதன் நிலையையும் விளக்கி இருக்கிறீர்கள். ஞானியை பேச வைத்து பல சிறிய, பெரிய கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுகிறீர்கள். மரணத்தருவாய் எப்படி இருக்கும் என்பதை ஒரு கிழவர் மூலம் விளக்குகிறீர்கள். உயிர்ப் பிரிவதை நேரடியாகப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;            கொலை செய்யப்பட்டவன் கூட மரணத்திற்குப் பின் அமைதியாகிறான். ஆனால், தற்கொலை மரணத்திற்குப் பின்னும் மிகப் பெரிய வேதனை என்று சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு அப்பாலும் கேள்விகள் எழும். வாசகர்கள் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டு தெளிய வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                நீங்கள் வாழ்வதற்கு மட்டும் நல்ல வழிகாட்டி அல்ல. நல்ல மரணத்திற்கும் உங்களால் வழிகாட்ட முடியும். இந்த நாவலை படித்து முடித்த பிறகு இனி எந்த மரணத்தையும் முன் போல் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;                இந்த பார்த்தன் மீண்டும் தயாராக இருக்கிறேன். கண்ணனோடு அடுத்த கார் பயணம் எப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;        At your service, &lt;br /&gt;          Your’s ever&lt;br /&gt;&lt;br /&gt;           Balaji Arun&lt;br /&gt;&lt;br /&gt;        Divisional Manager ,&lt;br /&gt;        Brakes India Ltd.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-1334404268592323448?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/1334404268592323448/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=1334404268592323448' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/1334404268592323448'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/1334404268592323448'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2011/01/blog-post_10.html' title='சொர்க்கம் நடுவிலே - வாசகர் குரல்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TSvHWv3H9gI/AAAAAAAAAuQ/mtuIY_iZdtw/s72-c/Swargam.bmp' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-7201566217260919010</id><published>2011-01-07T22:44:00.000-08:00</published><updated>2011-01-07T22:58:08.479-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”</title><content type='html'>குரு என்பவர் உதயசூரியன். வங்கக் கடலில் முங்கியெழும் சூரியனைப் பார்க்கும் பொழுது கை கூப்பாமல் இருக்க முடியுமா? செக்கச் சிவந்த நிறத்தில் தகதகத்து எழும் போது வணங்காமல் இருக்க முடியுமா? குளுமையான நேரத்தில் ஒளியோடு எழும்போது மனதில் விம்முகின்ற ஆனந்தத்தை கண்களில் காட்டாது இருக்க முடியுமா? குருவினுடைய தரிசனம் அப்படிப்பட்டது.&lt;br /&gt;  திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்க்கும் போதெல்லாம் இப்படிப்பட்ட ஆனந்தத்தை, பணிவை உள்ளிருந்து பொங்கும் வணக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். எந்த முயற்சியுமில்லாமல், எந்த எண்ணமுமில்லாமல், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் கரம் கூப்பி வணங்கியிருக்கிறேன். வெறுமே தொலைவிலிருந்து வணங்காமல் அவருடைய மேன்மையை அண்மையில் இருந்து பல்வேறு நாட்களில், பல்வேறு விதங்களில் அனுபவித்திருக்கிறேன்.&lt;br /&gt;  &lt;br /&gt;            ஒரு நல்ல குரு மிகவும் சூட்சுமமானவர். அவரைப் புரிந்து கொள்வது கடினம். அவரை சாதாரணமாக எடை போட்டு, அவரிடமிருந்து விஷயங்களை மறைத்துவிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டால், அது மிகவும் முட்டாள்தனம். யோகி ராம்சுரத்குமார் சூட்சுமத்திலும் சூட்சுமமானவர் என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்.&lt;br /&gt; அவரை தரிசிக்க வேண்டுமென்று அடிக்கடி திருவண்ணாமலை போகின்ற விருப்பம் எனக்கு உண்டு. அப்படி செய்வது என் வழக்கம். ஒரு முறை திருவண்ணாமலைக்கு நேரடியாகப் போகும் பேருந்தில் ஏறி செளகரியமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பயணப்பட்ட போது அந்த விரைவுப் பேருந்தில் ஜனங்களைக் குளிர்விப்பதற்காக ஒலிநாடா வைத்துப் பாட்டு போட்டார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;                ‘அடடா, இது சிந்தனை ஓட்டத்தை அறுக்குமே, வேறு பேருந்தில் ஏறிவிடலாமா’ என்று நினைத்த போது, போட்ட பாடல்களெல்லாம் பழைய எம்.ஜி.ஆர் பாடல்களாக இருந்தன. என்னுடைய இளம் வயதில் நான் ரசித்த பாடல்களை மறுபடியும் கேட்கும் போது மனம் சந்தோஷத்தில் குதித்தது. இதுவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று நான் பாடல்களைக் கேட்டுக் கொண்டு வந்தேன். உள்ளுக்குள் என் குருவின் நாமமும், அவரைப் பற்றிய சிந்தனையும் தனியாக ஓடிக் கொண்டிருந்ததன. மிக விரைவாக திருவண்ணாமலையை பேருந்து அடைய, இறங்கி அவர் வீடு நோக்கி நடக்கும் போதும் உள்ளுக்குள் பேருந்தில் கேட்ட எம்.ஜி.ஆர். படப்பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. குறிப்பாய் ஒரு பாடல் அதிகமாக ஓடியது. ஆனாலும் அதைப் புறக்கணித்து விட்டு நான் அவர் வீட்டு வாசலுக்குப் போனேன்.&lt;br /&gt; &lt;br /&gt;            எப்போது போனாலும் வாசற்கதவை உடனே திறந்து என்னை உள்ளே வரவழைப்பதும், தனக்கு அருகேயுள்ள பாயை விரித்து, அதில் உட்காரச் சொல்வதும் அவருடைய வழக்கம். அன்றும் அதே விதமான வரவேற்பு கிடைத்தது. எதிரே சில பெண்மணிகளும் எனக்கு வலது பக்கம் சில ஆண்களும் அமர்ந்திருந்தார்கள். எதிரே இருந்தவர்கள் குருவின் நாமத்தை இடையறாது சொல்லிக் கொண்டிருக்க, என் தோளில் கையை வைத்தபடி என்னையே என் குருநாதர் பார்த்துக் கொண்டிருந்தார். சட்டென்று இன்னும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு “என்ன பாடிக்கொண்டிருக்கிறாய்” என்று கேட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;           “நான் மெளனமாகவல்லவா இருக்கிறேன், ஒன்றும் பாடவில்லை பகவான்” என்று சொன்னேன். “இல்லை. உள்ளே ஏதோ பாடிக்கொண்டிருக்கிறாய், என்ன பாட்டு அது”. நான் அப்போது தான் என்னை உள்ளே கவனித்தேன், &lt;br /&gt; உள்ளே &lt;br /&gt;  “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா &lt;br /&gt;  நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” &lt;br /&gt;என்கிற எம்.ஜி.ஆர். படத்தின் காதற்பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. பேருந்தில் போட்ட பாட்டு இன்னும் தொடர்ச்சியாக உள்ளே எந்தவித அர்த்தமுமின்றி, எந்தவித முயற்சியுமின்றி, எந்தவித திட்டமிடலுமின்றி, தானாக, சரியாக மூடப்படாத குழாயிலிருந்து நீர் வடிவதை போல ஓடிக் கொண்டிருந்தது.&lt;br /&gt; “என்ன பாட்டு” .&lt;br /&gt; நான் தயக்கத்தோடு “பேருந்தில் வரும் போது சினிமா பாடல்கள் போட்டார்கள். அதில் ஒரு பாட்டு உள்ளுக்குள்ளே தங்கிவிட்டது” என்றேன்.  “என்ன பாட்டு அது” என்றார்.&lt;br /&gt;  நான் சொல்வதற்கு தயங்கினேன். ஒரு மகத்தான குருவிடம் ஒரு சாதாரண சினிமா பாட்டை சொல்ல வேண்டிய அவசியம் உண்டா என்ற எண்ணம் ஏற்பட்டது.&lt;br /&gt;  “என்ன பாட்டு” மறுபடியும் கேட்டார்.&lt;br /&gt; “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” என்று சற்று உரத்த குரலில் சொன்னேன். &lt;br /&gt;&lt;br /&gt;            எதிரே உட்கார்ந்திருந்த பெண்மணிகள், வலதுபக்கம் உட்கார்ந்திருந்த ஆண்கள் எல்லோரும் குபீரென்று சிரித்தார்கள். என் குருநாதர் சிரிக்கவில்லை. மிகக் கூர்மையாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;    எதிரே இருந்த அம்மையார் ஒருவர் மெல்லிய குரலில் என்னை நோக்கி பேசினார், “பாலகுமாரன் இது அநியாயமாபடலே” என்று கேட்டார். மற்றவர்கள் அதற்கும் சிரித்தார்கள்.&lt;br /&gt;   “இரண்டு கல்யாணம் பண்ணிண்டு திருப்பியும் ‘கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா’ என்று சொல்றேளே, நன்னாயிருக்கா” என்று கேட்க, மறுபடியும் கூட்டம் குபீரென்று சிரித்தது. ஆனால், குருநாதர் சிரிக்கவில்லை. ஒரு கேலிக்கான பொருளாய் அங்கு இருப்பதைப் பார்த்து முகம் வெளிறி சிரித்தேன்.&lt;br /&gt;  “பேருந்தில் திரும்ப திரும்ப இந்தப் பாட்டை போட்டுக் கொண்டிருந்ததால், உள்ளுக்குள்ளே தங்கி விட்டது. என்னையும் அறியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மற்றபடி இந்தப் பாட்டினுடைய அர்த்தம் பற்றி எனக்கு கவலையில்லை” என்று அவரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவேயில்லை. காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவர் என் கைகளைக் கோர்த்துக் கொண்டார்.&lt;br /&gt;  “தயவு செய்து அந்தப் பாட்டைப் பாடு” என்றார். இந்த முறை கூட்டத்தினர் ஆரவாரித்தனர். பகவான் யோகி ராம்சுரத்குமார் ஏதோ மிகப் பெரிய விளையாட்டு ஒன்று விளையாட, என்னை வைத்துக் கொண்டு நாடகம் போட தீர்மானித்துவிட்டார் என்று எனக்குத் தெரிந்தது. நான் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன். &lt;br /&gt;  அவர் தோள் உலுக்கி “பரவாயில்லை. பாடு” என்றார். “அது சினிமா பாட்டு” என்றேன்.&lt;br /&gt;  “அதனாலென்ன, நல்ல பாட்டு தானே, பாடு” என்றார். நான் தொண்டையை செருமிக் கொண்டேன். எதிரே உள்ள எல்லா முகங்களிலும் கேலி, கிண்டல் ததும்பியிருந்தது. &lt;br /&gt; “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா&lt;br /&gt;  நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா&lt;br /&gt;  செல்லாத இடம் நோக்கி செல்லலாமா&lt;br /&gt;  சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”&lt;br /&gt;நான் பாடினேன். மறுபடியும் யாரோ ஏதோ சொல்ல, அவர்கள் கைக் கொட்டி சிரித்தார்கள். &lt;br /&gt; ‘என்ன’ என்பது போல் யோகி ராம்சுரத்குமார் சொன்னவரை உற்றுப் பார்க்க, “பாலகுமரான் ஏதோ திட்டமிட்டு தான் இங்க வந்திருக்காரு” என்று அவர் மறுபடியும் தன் கருத்தை சொன்னார். மீண்டும் கூட்டம் சிரித்தது. பரிதாபமாக குருவைப் பார்த்தேன்.&lt;br /&gt;  “பரவாயில்லை பாலகுமாரன், பாடு” என்று சொன்னார். &lt;br /&gt; &lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/TSgKzadiM5I/AAAAAAAAAuA/EDQIJU_DJ7Q/s1600/Picture%2B%252825%2529.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 244px;" src="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/TSgKzadiM5I/AAAAAAAAAuA/EDQIJU_DJ7Q/s400/Picture%2B%252825%2529.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5559705618381681554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு அளவுக்கு மேல் போய்விட்டது. இனி என்ன வந்தாலென்ன. சாண் ஏறினாலென்ன, முழம் ஏறினால் என்ன என்று நான் தொண்டையை செருமிக் கொண்டு இனிமையான குரலில், பாட்டு எந்த பாவத்தோடு இருக்க வேண்டுமோ, அந்த பாவத்தோடு பாட்டு பாடினேன்.&lt;br /&gt;  மூன்றாம் முறையும் “பாடு” என்று யோகி ராம்சுரத்குமார் கட்டளையிட்டார்.&lt;br /&gt;  அப்போது சாண், முழம் எல்லாம் தாண்டி தலைக்கு மேலே வெளிவர முடியாத உயரத்தில் வெள்ளம் போய் கொண்டிருக்கிறது. இனி என்ன வேண்டுமானாலும் ஆகட்டுமென்று இந்த முறையும் மிக அழகான குரலில் பாடினேன். &lt;br /&gt;  “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா” அவர் நெருங்கி என்னை அணைத்துக் கொண்டார். &lt;br /&gt;  “கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா” தோளை விடுவித்து, தன் கையை என் கையோடு பற்றிக் கொண்டார். &lt;br /&gt;  “செல்லாத இடம் நோக்கி செல்லலாமா” தன் உடம்பு முழுவதையும் என் மீது சாய்த்தார்.&lt;br /&gt;  “சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா” என்று பாடியவுடன், உடனே திடீரென்று இடுப்புக்குக் கீழே ஏதோ வெடித்துக் சிதறியது. சரக்கென்று மேலே ஏறியது. இடுப்பைத் தாக்கியது. நடுமுதுகைக் குத்தியது. மேலெழும்பி நெஞ்சைக் குறிபார்த்து எகிறி சிதறடித்தது. தொண்டைக்கு வந்து, நெற்றிக்குப் போயிற்று, உச்சியில் வந்து படீரென்று எரிமலையாய் வெடித்தது.&lt;br /&gt;   என்னால் அந்த வேகத்தைத் தாங்க முடியவில்லை. என் உடம்பு பரிதவித்தது. நான் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வாய் விட்டு கதறினேன். யாரோ நெஞ்சில் ஈட்டியால் சொருகியதைப் போல கத்தினேன்.&lt;br /&gt;  &lt;br /&gt;         என் உலகம் மாறிப் போயிற்று. அது ஜடப்பொருளாலான உலகமல்ல. மண், மரம், இரும்பு, தாமிரம், வெள்ளி, மனித உடல்கள் என்று பருப்பொருளாலான உலகமல்ல. அது வெளிச்சமான உலகம். முற்றிலும் வெளியான உலகம். எந்தத் தடையுமில்லாத உலகம். எந்த இலக்குமில்லாத உலகம். எந்தப் புள்ளியுமில்லாத உலகம். எல்லா இடமும் வெளிச்சம், நானும் வெளிச்சம். வெளிச்சம் வெளிச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இலக்கின்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. புள்ளியை கடந்தால் தானே வேகம் தெரியும். கடப்பதற்கு எந்த புள்ளியுமில்லை. தொடுவதற்கு எந்த எலையுமில்லை. அதனால் வேகம் மிகப் பெரிய வேகமாக இருந்தது. அந்த வேகம் என்னால் உணரப்படாமலிருந்தது.&lt;br /&gt;  &lt;br /&gt;             வேகம் இருக்கிறது. ஆனால், எவ்வளவு வேகம் என்று தெரியவில்லை. நான் இருக்கிறேன். ஆனால் எதனுள் இருக்கிறேன் என்று தெரியவில்லை. நானும் வெளியும் வெவ்வேறல்ல. வெளி தான் நான். நான் தான் வெளி. எனவே நான், நீ என்ற பேதமில்லை. எல்லோரும் நான் தான். எல்லாமும் நீ தான். இரண்டு பேர் இல்லை. இரட்டைகள் இல்லை. அதனால் துவந்தமுமில்லை. போட்டியோ, பொறாமையோ, விருப்போ, வெறுப்போ எதுவுமில்லை. இது பேரமைதி. முடிவில்லாத சந்தோஷம் நெல்முனையளவும் குதியல் இல்லாத அமைதி.&lt;br /&gt;       இது தான் நான், இங்கிருந்து தான் நான். இதுவே என் இயல்பு. உடலற்று உணர்வாகத் திகழ்கிற போது இப்படித்தான் இருக்கிறேன். &lt;br /&gt; &lt;br /&gt;            மெல்ல அந்த வெளிச்சம் வெளிறியது. உடம்பின் ஞாபகம் வந்தது. மனம் தானாக விழித்தது. நகர்ந்து போய் உடம்பிலிருந்து விழித்தது. உடம்பின் வழியாக உலகத்தைப் பார்த்தது.  &lt;br /&gt;             இப்போது உலகம் துவந்தமயமானது. நான், நீ என்ற பேதமுடையதானது. &lt;br /&gt;      &lt;br /&gt;                 உணர்வான நானுக்கும், உடம்புள்ள நானுக்கும் உள்ள வித்தியாசத்தை சொடுக்கு நேரத்தில் என் குருநாதர் எனக்குக் காண்பித்தார். மிக சுகமான இடத்தில் என்னை உட்கார வைத்தார். வெளிச்சத்தை என்னுள் இறக்கி அந்த வெளிச்சத்தால் அபிஷேகம்  செய்வித்தார். இது கல்யாணம். என் குருநாதரோடு எனக்குக் கல்யாணம். ஒரு குருவுக்கும், சீடனுக்கும் ஏற்பட்ட வாழ்வு பந்தம். பிரிக்க முடியாத உறவு. மறக்க முடியாத உறவு, பின்னிப் பிணைந்து தொடரும் உறவு.&lt;br /&gt;     &lt;br /&gt;             எல்லோரும் போக முடியாத இடத்திற்கு எளிதில் அணுக முடியாத இடத்திற்கு குருநாதர் எந்தத் தவமுமில்லாத என்னைத் தூக்கிக் கொண்டு போய் இறக்கினார். அருளை அள்ளி எனக்குள் திணித்தார். &lt;br /&gt; “கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா&lt;br /&gt;  நாம் கையோடு கை சேர்க்க சொல்லலாமா&lt;br /&gt;   செல்லாத இடம் நோக்கி செல்லலாமா&lt;br /&gt;  சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா”&lt;br /&gt;இப்போது சாதாரண சினிமா பாட்டு வேறு அர்த்தம் கொண்டது. ஒரு சீடனுக்கு பட்டாபிஷேகத்தை இந்தப் பாட்டின் மூலம் என் குருநாதர் நடத்தினார்.&lt;br /&gt; அதுவரை எதிரே சிரித்துக் கொண்டிருந்தவர்கள் மெளனமாய், திகைப்பாய் முகம் இறுகிக் கிடந்தார்கள். அப்போது என்னுள் ஏற்பட்ட ஆனந்தத்தை நிறுத்தி நான் சிரிக்கத் துவங்கினேன். எனக்கு எவரோடும் சண்டையில்லை. எந்தப் பிணக்குமில்லை. நான், நீ எல்லாம் ஒன்று. நீயே நான், நானே நீ என்று சிரிக்கத் துவங்கினேன். உயர்ந்த யோகியும் ஞானவானுமான ஒரு குருநாதர் மிகச் சாதாரணமான ஒரு சீடனை உன்னத நிலைக்குக் கொண்டு வந்ததற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம்.&lt;br /&gt;  &lt;br /&gt;             குருவிடம் பணிவோடு இருந்தால் போதும், வெட்கமின்றி இருந்தால் போதும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதிருந்தால் போதும். எனக்குள் எந்தப் பாட்டுமில்லையே என்று நான் பொய் பேசவில்லை. உள்ளே என்ன இருந்ததோ, அதை கொட்டினேன். அந்த உண்மைக்குப் பணிவு முக்கியம். குருநாதர் மீது நம்பிக்கை முக்கியம். தெளிவில்லாத போது வார்த்தைகள் தடிமனாக வரும். அலட்டலாக வரும். அது எந்த உறவையும் பங்கப்படுத்தும். &lt;br /&gt;  &lt;br /&gt;            ஒரு குருநாதரை பணிவற்ற எவரும் அணுகவே முடியாது. அப்படியும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.&lt;br /&gt;  &lt;br /&gt;             ஒரு மத்திம வயது பெண்மணி குருநாதர் தாடியை நீவிவிட்டு கொள்வதைப் பார்த்து “வெள்ளை வெளேரென்றிருக்கின்ற தாடி” என்று சொல்ல, குருநாதர், “ஆம்” என்று தலையாட்டினார். “நீங்க டை அடிச்சுக்குங்க பகவான், கருப்பு டை, தலைக்கு, தாடிக்கெல்லாம் அடிச்சுக்குங்க” என்று சொல்ல, சட்டென்று குருநாதர் அந்தப் பெண்மணியையே உற்றுப் பார்த்தார். அந்தப் பெண்மணிக்குத் தான் சொன்ன விஷயத்தின் அபத்தம் தெரியவில்லை. இளித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;          “அம்மா எழுந்திரு, இந்தா என்னுடைய பிரசாதம்” என்று சில பழங்களைக் கொடுத்தார்.&lt;br /&gt;         “இந்தப் பிச்சைக்காரன் உன்னை வழியனுப்பிகிறேன், போய் வா” என்று சொன்னார். ‘என்ன’ என்று அந்த அம்மாள் வியப்போடு பார்த்தாள். “போய் வா” என்று மறுபடியும் சொல்ல, அந்த அம்மாள் மெல்ல நகர்ந்தார். திரும்பி வாசற்படியிலிருந்து குருநாதரைப் பார்த்தார். &lt;br /&gt;         “இனிமேல் இங்கு வரவேண்டாம். இந்தப் பிச்சைக்காரனோடு உனக்கு எந்த தொடர்புமில்லை. ஏனெனில் நீ சொல்லும்படி என்னுடைய தலைமுடிக்கு சாயம் ஏற்றிக் கொள்ளப் போவதில்லை, அது அப்படித் தான் இருக்கும். எனவே நீ வரவேண்டிய அவசியமில்லை” என்று அவளைப் புறக்கணித்தார்.&lt;br /&gt; ஒரு வாக்கியம் தப்பாகப் போனது. அந்த அம்மாவின் வாழ்க்கைத் திசை மாறிப் போனது. மகத்தான குருவின் நட்பை தேவையற்ற வாக்கியத்தின் மூலம் அந்த அம்மாள் இழந்தார். கண்ணாடிப் பாத்திரம் கை நழுவி சிதறியது போல ஒரு நல்ல நட்பு சிதறிப் போனது. குருவிடம் பொய் சொல்ல முடியாது. பணிவு உள்ளது போல் நடிக்க முடியாது. உள்ளுக்குள்ளே இருப்பதை நோண்டி வெளியே வீசியெறிய குருவிற்குத் தெரியும். அகந்தைக் கிழங்கை கிண்டி தூக்கி வெளியே “இது நான் நீ” என்று அவரால் காண்பிக்க முடியும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;          என் மகள் ஸ்ரீகெளரி நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பிளஸ் டூ தேறினார். அவருக்கு டாக்டர் சீட் கேட்டு சில முக்கியஸ்தரிடம் சொல்லி வைத்திருந்தேன், தமிழ்நாட்டில் உயர்பதவியிலிருப்பவர்கள், “உங்கள் மகளுக்கில்லாததா, நிச்சயம் தருகிறேன்” என்று சொன்னார். மதிப்பெண்களைக் காண்பித்து இந்த விஷயத்தை குருநாதரிடம் தெரிவித்தேன். குருநாதர் மதிப்பெண்களைப் பலமுறை தடவிக் கொடுத்தார். என் மகளிடம் திருப்பிக் கொடுத்தார்.&lt;br /&gt; “ஸ்ரீகெளரி நீ டாக்டராக விரும்புகிறாயா” என்று கேட்டார்.&lt;br /&gt; உடனே என் மகள் “உங்கள் விருப்பம் அதுவானால் என் விருப்பமும் அதுவே” என்று சொன்னாள். &lt;br /&gt;              “உன்னுடைய விருப்பமென்ன கெளரி” என்று கேட்டார்.&lt;br /&gt;             “உங்களுடைய விருப்பம் தான் என்னுடைய விருப்பம் பகவான்.”&lt;br /&gt;             “இல்லை, உன் விருப்பத்தைச் சொல்” என்று பகவான் மறுபடியும் வற்புறுத்தினார்.&lt;br /&gt;            “எனக்கென்று விருப்பம் ஏதுமில்லை, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை” என்று தீர்மானமாக சொன்னார். அருகிலுள்ளவர்கள், “அப்படி கேட்காதே, டாக்டராக வேண்டுமென்று அவரை கேள், நிச்சயம் ஆகிவிடுவாய்” என்று தூண்டிவிட்டார்கள். ஆனால் ஸ்ரீகெளரி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;              “நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, நீங்கள் எனக்கு என்ன தருகிறீர்களோ அதுதான் என் வாழ்க்கை. உங்கள் சொல் மீறி, உங்கள் விருப்பம் மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். நான் முற்றிலும் என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன்” என்று சொல்ல, குருநாதர் கண்களில் கனிவு தோன்ற என் குழந்தையைப் பார்த்தார். கை வீசி ஆசிர்வதித்தார். &lt;br /&gt; &lt;br /&gt;             “கெளரி டாக்டராவதென்றால் மிகக் கடினம். வாழ்க்கையை ரசிக்க முடியாது. பாட்டுப் பாட முடியாது, வேளைக்கு சாப்பிட முடியாது, ஓய்வாக இருக்க முடியாது. இவைகளில்லாது போனால் கெளரி உன்னால் தாங்க முடியாது. எனவே நீ வேறு ஏதேனும் படி” என்று திசை திருப்பி விட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;              என் மகள் எம்.எஸ்ஸி பயோகெமிஸ்டரி முடித்து, முடித்த கல்லூரியிலேயே தலைமைப் பேராசிரியராகத் திகழ்ந்து, இப்போது திருமணமாகி ஷர்ஜாவில் தன் மகனோடும், கணவரோடும் சந்தோஷமாகக் குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது வேளைக்கு சாப்பிடுவதும், கணவனுக்கும், குழந்தைக்கும் உதவியாக இருப்பதும், சந்தோஷமாக நடைபெறுகின்றன. தெளிந்த நீரோட்டம் போல அவள் வாழ்க்கை இருக்கிறது. ஒரு டாக்டருக்குண்டான பரபரப்பு அவளிடமில்லை. அது பெரிய நிம்மதி என்பதை இப்போது என் மகள் உணருகிறாள். பணிவு என் குழந்தையிடம் இயல்பாக இருப்பதை பார்த்து நான் சந்தோஷமடைந்தேன். &lt;br /&gt; &lt;br /&gt;            நல்ல குரு ஒரு சந்தோஷம்; ஒரு வழிகாட்டி; ஒரு பாதுகாவலர்; நல்ல குரு கடவுளிடம் நம்மை கொண்டு போய் அலுங்காமல் சேர்ப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;         ஒரு குருவை இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்ற வைராக்கியம் தான் வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-7201566217260919010?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/7201566217260919010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=7201566217260919010' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7201566217260919010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7201566217260919010'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2011/01/blog-post.html' title='“கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா”'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/TSgKzadiM5I/AAAAAAAAAuA/EDQIJU_DJ7Q/s72-c/Picture%2B%252825%2529.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-465384221129800555</id><published>2010-09-27T21:36:00.000-07:00</published><updated>2010-09-28T01:20:53.782-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>பாலகுமாரனின்  ஸ்ரீ ரமண  மகரிஷி</title><content type='html'>'இறந்து போதல் என்றால் என்ன? &lt;br /&gt;&lt;br /&gt;            அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'&lt;br /&gt;&lt;br /&gt;               இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான். &lt;br /&gt;&lt;br /&gt;            ' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;                வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;             ' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து  பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;                    அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;                  மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              ' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                  மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.&lt;br /&gt;&lt;br /&gt;                    திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;                   தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;      ' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;         ' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;          ' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;         'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.&lt;br /&gt;&lt;br /&gt;              ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;           ' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா' &lt;br /&gt;&lt;br /&gt;     அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.&lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/TKFzWdzdngI/AAAAAAAAAts/1vR5niQnhsE/s1600/ramana.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 304px; height: 367px;" src="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/TKFzWdzdngI/AAAAAAAAAts/1vR5niQnhsE/s400/ramana.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521821447927733762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது.&lt;strong&gt; தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.&lt;/strong&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;             வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு &lt;strong&gt;ஸ்ரீ ரமண &lt;/strong&gt;&lt;strong&gt;மகரிஷி &lt;/strong&gt;என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TKF0r-3MKOI/AAAAAAAAAt0/nKwV-aGkheg/s1600/Picture+(164).jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 275px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TKF0r-3MKOI/AAAAAAAAAt0/nKwV-aGkheg/s400/Picture+(164).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521822917090617570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;            ............&lt;strong&gt;பாலகுமாரனின் எழுத்தில் சக்தி விகடனில் வெளிவந்து    கொண்டிருக்கும் ஆன்மீகத் தொடர்&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-465384221129800555?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/465384221129800555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=465384221129800555' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/465384221129800555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/465384221129800555'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/blog-post_7310.html' title='பாலகுமாரனின்  ஸ்ரீ ரமண  மகரிஷி'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/TKFzWdzdngI/AAAAAAAAAts/1vR5niQnhsE/s72-c/ramana.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-8739610790357655585</id><published>2010-09-27T21:01:00.000-07:00</published><updated>2010-09-27T21:09:03.974-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>கற்றுக்கொண்டால் குற்றமில்லை</title><content type='html'>“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”.&lt;br /&gt;&lt;br /&gt;       உடம்பை, மூளையை முறுக்கி தூக்கத்தில் எழுந்து முற்றிலும் விழித்து, படுக்கையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பழக்கம். தடாரென்று எழுந்து கொள்வது தவறு. இன்னும் கொஞ்சம் தூங்குகிறேன் என்று போர்வைக்குள் சுருண்டு கொள்வதும் முட்டாள்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;       அநேகமாய் நம் எல்லோர் மூளைக்குள்ளும் ஒரு அலாரம் டைம்பீஸ் இருக்கிறது, இத்தனை மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தால், அத்தனை மணிக்கு விழித்துக் கொள்கிறது. மூளையைப் பற்றி ஆராய்ந்தெல்லாம் நான் இதைச் சொல்லவில்லை, என் பழக்கத்தை, பிறர் பழக்கத்தை உன்னித்து கவனித்துவிட்டு எழுதுகிறேன். விழிப்பு வந்து தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டதும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       நுரையீரல் நிறைய மூச்சு இழுத்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்திருக்க வேண்டும். ‘என் வாழ்க்கையின் மிக சந்தோஷமான நேரம் இந்த நேரம்தான். மறுபடியும் ஒரு நாள் புலர்ந்து விட்டது. இன்னொருநாள் நான் உயிரோடு இருக்கிறேன். பொழுது புலர்ந்து யாம் செய்த தவத்தால்’. ‘உயிர் வாழ்வது சந்தோஷம் எனில், இது சந்தோஷத்தின் ஆரம்பம்’ இப்படி வார்த்தைகள் உள்ளே தோன்றாதே தவிர, இவ்விதமாய் ஓர் உணர்வு இருக்கும் இன்றைய நாளின் போராட்டம் என்னென்ன என்று மனசுக்குள் ஒரு கணக்கு வரும். செய்ய வேண்டிய முக்கியமான வேலையின் பட்டியல் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;        வேலையின் பரபரப்பு இல்லாமல் வேலையின் முடிவு பற்றி எந்த ஆவேசமும் இல்லாமல் வேலை நல்லபடி முடிக்க வேண்டுமே என்ற கவலை மட்டும் வரும். யாரெல்லாம் கடுமையாக நடந்து கொள்ளப் போகிறார்கள்.. யார் எல்லாம் எதிரியாக என்னை நினைக்கப் போகிறார்கள் என்கிற யோசனை வரும் போது அவர்களை எப்படி நான் நிதானமாய் அணுகுவது என்று யோசிக்க அந்த நேரம் உகந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;          அநேகமாய் ஒரு நாளின் மனோ நிலையை அந்த நேரமே தீர்மானிக்கும் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ, வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோ நிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது. வெளியே இதை நாம் காட்டிக் கொள்ளவில்லை எனினும் உள்ளுக்குள்ளே இந்த உணர்வு தூக்கலாக இருக்கிறது. இரண்டு மூன்று நிமிடம் படுக்கையில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு பிறகு மெல்ல எழுந்து பின் பக்கம் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;           காலைக் கடன்கள் கழிப்பது பற்றியெல்லாம் நான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் போவதில்லை மருத்துவ ரீதியான கட்டுரை அல்ல இது. எனக்குத் தெரிந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சி. உங்களுக்குப் பிடித்தமான ஏதோ ஒரு பானம் பருகி பேப்பரோடு உட்கார்ந்த பிறகு அதிகபட்சமாக கால் மணி நேரம் தினசரியோடு செலவு செய்யுங்கள். பிறகு சட்டென்று குளிக்கப் போய்விடுங்கள். எழுந்து அரை மணிக்குள் குளித்துவிடுவது உத்தமம். எழுந்தவுடனேயே குளிப்பதில் ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது. அதிக நேரம் தள்ளிப் போடுவதில் ஒரு சோம்பேறித்தனம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;         குளிக்கும் தேவையை மனசு உணர்ந்த போது குளித்துவிடுவது நல்லது. தூக்கத்திற்கு பிறகு குளிர்ச்சியான மனம். குளியலுக்குப் பிறகு குளிர்ச்சியான உடம்பு. கண்மூடி அமைதியாய் தியானம் செய்யத் தகுந்த நேரம் இது. பல்வேறு கட்டுரைகளில் இதைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறேன், ஆயினும் இந்தக் கட்டுரையில் விரிவாய் இதைப் பற்றி எழுத விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;           தியானம் என்பது வழிபாட்டு முறை அல்ல மதங்களின் அபிப்பிராயம் அல்ல அல்லது ஒருவிதமான மனப் பயிற்சியோ, மூளையின் வலியை அதிகப்படுத்தும் காரியமோ அல்ல. தியானம் ஒருவித மனநிலை. அன்பும் பணிவும் கலந்த ஒரு மனநிலை. ஒரு விளக்குச் சுடரை நோக்கி தியானம் செய்யுங்கள். நெற்றிக்கு நடுவே ஒரு புள்ளியை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அந்தப் புள்ளியிலேயே மனதைச் செலுத்துங்கள் என்ற விதமாக எல்லாம் தியானம் சொல்லித் தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;            இப்படி சொல்லித் தருவதில் எந்தத் தவறும் இல்லை. பணிவு கலந்த ஒரு வணக்கம் ஏற்படுவதற்காக, இவை உபாயம் கொண்டவையாக சொல்லப்பட்டிருக்கின்றன. குழி தோண்டுவதற்காக மண்வெட்டி பயன்படும். மண்வெட்டி இருக்கிறதே என்று யாரும் குழி தோண்டுவது இல்லை. பணிவு கலந்த வணக்கம் என்பதை மறந்து விட்டு திசை திருப்புவதில் பயன் ஏதும் இல்லை. பணிவு கலந்த வணக்கம் அல்லது அமைதி எப்படி ஏற்படுகிறது என்பதை, ஏற்படவேண்டிய அவசியம் என்ன என்பதை பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-8739610790357655585?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/8739610790357655585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=8739610790357655585' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8739610790357655585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8739610790357655585'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/blog-post_27.html' title='கற்றுக்கொண்டால் குற்றமில்லை'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-1441871479274869877</id><published>2010-09-23T04:36:00.000-07:00</published><updated>2010-09-23T05:18:16.142-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>பாலகுமாரன் பேசுகிறார் - பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TJs9-Ed5lBI/AAAAAAAAAs8/dJbr2ztU_UI/s1600/bxp261628.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TJs9-Ed5lBI/AAAAAAAAAs8/dJbr2ztU_UI/s400/bxp261628.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520073904833008658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                    அந்த கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை, சொறிகல் என்ற பூராங்கல் இல்லை, மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும் போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;          இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி( Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர், தண்ணீரிலா, எண்ணெயிலா, நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை(Oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtFY2sT8pI/AAAAAAAAAtk/RGZM3P7TcE4/s1600/IMG_9129.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtFY2sT8pI/AAAAAAAAAtk/RGZM3P7TcE4/s400/IMG_9129.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520082061573223058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து, சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி, மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது, மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனைப் பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;         அத்தனைப் பேரும் ஆண்கள்தானா, கோவில் கட்டுவதில் பெண்களுக்கு பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறி விட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ.&lt;br /&gt;&lt;br /&gt;          இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா, ஆமெனில், என்ன வைத்தியம், எத்தனை பேருக்கு, எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி, பொன்னா, வெள்ளியா, செப்புகாசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா.&lt;br /&gt;&lt;br /&gt;             பாதுகாப்பு வீரர்கள் உண்டா, வேலை ஆட்களுக்குள் பிரச்சனையெனில், பஞ்சாயத்து உண்டா, என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா, அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtAWiVkHkI/AAAAAAAAAtE/yPwqNGcLtpw/s1600/edit+3steps.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 327px;" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtAWiVkHkI/AAAAAAAAAtE/yPwqNGcLtpw/s400/edit+3steps.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520076524191227458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரியதாய் விரிவடைகிறது. இது கோவிலா, வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;  முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப் பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிருந்து வந்திருக்கிறது. கிட்டதட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;  அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;  எப்படி மேலே போயிற்று, இத்தனை உயரம், விமானம் கட்ட கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும் மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருந்தும் போது விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; பிறகு...?&lt;br /&gt;&lt;br /&gt;   மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போது இருக்கிறது. “சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து” என்று சொல்கின்றனரே..வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம், கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; அப்படியானால் சாரப்பள்ளம். &lt;br /&gt;&lt;br /&gt;                 சாரம் போட, அதாவது மண் பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி? உழைப்பாளிகள் எங்கிருந்து? வேறெதற்கு போர்?&lt;br /&gt;&lt;br /&gt; பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழைச் சாளுக்கியம், மேலைச் சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா; இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர்,(வெகு காலம் கழித்து ஜெயித்தனர்).&lt;br /&gt;&lt;br /&gt;  எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;   கல் செதுக்க விதவிதமான சிற்பிகள், மேல் பகுதி நீக்க சிலர், தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர், அளவு பார்த்து அடுக்க சில்ர, கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;        உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரியகல்தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க  காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;        எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. ‘சாவா மூவா பேராடுகள்’ என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. தொன்னூற்றாறு ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;            நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கல் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக்கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் உற்றுபவர் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;                கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன, துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்க்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர்.(Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்த்தால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள இரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;           கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார், யார். அவருக்கென்று வீடு ஓதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. ‘இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் ‘என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;  வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்களும் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtEOJDV_BI/AAAAAAAAAtc/Awe2bGP9lSI/s1600/IMG_9263.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtEOJDV_BI/AAAAAAAAAtc/Awe2bGP9lSI/s400/IMG_9263.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520080778011474962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           முதல் தானம் ராஜராஜனுடையது.&lt;br /&gt; ‘&lt;strong&gt;நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்&lt;/strong&gt;’ என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடது பக்க பெரிய கொண்டையோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான,மிக அழகான கறுப்பு, இச்வப்பு, மாநிறம் கொண்ட தேவரடியர்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள், ஒன்று போல் ஒன்று இல்லை, உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாக்த் தெரியும் ஒரு உலோகம்.&lt;br /&gt;&lt;br /&gt;  மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா, கலைஞர்கள் செய்திறனா. இல்லை பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில் சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtCj8Mv6cI/AAAAAAAAAtM/68LcqdK1gug/s1600/IMG_9104.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtCj8Mv6cI/AAAAAAAAAtM/68LcqdK1gug/s400/IMG_9104.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520078953495128514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  கண்ணப்பநாயனார். பூசலார், கண்டேஸ்வரர், மன்மத தகனம் என்று முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;  இது என்ன வித கோவில்.&lt;br /&gt;&lt;br /&gt;               விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகமவிதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வான்ம ஒரு சிவலிங்கம். விமாத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். &lt;br /&gt;&lt;br /&gt;                இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், ‘தென்திசை மேரு’ உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல், கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டு வந்து விட்ட உடையார் பெரிய உடையார். இது போதுமா கடவுளைச் சொல்ல,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtDOmAp3HI/AAAAAAAAAtU/n_yJyWCEUto/s1600/IMG_9105.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 267px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/TJtDOmAp3HI/AAAAAAAAAtU/n_yJyWCEUto/s400/IMG_9105.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5520079686273195122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;             ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் காட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் காலுக்கு அருகில் கதை, கதையைச் சுற்றி மலைப் பாம்பு, மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர். அவர் கை ‘விஸ்மயம்’ என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். &lt;br /&gt;&lt;br /&gt;  அதுவும் விஸ்வரூபம். இன்றளவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-1441871479274869877?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/1441871479274869877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=1441871479274869877' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/1441871479274869877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/1441871479274869877'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/blog-post_23.html' title='பாலகுமாரன் பேசுகிறார் - பிரகதீஸ்வரம் - ஒரு விஸ்வரூபம்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TJs9-Ed5lBI/AAAAAAAAAs8/dJbr2ztU_UI/s72-c/bxp261628.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-2601125110807686372</id><published>2010-09-07T19:12:00.000-07:00</published><updated>2010-09-07T19:24:57.761-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>சூரியனோடு சில நாட்கள் -7</title><content type='html'>சூரியனோடு சில நாட்கள் என்று இந்த கட்டுரை எழுதும்போது டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு நடிகருடைய செல்வாக்கு எவ்வளவு உன்னதமாக இருந்தாலும், இயக்குனர் பலமாக இல்லையேல், திறமையான டெக்னீஷியனாகப் பரிமக்கவில்லையெனில் ஒரு திரைப்படம் சிறப்பான முறையில் திரைப்படம் வெளிவராவிட்டால் மிக உன்னதமான நடிகரின் நிலை கூட ஆட்டம் காணும். நல்ல டைரக்டர்களுக்காக நடிகர்கள் ஏங்குவது திரைப்பட நடிகர்களின் இயல்பு.&lt;br /&gt;&lt;br /&gt;                   நாலு பேரிடம் வேலை வாங்கி கோர்ப்பதுதான் டைரக்டரின் வேலை என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கு வேண்டியதை மற்ற கலைஞர்களிடமிருந்து வாங்கிக் கொள்ளும் சாமர்த்தியம் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். ஐந்து டியூனில் எந்த டியூன் பிடிக்கிறது என்றால் இந்த ரெண்டு டியூன் என்று குழந்தை கூட சொல்லி விடும். அந்த ரெண்டு டியூனில் எது நல்ல டியூன் என்று சொல்ல சிறிதளவு புத்தி போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;                   சங்கீதமாவது சினிமாப் பாடல்கள் மூலம் காதுக்குள் புகுந்த விஷயம். ஆனால், நடனம் இன்னும் கடினம். ஒரு படத்தின் வெற்றியை இன்றைய காலகட்டத்தில் நடனமும் சேர்ந்து தீர்மானிக்கிறது. சமீபத்தில் பல படங்களின் வெற்றிக்கு நடனம் தெரிந்த நடிகர்களின் திறமையே காரணமாக இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;                  இன்றைய டைரக்டர்களிடையே சுரேஷ்கிருஷ்ணா வித்தியாசமானவர். அமைதியான திறமைசாலி. திரைக்கதையை பாட்ஷ படத்திற்காக உருவாக்கி ரஜினிகாந்த்தோடு விவாதித்து பிறகு என்னிடம் சொல்வார். நான் அந்தக் காட்சியை மனதில் வாங்கிக் கொண்டு வசனங்களாக்கி அவருக்கு தருவேன். அது மறுபடி ரஜினிகாந்திற்கு போகும். எங்களையெல்லாம் விட மிக உயரத்தில் ரஜினிகாந்த் இருந்தாலும் திரையுலக சம்பிரதாயங்களை அவர் மீறுவதில்லை. டைரக்டரே படப்பிடிப்புத் தளத்தின் முதன்மையானவர் என்பதை அவர் மறுத்ததேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;             சுரேஷ்..சுரேஷ் என்று ஐந்து நிமிடத்துக்கொரு முறை அவர் பரபரப்பதே இதற்கு சாட்சி. டைரக்டர் என்ற மரியாதை மட்டுமல்லாது மிக சுகமான ஒரு வாஞ்சையும் அதில் இருக்கும். பாட்ஷ திரைப்படத்தில் மாணிக்பாட்ஷவிற்கும் அவருடைய தகப்பனான விஜயகுமாருக்கும் எந்தவிதமான உறவு சரி என்பதில் விவாதம் வந்தது. சுமூகமான உறவா, ச்சீபோ..என்று சீறும் உறவா என்று தீர்மானிப்பதில் பிரச்சனை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;            ‘வளர்க்க வேண்டிய விதத்துல நீ வளர்த்திருந்தா இந்த மாணிக்கம் மாணிக்பாட்ஷவாயிருக்க  மாட்டான். திருடன் கிட்ட வேலைக்கு சேர்ந்தவனுக்கு, பெத்த புள்ளையபத்தி என்னா அக்கறை இருக்கும்.. வீட்ல இருக்கற குழந்தைங்களுக்கு வயத்துக்கு சோறு போட்டா மட்டும் அவன் அப்பனாயிட முடியாது. அவங்க வாழ்க்கை நல்லபடியா அமையணும்னு யோசிக்கிற வந்தான் அப்பனாக முடியும். அன்பு காட்டறவந்தான் அதிகாரம் பண்ணலாம். நீ அப்பாங்கறா ஒரே காரணத்துக்காக என்மேல் அதிகாரம் காட்டற, இதை நான் ஒத்துக்க முடியாது..’ என்கிற விதமாய் காட்சி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;              இந்தக் காட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கொண்ட சுரேஷ் படப்பிடிப்பு நேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போது சொன்னீர்களே.. இப்படி இருக்கக்கூடாது...’ என்று ரஜினிகாந்திடம் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;            எனக்கு இந்த வாதம் புரியவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் அதற்கேற்ற விதமாய் எழுதித் தரலாம். அல்லது பல்வேறு விதமாக யோசித்துப் பாருங்கள் என்றும் சொல்லலாம். சுரேஷ் சொல்வது சிக்கலான விஷயமாகத் தோன்றியது. ரஜினிகாந்த் அவர்களுக்கு தந்தையைக் கடுமையாகக் குற்றஞ்சாட்டுவதே சரி என்று பட்டது. சுரேஷ் அதைத் தீவிரமாக மறுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;         "உண்மையிலேயே மாணிக்கம் அப்பா கெட்டவரா இருந்தாகூட மாணிக்கம் அவரைக் கடுமையாகப் பேசமாட்டான். முதல் காரணம் விஜயகுமார் நிர்பந்தத்தால் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்.. அதுவும் குடும்பத்திற்காக. இரண்டாவது ரஜினிகாந்த் என்ற நடிகர் தகப்பனை எதிர்த்துப் பேசக்கூடாது. அது மோசமான முன்னுதாரணமாய் அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;                மூன்றாவது மாணிக்பாட்ஷவிற்கு வில்லன் மீது கோபமேயொழிய வில்லனிடம் வேலை செய்யும் தகப்பனிடம் எந்தக் கோபமும் இல்லை. நான்காவது இரண்டு துருவங்களாக தந்தையும் மகனும் சந்திக்கும் போது இப்படி பிரிந்து விட்டோமே என்கிற வேதனைத் தான் இருக்குமே தவிர குற்றம் சாட்டல் இருக்காது. என்ன விதமான நெகிழ்வு என்பதே என் கேள்வி" என்று சுரேஷ்கிருஷ்ணா சொன்னார். படப்பிடிப்பு தளத்தில் அது வேகமான விவாதமாக வளர்ந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TIbzgSsd69I/AAAAAAAAAss/Sh15Z7Th8os/s1600/Picture+229.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TIbzgSsd69I/AAAAAAAAAss/Sh15Z7Th8os/s400/Picture+229.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514362529861462994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 ரஜினிகாந்த் முரட்டுத்தனமாய் இதுதான் காட்சி என்று சொல்லியிருக்கலாம். சொல்லுகின்ற செல்வாக்கு அவரிடம் நிச்சயம் உண்டு. ரஜினிகாந்த் சட்டென்று விட்டுக் கொடுத்தார். “இந்தக் காட்சி எப்படியும் இருக்கலாம். சுரேஷ் உன் லாஜிக்கும் சரி. என்னுடைய லாஜிக்கும் சரி. ஆனால உன் லாஜிக்கின்படியே இருக்கட்டும்.” உதவி டைரக்டர்களுக்கு முன்னால், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு முன்னால், நடிகர் விஜயகுமாருக்கும், எனக்கும் முன்னால் மிகக் சுலபமாக அவர் விட்டுக் கொடுத்தார். சுரேஷ் கிருஷ்ணாவின் மதிப்பு அங்கே சட்டென்று உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;                   இப்படி சட்டென்று விட்டுக் கொடுத்து விட்டீர்களே என்று வேறு ஒருவர் எடுத்துக்காட்டி கேட்டபோது, “டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்பதுதான் நடிகருக்கு நல்லது. சுரேஷ்கிருஷ்ணா என் மீது மிகுந்த மரியாதை உடையவர். அனுசரித்து போகக் கூடியவர். அதே சமயம் அவருக்கு சரி என்று தோன்றக்கூடியதைத் தயங்காமல் சொல்லக் கூடியவர். காரணமில்லாமல் சுரேஷ்கிருஷ்ணா வாதாட மாட்டார். அவர் மனதில் இந்தக் காட்சி பற்றி ஒரு தெளிவு இருக்கிறது. அதை நான் ஏன் கெடுக்க வேண்டும்”.&lt;br /&gt;&lt;br /&gt;                    இந்த இடத்தில் ரஜினிகாந்த் சொன்னது ஒன்று ஞாபகம் வந்தது. “என்னை மதித்து, என் சொல்,பேச்சை பலர் கேட்கிறார்கள் , கேட்கிறார்கள் என்பதற்காகவே நான் அதிகம் ஆடி விடக் கூடாது. பாட்ஷ நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறை சுரேஷ்கிருஷ்ணாவுக்கும் உண்டு. அந்த அக்கறையை நான் குறைவாக மதிப்பிட்டு விடக்கூடாது. சினிமா கூட்டு முயற்சி, இது டீம் ஓர்க் என்பதை எப்போதும் எல்லோரும் ஞாபகம் வைத்து கொள்ளவேண்டும். இன்று பிரபலமாகி விட்டேன் என்பதாலேயே எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து விடக்கூடாது”.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-2601125110807686372?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/2601125110807686372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=2601125110807686372' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/2601125110807686372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/2601125110807686372'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/7.html' title='சூரியனோடு சில நாட்கள் -7'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TIbzgSsd69I/AAAAAAAAAss/Sh15Z7Th8os/s72-c/Picture+229.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-3423125110356951347</id><published>2010-09-07T18:32:00.000-07:00</published><updated>2010-09-07T18:49:08.894-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி – பதில்'/><title type='text'>சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்</title><content type='html'>&lt;strong&gt;கண்ணும் காதுமில்லாதது காதல் என்று ஒன்றுமில்லாத காதலுக்காக உயிரை விடுகிறார்களே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் காதலித்ததில்லை.  காதல் ஒன்றுமில்லாதது என்று எவரேனும் சொன்னால் அவரை விட முட்டாள் எவரும் இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம்.  தன்னை மட்டும் யோசித்துக் கொண்டிருந்த மனிதரை ஒருமுகப்படுத்தி, தன்னைப் போல் இன்னொருவரையும் யோசிக்க வைக்கின்ற ஒரு முயற்சி தான் காதல்.  இதற்கு காரணங்கள் பல்வேறாக இருந்தாலும், இந்த முயற்சியில் பல பேர் கனிந்து விடுகிறார்கள்.  நல்ல மலர்ச்சியை அடைந்து விடுகிறார்கள். காதல் உண்மையாக இருக்க வேண்டும்.  வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் தந்திரமாக  இருப்பது போல காதலில் தந்திரமாக இருப்பவன் தான் உயிரை விடுகிறான்.  ஏனெனில் ஏமாற்ற ஆசைப்படுகிறவன் தான் ஏமாறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐயா, உங்களுடைய பலம் என்று எதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவமானத்திற்கு அஞ்சாதது.  எதையும் பரீட்சித்து பார்ப்பது.  வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலையில்லை.  எல்லாமுமே ஒரு அனுபவம் என்று முழு மனதாக இறங்கி விடுவது.  வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல அனுபவங்களும், மிக மோசமான அனுபவங்களும் தான் என்னை நன்றாக பக்குவப்படுத்தியிருக்கின்றன. இல்லையெனில் தொட்டாச்சிணுங்கியாக இருந்திருப்பேன்.  என்னுடைய கதைகள் பலதும் உண்மைச்செறிவு அதிகமாக இருப்பதற்கு காரணம் என் அனுபவங்கள்.  நான் வெறும் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு கயிறு திரிப்பவன் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TIbrT8prnrI/AAAAAAAAAsk/N1AYZHbkTr0/s1600/IMG_3634.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TIbrT8prnrI/AAAAAAAAAsk/N1AYZHbkTr0/s400/IMG_3634.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514353521692745394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; இவ்வளவு ஆன்மீகம் எழுதுகிறீர்களே, நீங்கள் துறவியாகி விடுவீர்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அது நேருமாயின் நேரட்டும். துறவியாக வேண்டும் என்கிற ஆசை ஏதுமில்லை. ஆகக்கூடாது என்கிற பிடிவாதமும் இல்லை. என் அபிப்ராயத்தில் அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு மூலையில் உட்கார்ந்து வெறுமே மந்திர ஜபம் செய்தால் சிறந்துவிட முடியுமா. இது மூடநம்பிக்கையாக உங்களுக்குப் படவில்லையா. இதை எப்படி ஆதரித்து கதை எழுதுகிறீர்கள்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பறக்க முடியுமா என்று மனிதன் யோசித்து, யோசித்து இடையறாது பல நூற்றாண்டுகள் முயற்சி செய்து இப்பொழுது வானம் முழுவதும் அவன் ஆட்சி செய்கிறான். பூமிதாண்டியும் பல கிரகங்களில் போய் கால் வைக்கிறான். முடியுமா என்று கேட்கிறபோதே முடியும் என்கிற நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் அவசியம். மந்திரஜபம் என்ன செய்யும் என்று மந்திரஜபம் செய்துவிட்டு பேசவேண்டும். வெறுமே எல்லாம் தெரிந்தது போல அலட்டக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காமத்தை ஜெயிப்பது எப்படி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஜெயிக்க வேண்டும். தட்டிக் கொடுத்து அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். வேறு எங்கும் தவறாகப் போய்விடாதே என்று பிரியமாய் அதை உன்னித்து கவனித்தபடி இருக்க வேண்டும். காமத்தை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை. உண்ணுதல்போலும், உறங்குதல்போலும் அது சாதாரணமானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-3423125110356951347?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/3423125110356951347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=3423125110356951347' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3423125110356951347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3423125110356951347'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/09/blog-post.html' title='சில கேள்விகள் - பாலகுமாரன் பதில்கள்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/TIbrT8prnrI/AAAAAAAAAsk/N1AYZHbkTr0/s72-c/IMG_3634.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-3441583840395733884</id><published>2010-05-04T17:22:00.000-07:00</published><updated>2010-05-04T17:32:16.980-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சூரியனோடு சில நாட்கள் - 6 - பாலகுமாரன் பேசுகிறார்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/S-C8cnoDAuI/AAAAAAAAAsc/OuAZyj0HxKc/s1600/scan0008.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 285px;" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/S-C8cnoDAuI/AAAAAAAAAsc/OuAZyj0HxKc/s400/scan0008.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467577147487093474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; நல்லவர்கள் மூலம் நல்ல விஷயங்கள், நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால் நிச்சயம் நடந்தே தீரும். பலபேர் சொல்லியும் நிறுத்த முடியாத என் புகை பிடிக்கும் பழக்கம் ரஜினிகாந்த் கவலைப்பட்ட மூன்று நாளில் நின்று போனதை நீங்கள் என்னவிதமாய் எடுத்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. ரஜினிகாந்தின் நல்ல மனம்தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    கிட்டத்தட்ட பதினெட்டு வருடப் பழக்கம் அவரோடு எனக்கு உண்டு. எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் அவர் சிகரெட் நீட்ட, வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அதன் தொடர்ச்சியாய் என் சிகரெட்டுக்குத் தாவுவது உடனே அங்கு நடக்கும். அப்படி சந்தித்தபோது கூட ஒருமுறைகூட ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் பழக்கம் பற்றி கேட்டதேயில்லை. எனக்குத் தெரிந்த சில திரையுலகப் பிரமுகர்கள் உபதேசம் செய்ய ஆரம்பித்தால் சீக்கிரத்தில் ஓயமாட்டார்கள். பிறர் அந்தரங்கம் அறிவதில் ஆவல் உள்ளவர்களாய், அவர்கள் வாயைக் கிண்டி வம்புக்கு இழுத்து, அவர் பலவீனங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, அவர் பலவீனங்களை நீக்குவது எப்படி என்று அவருக்கே அறிவுரை சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    “குடிங்க, வேணாம்னு சொல்லலை, ஆனா ஜாக்கிரதை” என்று மிகக் கபடமாய் பேசுவார்கள். அதே சமயம் வெளியே போய் “அந்தாளா, பெரிய குடிகாரன்”. என்று வதந்தி பரப்புவார்கள். என்னிடமிருந்து ஓரே கெட்ட பழக்கமான சிகரெட் பற்றி சில பிரமுகர்கள் அதிகம் பேசி கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சிகரெட்டை விட கொடுமையான பழக்கங்கள் அவர்களுக்கு இருப்பதை நான் அறிவேன். நான் அறிய ரஜினிகாந்த் அறிவுரை சொல்வதேயில்லை. அதே சமயம் பிறருக்கு நல்ல வாழ்க்கை அமைவதிலும் அக்கறை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    டைரக்டர் ஷங்கருக்கு திருமணம் என்று நான் சொன்னதும் அப்படியா என்று மிகவும் சந்தோஷப்பட்டார். “யாரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். சினிமாவிலிருக்கும் பெண்ணா”. “இல்லை மணமகள் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவர். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்’.&lt;br /&gt;&lt;br /&gt;    “நல்லது.”-சட்டென்று கைகூப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;    “ஏன், சினிமாவிலிருக்கும் பெண்களைத் திருமணம் செய்வது பற்றி உங்களுக்கு வேறேதும் அபிப்பிராயம் இருக்கிறதா”.&lt;br /&gt;&lt;br /&gt;   “தவறாக எந்த அபிப்பிராயமும் இல்லை. புருஷன் மனைவிக்கு நடுவே மூன்றாவது ஆள் நுழையக்கூடாது. சினிமாவில் நடிக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் மூன்றாவது மனிதர் நுழைய வாய்ப்பிருக்கிறது. அவரைப் பற்றி பொய் சொல்லவோ, புறங்கூறவோ சில சமயம் ஆட்கள் முன் வரலாம். சினிமாவுக்கு அப்பால் உள்ள பெண்கள் எனில் இவை இருக்காது. வாய்ப்பு மிக மிக அரிது. வாழ்க்கையில் துவக்கம் பிரச்சனையே இல்லாது இருக்க வேண்டும் என்ற கவலையில் சொன்னேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;                   இதுதான் ரஜினிகாந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;    கனிந்த அக்கறை. கண்ணியமான விசாரணை. எங்கு கனிவான அக்கறை இருக்கிறதோ, இந்தக் கனிவான அக்கறை எப்போது ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்கிறதோ, அப்போது ஒரு பிரச்சனையை அணுகவும் தெரிந்து விடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;  ‘பாட்ஷா’ படப்பிடிப்பு முடியும் தருவாயில், ஒரு குறிப்பிட்ட நடிகைக்கு படக்கம்பெனி காசு தரவில்லை என்று தெரிந்தது. அன்று மாலைக்குள் தருவதாகப் பேச்சு. என்ன காரணமோ வரவில்லை. ஏன் பணம் வரவில்லை என்றதற்கு, தயாரிப்பு நிர்வாகிகளும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. அந்த நடிகை மேக்கப் ரூமிலமர்ந்து கொண்டு செட்டுக்கு வர மறுத்துவிட்டார். செட்டில் முழு உடைகளுடன் ஐம்பதுக்கு மேற்பட்ட நடனப் பெண்களுடன் புகைக்கும், வெப்பத்துக்கும் நடுவே ரஜினிகாந்த் நடன அசைவுகளைப் பழகிக் கொண்டிருந்தார். நடிகை தளத்திற்கு வரமறுக்கும் செய்தி சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    இனி நடிகை வந்தால்தான் அசைவுகள்  பழக முடியும் என்கிற நிலை. கிட்டதட்ட ஒரு மணிநேரம் ரஜினிகாந்த் பொறுமையாக இருந்தார். தயாரிப்பு நிர்வாகிகள் தாமதத்துக்கான காரணங்கள் கூறி, படப்பிடிப்பு முடிவதற்குள் அன்று இரவுக்குள் பணம் வந்துவிடும் என்று சொன்னார்கள். நடிகை நம்பவில்லை. நம்ப முடியாதபடி பயம். வேறு எவரோ செய்த சில்மிஷம். வேறு எந்த நடிகராக இருந்தாலும் இதுதான் சாக்கு என்று கிளம்பிப் போய் விடுவார்கள். எக்கேடாவது கெட்டுப் போங்கள் என்று நகர்ந்து விடுவார்கள் அல்லது விஷயத்தைப் பெரிதாக்குவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;    ரஜினிகாந்த் டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணாவோடு பேசினார். அன்றைய ஷுட்டிங் தடைபடுவதால் உண்டான நஷ்டத்தையும், படம் வெளிவருவது தாமதமாவதால் உண்டாகும் கஷ்டத்தையும் தெரிந்து கொண்டார். டைரக்டரை அழைத்துக் கொண்டு போய் அந்த நடிகையிடம் நேரே பேசினார். பத்தாவது நிமிடத்தில் நடிகை படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட, மிக வேகமாக படப்பிடிப்பு வேலை நடந்தது. வந்து  ஆடத்துவங்கியதும் அரை மணி நேரத்தில் நடிகை கேட்ட காசும் வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    ‘வேலை நேரத்தில் காசைக் கொடுத்து கவனத்தைக் கலைப்பானேன். வேலை முடிந்து போகும்போது தரலாம் என்றிருந்தோம். அதற்குள், நடிகை அவசரப்பட்டுவிட்டார்’ என்று தயாரிப்பு தரப்பில் வருத்தப்பட்டார்கள். இந்த சமாதனங்களை ரஜினிகாந்த் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. ‘வேலை நிற்கவில்லை. நடக்கிறது. அதுதான் முக்கியம்’ என்று பரபரப்பாக இயங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஷூட்டிங் முடிந்து டப்பிங் ஆரம்பமாயிற்று, ரஜினிகாந்த் டப்பிங் பேசும்போது தியேட்டருக்கு போயிருந்தேன். நான் சிகரெட் விட்டு கிட்டதட்ட பத்து நாளாகியிருந்தது. என்னைப் பார்த்து திரும்பியவர் வழக்கம் போல சிகரெட் பெட்டி திறந்து சிகரெட் நீட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;  “இல்லை வேண்டாம்”.&lt;br /&gt;&lt;br /&gt;  “ஏன் பிராண்ட் மாத்தினா இருமல் வருதா”.&lt;br /&gt;&lt;br /&gt;  “அதில்லை காரணம். நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;  “என்ன..”&lt;br /&gt;&lt;br /&gt;  “பத்து நாளாயிற்று”.&lt;br /&gt;&lt;br /&gt;  “நிஜமாகவா”.&lt;br /&gt;&lt;br /&gt;  “ஒரு சிகரெட் கூடப் பிடிக்கவேயில்லை”.&lt;br /&gt;&lt;br /&gt;  “பதட்டமாக இல்லையா’.&lt;br /&gt;&lt;br /&gt;    “முதல் நாள் இருந்தது , இரண்டாம் நாள் இருந்தது, மூன்றாம் நாள் இருந்தது. இப்போது சிகரெட் பிடிக்கும் எண்ணமே இல்லை”.&lt;br /&gt;&lt;br /&gt;    “பொறாமையா இருக்கு பாலா சார். என்னால் இதை விட முடியலை ஏதாவது பிரச்சனை வந்து சிகரெட்டைத் தூக்கிப் போடுவாங்க. ஒரு பிரச்சனையும் இல்லாமல் எப்படி சிகரெட் நிறுத்த முடிஞ்சது”.&lt;br /&gt;&lt;br /&gt;    “ஏன் இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்கன்னு நீங்க கேட்டீங்க இல்லையா..ஷுட்டீங் நடக்கறப்ப அது ரொம்ப வருத்தமா இருந்தது எனக்கு, நீங்க இவ்விதமெல்லாம் கேட்கக்கூடியவர் இல்லை. நீங்களே பொறுக்க முடியாது கேட்கும் அளவுக்கு நான் சிகரெட் பிடித்திருக்கிறேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;    “அன்னைக்கு கொஞ்சம் டென்ஷனான சீன். நானும் டைரக்டரும் மாத்தி மாத்தி உங்களை தொந்தரவு பண்ணிட்டிருந்தோம். அதனால உங்களுக்கு சிகரெட் ஜாஸ்தியாயிடுச்சு .நிகோடின் ஃபில்டர் இல்லாம இவ்வளவு சிகரெட் பீடிக்கறீங்களே.. இருமல் வந்துரப் போவுதேன்னு பயந்து போய் கேட்டேன். நான் கேட்டேன், நீங்க வுட்டுடீங்க. நீங்க ஏதாவது செய்து நான் சிகரெட் நிறுத்த முயற்சி பண்ணுங்களேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;   நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன், எங்கள் தோழர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளும், நிரந்தரமான உடல் வலிவும், நிம்மதியான எண்ண ஓட்டங்களும், நிறைவான புகழும் கொண்டு வாழ்வதற்காக அவரிடம் உள்ள சிகரெட் பழக்கத்தை அவர் விட்டு விடுவதற்காக என் சத்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகிராம்சுரத்குமார் அவர்களை பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;   நல்லவர்கள் நிறைவோடு நீண்ட ஆயுளோடும் வாழ்வது நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-3441583840395733884?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/3441583840395733884/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=3441583840395733884' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3441583840395733884'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3441583840395733884'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/05/6.html' title='சூரியனோடு சில நாட்கள் - 6 - பாலகுமாரன் பேசுகிறார்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/S-C8cnoDAuI/AAAAAAAAAsc/OuAZyj0HxKc/s72-c/scan0008.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-7837190045034782406</id><published>2010-05-01T04:03:00.000-07:00</published><updated>2010-05-02T19:18:52.959-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>குருவின் தனிச்சிறப்பு</title><content type='html'>இந்தியாவைத் தவிர  உலகத்தின் எந்த பகுதியிலும் ‘&lt;strong&gt;குரு’&lt;/strong&gt; என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு. இந்துமத தத்துவத்தில் குரு என்கிற விஷயத்திற்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த குரு ஆச்சார்யன் அல்ல, பாடம் சொல்லி கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ, பழக்க வழக்கங்கள் சொல்லிக் கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்ட திட்டங்களை, ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wMwlSS10I/AAAAAAAAArs/bcATB1gvgsE/s1600/ramana_maharshi.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wMwlSS10I/AAAAAAAAArs/bcATB1gvgsE/s320/ramana_maharshi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466258076503037762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. ‘அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது, தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை. பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல. ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே, அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது. ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை. மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; அப்படியானால் குரு சிநேகிதனா, இல்லை. அதற்கும் மேலே. சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும். தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும். குரு அப்படிப்பட்டவரும் அல்ல. ஆமெனில், குரு எப்படிப்பட்டவர் என்ற ஒரு கேள்வி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;   குரு என்பவர் ஒரு நேர்த்தியான மனிதர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; “கருணை என்றால் ஒரு வரம்புதான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு. நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. &lt;strong&gt;எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு. குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும். அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும்.&lt;/strong&gt; குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;  அப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும் என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wM7MD3cyI/AAAAAAAAAr0/G-d0gxPwyLQ/s1600/aravindar-stamp.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wM7MD3cyI/AAAAAAAAAr0/G-d0gxPwyLQ/s320/aravindar-stamp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466258258710197026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  விருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும். எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல். மதம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ, தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும். இப்படி மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது. அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை. சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து வந்து நிற்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;எவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம். அந்த சந்தோஷமான அமைதி தான் ஒருவரை குருவாக்குகிறது. சகலமும் அறிந்த சாந்தம் ஒருவரைத் தெளிவாக்குகிறது. தெளிவானவர் தான் குருவாக உருவாக முடியும். ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர். எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; குரு எப்படி பேசுவார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  “அவர் இளம் வயதில் மரணமடைந்து விட்டாரா என்ன செய்வது, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற சிறப்பு தான் உலகத்தின் இயல்பு . அடுத்தபடியாக ஆக வேண்டியதை கவனிப்போமே” &lt;br /&gt;&lt;br /&gt;  “அடடே.. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டதா . மிகவும் சந்தோஷம், பிறந்த குழந்தையின் மூலம் மகத்தான பணிகள் நிறைவேறட்டும், அன்பு பெருகட்டும், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அன்பு அதிகரிக்க வேண்டும், அன்புதான் சந்தோஷத்தின் வெளிப்பாடு. நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவதுதான். சந்தோஷத்தைத் தேடித்தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம்” என்று விளக்கிச் சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wSnOjJYUI/AAAAAAAAAsU/TtLIWK9h8eU/s1600/swamiramdasphoto.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 306px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wSnOjJYUI/AAAAAAAAAsU/TtLIWK9h8eU/s400/swamiramdasphoto.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466264512850649410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  “இந்த உலகத்தினுடைய பிரம்மாண்டத்தை, இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா. அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு ,அதற்கு ‘கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  எது அது. என்ன உருவம் அது. என்ன தன்மை அது, என்ன வலிவு அது. அது எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள். நீ உண்மையாக இருப்பின் உனக்குள் எழும். அந்தக் கேள்விகளுக்கு பதில் நான் சொல்லி, நீ புரிந்து கொள்ள முடியாது, நீயாக அறிந்து கொள்ள வேண்டும். இதோ இந்தக் குடுவையிலிருந்து நான் தேன் குடித்து விட்டேன். தேன் மிகத் தித்திப்பாக இருக்கிறது, எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது என்று என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் உனக்கு அது புரியாது. நீ தேன் குடிக்கும் வரை உனக்கு அது தெரியாது. எனவே, என்னைத் தேன் எப்படியிருக்கிறது என்று கேட்பதை விட்டு விட்டு நீ குடி.”&lt;br /&gt;&lt;br /&gt;            ஒரு உத்தமமான குருவின் சத்தியமான  வார்த்தைகள் இவைகள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wNYdkZA6I/AAAAAAAAAsE/1Z_nuaqqY70/s1600/Yogiyar_1.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wNYdkZA6I/AAAAAAAAAsE/1Z_nuaqqY70/s400/Yogiyar_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466258761626223522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                 &lt;br /&gt;            தேன் குடித்தல் என்பது கடவுளைத் தேடுதல் என்று வைத்துக் கொள்வோம். அறிதல் என்று வைத்துக் கொள்வோம். வெறும் கடவுள் தேடுதல் மட்டும் சொல்பவரா குரு, இல்லை. நடுநிலையில் நிற்பவரின் மனம் எப்பொழுதும் கருணையில் ஊறி நிற்கும். நாம் அருகே நிற்க, அது நம் தலையைத் தொட, நம்மை அணைத்துக் கொள்ள, அதனுடைய கருணை நம்முடைய கருணையை ஊற வைக்கும். அவரோடு வெறுமே சுற்றி இருப்பதால், பார்ப்பதால், உட்கார்ந்து பேசுவதால் நம்மையும் மீறி, நமக்குள் ஒரு மலர்ச்சி ஏற்படும். இதுதான் சொல்லாமல் சொல்லுதல். &lt;br /&gt;&lt;br /&gt;           “உன்னை மாற்றி விடுகிறேன், உனக்கு தீட்சை கொடுக்கிறேன், உனக்கு புதுப்பெயர் சூட்டுகிறேன்” என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு காசு வாங்காமல், தன்னுள் இருப்பதை உன்னுள் கொட்டிவிட்டு தனியே அமர்ந்திருக்கின்ற மிகப்பெரிய உன்னதம் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              குருவை அனுபவித்தவன், குருவாவதற்கு எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அவன் வளர்ச்சியில் எந்தத் தடங்கலும் வராது. இது இந்துமதம் உணர்த்திடும் குருவின் தனிச்சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;- திரு பாலகுமாரன் எழுதி 2000ஆம் ஆண்டு வெளி வந்த 'குரு' என்ற புத்தகத்திலிருந்து....&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-7837190045034782406?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/7837190045034782406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=7837190045034782406' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7837190045034782406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7837190045034782406'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/05/blog-post.html' title='குருவின் தனிச்சிறப்பு'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/S9wMwlSS10I/AAAAAAAAArs/bcATB1gvgsE/s72-c/ramana_maharshi.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-3362482469353191352</id><published>2010-04-30T19:32:00.000-07:00</published><updated>2010-04-30T19:47:45.194-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.</title><content type='html'>‘நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன. முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ் வைப்”,எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;strong&gt;தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும். &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              முகவாயில் கை வைத்து வியப்போடு உட்காரும் மனிதர்கள் இப்போது அதிகம் இல்லை. மாறாய்,என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பது பற்றிய அறிவு பரவலாக இருக்கிறது. பாண்ட்-சட்டை போட்டவர்கள் அதிசயமானவர்கள், செருப்பு போட்டவர்கள் சீமான்கள் என்று இருபது வருடம் முன்பு நம் தேசத்தில் பல பாகங்களில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    இப்போது அப்படி இல்லை. நன்கு நறுவிசாய் உடுத்திக்கொள்ளப் பலருக்குத் தெரிகிறது.மிக வேகமாய் வணக்கத்துடன் முகமன் சொல்ல பலபேர் கற்றிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    என் இளம் வயதில் வணக்கம் சொன்னால் வெட்கப்பட்ட பெண்களையும், ‘எனக்கா வணக்கம்’ என்று வியக்கின்ற ஆண்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்போது பதில் வணக்கம் சொல்லாவிட்டால் சிறுவர்கள்கூட மதிப்பதில்லை. விலகிப் போய்விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஆனால்,காலம் நகர நகர...வணக்கம் மட்டும் அறிதலாகி விடாது. பாண்ட்-சட்டை மட்டுமே நாகரிகத்தின் அடையாளமாகி விடாது. சுற்றியுள்ள உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதுதான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். ஒன்றும் அறியாத பெண்களை, உளறலான ஆண்களை சமூகம் மதிப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;strong&gt;எனவே,அறிதலில் ஆர்வம் காட்டுவதுதான் நாகரிகம். உடையலங்காரம், மேனி எழிலலங்காரம் தான் நாகரிகம் என்பதில்லை. அறிவுதான் உண்மையான அலங்காரம்.சிறப்பான அழகு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    ‘என்ன அறிதல்?’ என்ற கேள்வி உடனடியாக எழும்.இதற்கு பதிலும் உடனடியாகத் தரமுடியும். அறிதலுக்கு எல்லையே இல்லை. எல்லாமும் அறிதல் என்றுதான் பதில் சொல்ல முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;    எதிர்வீட்டு தாத்தாவிற்கு மாரடைப்பு. குடிப்பதற்கு ‘ஐஸ் வாட்டர்’ கேட்கிறார்கள். உங்களிடம் இருக்குமா’ என்று வந்தால், பதறி எழுந்திருந்து, ‘ஐஸ் வாட்டரா? குடிக்கவா. அதிகம் கொடுக்கக்கூடாது’ என்று பதில் சொல்வது தான் அறிதல். &lt;br /&gt;&lt;br /&gt;  ‘மூணு ஸ்பூன் மட்டும் கொடுங்கள். தொண்டை நனையட்டும்,நெஞ்சில் வலி இருக்கும்போது தண்ணீர் நிறைய கொடுப்பது நல்லதல்ல.உடம்பை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துப்போங்கள். ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று கிழவரை ஆசுவாசப்படுத்துங்கள். கலவரப்படுத்தாதீர்கள்’ என்று சொல்லியபடியே எதிர்வீட்டிற்கு ஓடி, அப்படி மாரடைப்பு ஏற்பட்டால், நாவிற்கு அடியில் வைத்துக்கொள்கிற ‘ஐஸாட்ரில்’ மாத்திரை இரண்டு கொடுத்து, மெதுவாக தூக்கி வந்து ஒரு காரில் ஏற்றி, எத்தனை விரைவில் மருத்துவமனையில் சேர்க்கிறோமோ அத்தனை உதவி அந்தக் கிழவருக்கு என்பதை உதவி செய்பவர் ஆணானாலும், பெண்ணானாலும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;    நன்கு படித்த ஒர் இளைஞன் இம்மாதிரி நெஞ்சுவலியில் அவஸ்தைப்பட்டவருக்கு நாவிற்கு அடியில் மாத்திரை வைக்க வேண்டும் என்றபோது, பல்லிறுகித் தவித்தவரின் வாயைப் பிளந்து,அவர் வாய்க்குள் நாற்பது மாத்திரையை கொட்டினான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    “இரண்டு வைச்சா போறுமா.கூட கொடுத்தா நிச்சயம் பிழைச்சுடுவாரோ அப்படிங்கிற பயத்துல பண்ணினேன்”. என்று பின்னால் அவன் சொன்னான். அந்த நிர்மூடத்தனம் மிகக் கடுமையாக அவனுக்கு இடித்துரைக்கப்பட்டது. மரண பரியந்தமும்,அந்த விஷயத்தை நினைக்கும் போது அந்த இளைஞனுக்கு துக்கம்தான். முட்டாள்தனம் ஒரு உயிரைப் பறித்தது வருத்தம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;  சமூக விஷயங்களை அறிவது மட்டுமல்ல... ஒரு குழந்தை தாயை கேள்வி கேட்கும்,”கடவுள் என்றால் என்ன?” என்று, அதற்கு பதில் சொல்ல ஒரு தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும். ‘ இன்னொரு தடவை இந்த மாதிரி கேட்டா, பளீர்னு அடிப்பேன்’என்று ஒரு தாய் பதில் சொன்னால் அல்லது தகப்பன் முறைத்தால், அறியாமை பின்னால் எள்ளி நகையாடப்படும். அந்த குழந்தையே விவரித்து கேவலப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட அதிகம் விஷயம் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இணையாக அவர்களைவிட அதிகமாக செய்திகள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;    “இதுல  ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’னு போட்டிருக்கே. இது ஆசிட்டா” அம்மா கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    “இல்லை.அது சுத்தம் செய்வதற்குண்டானது. தண்ணீரில் வேகமாகக் கரைந்துப் போகும். நக இடுக்கில் அழுக்கிருந்தால் இரண்டு சொட்டுவிட்டால் போதும், நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளியே கொண்டு வந்துவிடும்”. பிள்ளை சொல்ல, அம்மா வியந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;  “எப்படி தெரிந்தது,உனக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;  “பள்ளிக்கூடத்தில் முதலுதவி சிகிச்சை வகுப்பின்போது இம்மாதிரி நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். காயம்பட்ட இடத்தைக் கழுவி மருந்து போட எனக்குத் தெரியும். நானே நேரடியாக செய்தேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;    அரிவாள்மனை வெட்டிய காயத்தை பிள்ளை சுத்தம் செய்து கட்டு போட, கண்ணில் நீர் துளிக்க அம்மா அவனைப் பார்த்து வியப்பாள். ‘இது டாக்டராகிடுமோ. பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாகிவிடுமோ?’ என்று ஆசையோடு பார்ப்பாள். இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று அறிந்து கொள்ள பரபரப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;     மார்ட்டின் லூதர்கிங் பற்றியும், இராஜராஜசோழனுக்கு சதய நட்சத்திரம் என்றும், ராபர்ட்கிளைவிற்குத் திருமணமான இடம் பற்றியும், கில்லடின் என்கிற கொலை கருவி பற்றியும் மகனும், மகளும் மாறி மாறி சொல்ல... வியந்து பார்ப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    இது வெறும் படிச்சுட்டு ஒப்பிக்கிற பிள்ளை இல்ல. வேற என்னமோ ஒரு தேடல் இருக்கு என்று அதைக் கொண்டாடும் விதமாக அம்மா குதூகலமாக வாழ்வாள். அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் நண்பர் வீட்டிற்குப் போவார்கள். நண்பர்கள் வீட்டின் விலாசம் இருக்கிறது. விசாரித்துக் கொண்டே போய், தவறான வழிகாட்டிதலில் வேறு இடத்திற்கு வந்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    “இப்படியே திரும்ப வேண்டும். எந்த இடத்தில் விசாரித்தோமோ அங்கேயே ஆரம்பிக்க வேண்டும். ‘இந்த இடத்தில்தானே இடதுபக்கம் திரும்ப வேண்டும்”, என்று கணவன் கேட்க, மனைவி முழிப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;    “உன்னைத்தான் கேட்கிறேன். இங்கு விசாரித்தோம். இந்த இடத்தில்தானே திரும்பினோம். நீயும்தானே பின்னால் இருந்தாய். இந்த இடம் நீ பார்க்கவில்லையா”&lt;br /&gt;&lt;br /&gt;  “இல்லை, நான் பார்க்கவில்லை”, என்று மனைவி சொல்வாள். ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஒருவர் வருவார்களென்றால் அவர்களுக்கு புத்தி போதாதென்றே அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;    “விசாரித்தபோது எதிரே பேக்கரி இருந்தது. இப்ப இல்ல. பின்பக்கம் புடவை கடை இருந்தது. புடவை கடைக்கு என்ன பெயர் தெரியுமா? கொஞ்சம் இருங்க” என யோசித்து, “அது கலைவாணி ஜவுளி மாளிகை. அங்கேயிருந்து பத்து வீடு தள்ளி நாம இடதுபக்கம் திரும்பினோம். இடது பக்கம் திரும்பி இருக்கக்கூடாது. வலதுபக்கம் திரும்பி இருக்கணும். அவன் நமக்கு எதிரே நின்னு இடதுபக்கம் திரும்புன்னு சொல்லிட்டான்.நாம நேர போய் இடதுபக்கம் திரும்பிட்டோம்.அவனுக்கு இடதுபக்கம்னா, நமக்கு வலதுபக்கமில்லையா”&lt;br /&gt;&lt;br /&gt;  இப்படி பின்னால் உட்கார்ந்து மனைவி சொன்னால் கணவனுக்குக் குதூகலம் ஏற்படும். &lt;br /&gt;&lt;br /&gt;  “முன்னமே சொல்லி இருக்கலாமே” &lt;br /&gt;&lt;br /&gt;  “விட்டுட்டேன். இனிமே விடமாட்டேன். போங்க நான் கண்டுப்பிடிச்சுத் தரேன். வலது பக்கம் திரும்பிட்டீங்களா. அப்புறம் மறுபடியும் இடதுபக்கம்னான். அது இடது பக்கம் இல்ல, வலதுபக்கம். இன்னொரு வலதுபக்கம் திரும்புங்க, பள்ளிக்கூடம் வந்துருச்சா, பள்ளிக்கூடத்திற்கு அடுத்தது போலீஸ் குடியிருப்பு. போலீஸ் குடியிருப்புக்கு அடுத்த வீடுதான்னு சொன்னாங்க. இந்த வீடாகத்தான் இருக்கும்.பாருங்க வாசல்ல... அவரு பேருதான் போட்டிருக்கு”, என்று வீடு கண்டுபிடிக்க, உதவி செய்வரின் மனைவி மீது மிகப்பெரிய நன்மதிப்பு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;    விவசாயியாக இருந்தால், விவசாயம் பற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. வேறு எதுபற்றியும் தெரிந்து கொள்ளக்கூடாதா? பிராணாயாமம், யோகாசனம், தியானம் ஆகியவற்றை விவசாயி செய்தால் கேலிக்குரிய விஷயமா.&lt;br /&gt;&lt;br /&gt;    சில பெண்களை தினமும் நாலு கிலோமீட்டர் நடக்கச்சொன்னால், ‘நாங்கள் வீட்டுக்குள்ளேயே பத்து கிலோமீட்டர் நடக்கிறோம்’  என்று சிரிப்போடு சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    அது உதவாதப் பேச்சு, வியர்க்க விறுவிறுக்க இரண்டு கிலோமீட்டர் போய், இரண்டு கிலோமீட்டர் திரும்பி வருவது உடம்புக்கு மிகப்பெரிய ஆரோக்கியம். என்னதான் மாடு கட்டி இழுத்தாலும், உட்கார்ந்து கையால் இட்லிக்கு மாவரைத்தாலும், உடலின் எல்லா பகுதிகளும் சமமாய் வேலை கொடுக்கும் யோகாசனம் மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;    மூச்சுப் பயிற்சி மூளையை குளுமையாக்கும், கண்களைக் கூர்மையாக்கும். உடம்பில் படப்படப்பை குறைத்து, நிதானத்தைக் கொண்டு வரும். தியானமும், யோகாசனமும் பட்டணத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் உரிதானவை என்று நினைப்பது பேதமை. எல்லா கிராமத்து பெண்களும் யோகாசனம் செய்ய வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;    வெட்கத்தின் காரணமாகவும், நமக்குத் தேவையில்லை என்கிற அறியாமை காரணமாகவும் நல்லதொரு விஷயத்தை கிராமத்து பெண்கள் புறக்கணிக்கிறார்கள். உடல் என்பதில் கூர்மை உள்ளவர்கள், முனைப்பு உள்ளவர்கள் வெகுநிச்சயம் யோகாசனம் கற்றுக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;    செய்திப் பத்திரிகைப் படிப்பது என்பது ஒரு நல்ல வேலை. தொலைக்காட்சிப் பெட்டியைவிட, தினசரிகளிலேயே செய்திகள் தெளிவாக வருகின்றன. தலையங்கங்கள் சார்பாக இருந்தாலும், நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைக்கின்றன, அதையும் தாண்டி பொதுநலக் கட்டுரைகள் வருகின்றன, படிப்பது என்ற பழக்கம், விஷயங்களை அதிகம் அறிந்துகொள்ள உதவும்.&lt;br /&gt;&lt;br /&gt;    மாணவர்கள் செய்திப் பத்திரிகைப் படிக்க வேண்டும். இளைஞர்கள் வளமான, நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். நாத்திகத்தின் ஆதரவாகவும்,ஆத்திகத்தின் ஆதரவாகவும் இரண்டு வகையான புத்தகங்களையும் படிக்க வேண்டும். தந்தை பெரியார் எப்படி மதவாதத்தை எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் என்பதையே எதிர்க்கிறாரா. அல்லது குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறாரா.&lt;br /&gt;&lt;br /&gt;    கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறாரா. அல்லது கடவுள் நம்பிக்கையால் ஏற்படுகின்ற ஆசார அனுஷ்டானங்களை எதிர்க்கிறாரா. எதனால் அவருக்கு அப்படிப்பட்ட எண்ணம் தோன்றியது. அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்று இளைஞர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஆத்திகனாவதற்கோ, நாத்திகனாவதற்கோ இந்தப் புத்தகம் நிச்சயம் உதவி செய்யும். &lt;br /&gt;&lt;br /&gt;  பொது அறிவு அல்லது கேள்வி அறிவு உலகம் பற்றிய ஞானம் இல்லாதபோது, வெகுநிச்சயம் அம்மாதிரியான ஆட்களை வன்முறைப் பக்கம் திருப்பிவிட முடியும்.அப்படி சில தேசங்களில் மதரீதியாகவும், கொள்கைரீதியாகவும் இளைஞர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் தழுவிய வன்முறையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியது. அந்தப் பெண்ணுக்கு கணவனாக வரப்போகிறவன்,  பயோ டெக்னாலஜி’யில் அதாவது, உயிரியல் துறையில் உச்சகட்டப் படிப்பு படித்து, நல்ல வேலையில் இருந்தான். அந்தப் பெண் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    “பயோ டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. கணவனுக்கு முன்னால் நான் பேந்த பேந்த முழிக்க வேண்டியிருக்குமே. அதனால் நான் ‘பயோ டெக்னாலஜி’ பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி என் வீட்டிற்கு வந்து, என் மகளிடம் ‘பயோ கெமிஸ்டரி’ பற்றி நேரம் கிடைத்தபோதெல்லாம் பேசி-விவாதித்து,ரத்த ஓட்டம், ரத்தத் தன்மை, என்சைம்கள், பாக்டீரியாக்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பேசியே தெரிந்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt; அதன் திருமணத்திற்கு நாங்கள் எல்லாம் போய் வந்தோம். ஆறு மாதம் கழித்து ஊரிலிருந்து வயிற்றிலே கரு தாங்கி வந்தது. கூடவே கணவனும் வந்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;  “எப்படி இருக்கிறாள் எங்கள் வீட்டுப் பெண்” என்று நாங்கள் பெருமையாக கேட்க, “நீங்கள்தான் அவளுக்கு ‘பயோ கெமிஸ்டரி’ சொல்லிக் கொடுத்தீர்களா. அவசியமானால் நான் ஒரு பயோ கெமிஸ்டரி பெண்ணையே திருமணம் செய்துகொள்ள மாட்டேனா. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறாளெ எனக்கு இலக்கியம் சொல்லித் தருவாள் என்று ஆவலாக திருமணம் செய்துகொண்டால், இவள் ரத்தம் பற்றியும், பாக்டீரியா பற்றியும் பேசுகிறாள். காதுகளை பொத்திக்கொண்டேன்” என்று சிரிப்போடு சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;  “ஆங்கில இலக்கியம் பற்றிக் கேட்டால் பரவாயில்லையே. தமிழ் பாசுரங்கள் பற்றி சொல்லு. தேவாரம் பற்றிச் சொல்லு என்று கேட்கிறார். எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. மிகவும் அவமானமாகப் போய்விட்டது, நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்கள்.தினமும் உங்களிடமிருந்து தேவாரம், திருவாசம் கற்றுக்கொண்டு போகிறேன்” என்று அப்பெண் சொல்லிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;    கணவனும் அவளுடைய அந்த நம்பிக்கையை மிகவும் ஆதரித்தான். ‘வயிற்றிலுள்ள பிள்ளைக்கும் நல்லதல்லவா’ என்று குதூகலித்தான்.  ‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு’ என்று ஆண்டாள் பாசுரம் ஒன்று இருவருக்கும் சொல்ல, பயோ டெக்னாலஜியும், ஆங்கில இலக்கியமும் வாய் பிளந்து கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;    “வாழ்வு மிகப்பெரியது. அதில் விஞ்ஞானம் ஒரு சிறிய அங்கம். விஞ்ஞானமே வாழ்வாகிவிடாது. இயற்கையின் அதிசயத்தை விஞ்ஞானம் சொல்கிறது. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன” பயோ டெக்னாலஜி மாப்பிள்ளை பரவசப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;  வீட்டுத் தலைவன் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஈடுபட்டுவிட்டால், அவன் துணைவியும், துணைவியால் அவன் குழந்தைகளும் அதில் ஈடுபடுவார்கள். ஆளாளுக்கு விவரங்கள் கொண்டுவந்து தருவார்கள். ஒரு பிள்ளை கிரிக்கெட் போட்டி பற்றி விவரனையாக சொல்ல, ஒரு குழந்தை கர்நாடக சங்கீதம் பற்றி செம்மையாக பேச-தாய்,ஐரோப்பிய-தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றி எடுத்துரைக்க, தந்தை பொருளாதரம் பற்றி குழந்தைகளுக்கும்... மனைவிக்கும் விவரித்து சொல்ல, பங்கு மார்க்கெட் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தர, குடும்பம்-விஷயங்களை வாங்கி வாங்கி அருந்தும். சீராய் வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S9uVWSevDyI/AAAAAAAAArk/Wk2kHZFGVw0/s1600/IMG_0498.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S9uVWSevDyI/AAAAAAAAArk/Wk2kHZFGVw0/s320/IMG_0498.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5466126782894640930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     “வெறுமே கேட்டுக் கொள். சும்மா மனம்பாடம் செய்” என்று சிறுவயதில் எனக்கு சொல்லிக் கொடுத்த பல பழம் பாடல்கள், தொன்மையான பழம் இலக்கிய செய்யுள்கள்-வளர்ந்த பிறகு மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர, மிக அற்புதமான செய்திகளை அவை சொல்வதை நான் உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;“ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற &lt;br /&gt;   உத்தமர் தம் உறவு வேண்டும்&lt;br /&gt;   உள்ளொன்று வைத்துப் புறமொன்று&lt;br /&gt;   பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    ஏழு வயதில் மனப்பாடம் செய்த வரிகள்.இன்று அறுபத்தியொரு வயதில் அதன் பொருள் விளங்க, அந்த வாக்கியத்தின் பிரம்மாண்டம் புரிய-நான் திகைத்துப்போய் நிற்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    ஒருமையுடன் நினைக்கின்ற உத்தமர் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கிறேன். அப்படிப்பட்டவரோடு கூடாமல் இருக்கிறேன். எந்த அறிதலும் வீண்போவதில்லை. அறிதலுக்கு ஆசைப்படுவது மனிதர்களுக்கு இயல்பு. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-3362482469353191352?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/3362482469353191352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=3362482469353191352' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3362482469353191352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3362482469353191352'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/04/blog-post_30.html' title='வெற்றி வேண்டுமெனில்... அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S9uVWSevDyI/AAAAAAAAArk/Wk2kHZFGVw0/s72-c/IMG_0498.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-4564511928992815619</id><published>2010-04-29T07:14:00.000-07:00</published><updated>2010-04-29T08:34:08.830-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்வி-பதில்'/><title type='text'>பாலகுமாரன்   பேசுகிறார் - சில கேள்விகள் - சில பதில்கள்</title><content type='html'>&lt;strong&gt;ஐயா, வினாயகருக்கு ஏன் யானைத்தலை, நான் அந்தக் கதையை கேட்க வில்லை. அதனுடைய கருத்தைக் கேட்கிறேன் எனக்கு விளக்குவீர்களா.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S9mWVJkBquI/AAAAAAAAArU/JFPAnzxoIBc/s1600/IMG_3426.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S9mWVJkBquI/AAAAAAAAArU/JFPAnzxoIBc/s320/IMG_3426.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5465564912879250146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய காதுகள், சகலத்தையும் கேட்கும் திறன், சிறிய ஆனால் கூரிய கண்கள், தொலைதூரம் பார்க்கும் திறன், மிகப் பெரிய தலை. ஞாபகம் வைத்துக் கொள்ளும் திறன். அதுமட்டுமில்லாது வேறு எந்த மிருகத்திற்கும் இல்லாத தனித்த தும்பிக்கை. நீண்ட மூச்சை உள்ளிழுத்து மிக நீளமாக வெளியே விடுவது என்கிற விஷயம் யானைக்கு மட்டுமே உண்டு. சிறிய அளவில் மூச்சுகள் இழுத்து வெளியிடுவதில் ஆயுசு குறைவும், நோயும் ஏற்படும். ஆனால் துதிக்கை நீளம் மூச்சை இழுத்து நுரையீரலுக்குப் போக வேண்டியிருப்பதால், யானை இயல்பாகவே நீளமாக மூச்சை இழுத்தும், நிதானமாக மூச்சை விடுவதும் செய்ய வேண்டியிருக்கிறது. இதனாலேயே மற்ற மிருகங்களை விட இது அதிக காலம் நோயின்றியும் வாழ்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சொல்கிறேன், நீண்ட வாழ்க்கை. அதற்கான நீண்ட சுவாசம், அதனால் ஏற்படும் கூர்மையான புத்தி, தொலை தூரப்பார்வை, அந்த அமைதியால் விளையும் கேட்கும் திறன். இவையே கணபதி. இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு ஆதாரங்கள். இந்தத் தூண்கள் மீதே கெளரவம், புகழ், பணம் போன்றவை விதானங்களாக கட்டப் பெறுகின்றன என்பதை உணர்த்தவே வினாயகர் உருவம். உங்களுக்கு இப்பொழுது வினாயகரைப் புரிகிறதா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மதத்தில் ஒரு முக்கியமான விஷயம், உங்களை கட்டளையிட்டு விஷயம் செய்யச் சொல்வார்கள். வினாயகரை வணங்கு. யானைத் தலையுடைய பொம்மையை வணங்கு என்று சொல்வார்கள். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் ஏன் யானைத்தலை என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏன் உருவ வழிபாடு என்று நீங்கள் கேட்க வேண்டும். ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடவுளை அடைய மிகச் சிறந்த வழி எது என்று நீங்கள் உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்கத் தலைப்படவேண்டும். உங்களுக்குள் நீங்களாகவே கேள்வி கேட்டுக் கொள்ளும் தன்மையை வளர்ப்பதே இந்து மதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐயா, உருவவழிபாடு தவறு என்று அடித்துச் சொல்கிறார்களே? இதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S9mYEC2e0xI/AAAAAAAAArc/bDl-mFv7fJw/s1600/29092009775.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S9mYEC2e0xI/AAAAAAAAArc/bDl-mFv7fJw/s320/29092009775.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5465566818043089682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை நீங்கள் உருவமாக கொண்டுள்ள வரையில் உருவமற்றதை உங்களால் வழிபட முடியாது. உங்களை நீங்கள் உருவமாக கொள்ளாதிருப்பது என்பது எளிதில் நடக்கும் விஷயமல்ல, நீங்கள் உங்களை உருவமாக கொண்டால், உங்களுக்கு வணங்கவும் ஒரு உருவம் வேண்டும். அது கை,கால் உள்ளதாக இருக்கும் அல்லது வேறு விதமாகவும் இருக்கும். அடையாளமின்றி வழிபாடு சிறக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;தன்னை உணர்ந்தவரே , தன்னை மறந்தவரே, கடவுள் என்கிற உருவத்தையும், வழிபாட்டையும் மறந்து விட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐயா, நாத்திகவாதம் பேசுபவர்களை உங்களுக்கு அறவே பிடிக்காதா?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடடே.. யார் சொன்னது. நாத்திகம் பேசுகிற உத்தமர்களெல்லாம் இருக்கிறார்களய்யா. கடவுள் என்பது எனக்கு சரியாக நிரூபிக்கப்படவில்லை, வெறுமே வெற்று நம்பிக்கையை வைத்துக் கொண்டு கடவுளை ஏற்றுக் கொள்ளுதல் என்பது என்னால் இயலாது. எனினும் இப்பூமியில் வாழ கடவுளின் அவசியம் எனக்குத் தேவையில்லை. அதுவொரு சுகமான கற்பனையாக இருந்தாலும், என் யதார்த்த வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கிறதென்று மிக அமைதியாக கடவுளை மறுத்துவிட்டு தன்னுடைய தினசரி காரியங்களில் முழு கவனம் செலுத்துகிற நல்லவர்களை நான் அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாத்திகர்களை விட கடவுளை தெரியும் என்று அலட்டுகிற ஆத்திகர்கள் தான் அபாயமானவர்கள். கேவலமானவர்கள். எதுவும் தெரியாமலேயே எந்த பயிற்சியும் இல்லாமலேயே உள்ளுக்குள் ஆழ்ந்த எந்த சிந்தனையும் இல்லாமல் வெறுமே தன்னை துளசிமாலைகளாலும், ருத்ராட்சங்களாலும் அலங்கரித்துக் கொண்டு தனக்கு எல்லாமும் தெரிந்துவிட்டதாய் சிலரை ஏமாற்றி, பலரை ஏமாற்ற, பல இளைஞர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியத்தை அறிய மிக மிக சத்தியமாக இருக்க வேண்டும். தனக்குத்தானே உண்மையாக இருப்பது என்பது ஒரு பெரிய தபஸ். அது எளிதல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;பல ஆத்திகவாதிகள் இங்கு பொய்யர்கள், திருடர்கள். உண்மையை தேடிக் கொண்டிருப்பவன், சத்தியத்தோடு வாழ்பவன், தன் வேலையை அமைதியாக செய்து கொண்டிருப்பான். யாரிடமும் போய் என்னைப் புரிகிறதா என்றோ அல்லது என்னைப் புரிந்துகொள் என்றோ கேட்கமாட்டான். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டான். அருகே வா, உன்னை குணப்படுத்துகிறேன். என்னிடம் வா. உன் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன் என்று கடவுளை அறிந்தவன் சொல்வதில்லை. சம்பந்தப்பட்டவரின் பிரச்சனைகளை கேட்ட மாத்திரத்தில் பரிதவித்து எழுந்து, அவருக்காக உருகி நிற்க, சம்பந்தப்பட்டவரின் பிரச்சனை தானாக காணாமல் போகும். என்னால் காணாமல் போயிற்று என்று சொல்லவும் அந்த சத்தியசந்தனுக்கு மனம் வராது. மறுபடியும் வியப்பு தான் ஏற்படும். என்ன உன் கருணை என்று கடவுள் மீது மிகப்பெரிய கனிவும் ஈடுபாடும் அதிகரிக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திகம் என்பது அன்பே வடிவாய் இருப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐயா, பல பத்திரிகைகளில் வட மொழியில் பிரார்த்தனைகள் எழுதி இதைச் சொன்னால் சகல துன்பங்களும் விலகிப் போகும்,என்று சொல்கிறார்கள், அல்லது இந்த மாதம், இந்த மந்திரம் சொல்லுங்கள் என்று எழுதுகிறார்கள். வடமொழி எனக்கு அறவே தெரியாது. அதை மனனம் செய்து சொல்வதும் கூட நான்குவரியாக இருந்தாலும் சிரமமாக இருக்கிறது.வடமொழிக்கு இணையாக தமிழில் பாடல்கள் இல்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இல்லை. நிறைய இருக்கின்றன. அபிராமி அந்தாதியும், வேயுறு தோளிபங்கண் என்று துவங்குகின்ற பாடலும், திருஞான சம்பந்தருடைய சில பதிகங்களும், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உருக்கமாய் எழுதப்பட்ட வேண்டுதல்களும் சொல்ல சொல்ல, உங்கள் மனகனத்தை குறைத்து தெளிவை அதிகரித்து மகிழ்ச்சியைக் கொடுக்கவல்லன. திருஞான சம்பந்தர் தேவாரமும் சொல்வதற்கு கடினமாக இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் வெறுமே கடவுள் பெயரை சொல்லிக் கொண்டிருப்பது போதும் என்று எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயம் தமிழ் பதிகங்களும் சொல்வதற்கு கடினமாக இருப்பதுண்டு. படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்கியம் வந்து விட்டால் எதுவும் எளிதாக இருக்கும். மேம்போக்காக இருப்பின் இறைவன் நாமத்தைச் சொல்வதுகூட கடினமாகத் தோன்றிவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐயா, விதி என்று ஒன்று முன்பே எழுதப்பட்டு விட்டதாகக் கொண்டால் எதற்கு இறைவழிபாடு என்ற ஏமாற்று வேலை?&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு உண்டான பதிலை நிதானமாக யோசித்து புரிந்து கொள்ள வேண்டும். இறைவழிபாடு தெளிந்தவர்களுக்குத் தேவையே இல்லை. அது நொய்மையான மனங்களின் செயல். சற்றுப் பேராசையுள்ளவர்களின் சிந்தனை. ஆனால் தெளிந்தவர்கள் கூட அன்பு மிகுதியினால், நொய்மையான மனங்களைத் தேற்றும் பொருட்டு பிரார்த்தனை செய் என்றும், இந்தவிதமான வேண்டுதல் நடத்து என்றும், அதற்குண்டான பாடல்களை இயற்றியும் வழிநடத்தியிருக்கிறார்கள். இறைவழிபாடு அவசியமே இல்லை என்பதுதான் இந்திய சித்தர்களின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;விதி என்ன எழுதியிருக்கிறது என்று கவலைப்படாமல் இப்படி உதவி செய், இன்ன வரம் கொடு என்கிற ஆசைப்படல்தான் பிரார்த்தனை. ஆசைப்படாதிருக்க, அதாவது பிரார்த்தனை செய்யாதிருக்க மிகுந்த தெளிவும், திடமும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;       எனக்கு அத்தனை திடமில்லை. தன் திடம், தெளிவு பற்றி ஒவ்வொருவரும் தானே தன்னைப் பார்த்து தெளிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-4564511928992815619?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/4564511928992815619/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=4564511928992815619' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/4564511928992815619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/4564511928992815619'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/04/blog-post_29.html' title='பாலகுமாரன்   பேசுகிறார் - சில கேள்விகள் - சில பதில்கள்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S9mWVJkBquI/AAAAAAAAArU/JFPAnzxoIBc/s72-c/IMG_3426.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-3306512289808240378</id><published>2010-04-24T21:03:00.000-07:00</published><updated>2010-04-24T21:08:38.034-07:00</updated><title type='text'>சூரியனோடு சில நாட்கள் - 5-- பாலகுமாரன் பேசுகிறார்</title><content type='html'>“ நகரத்துலேர்ந்து கொஞ்சம் தள்ளிப் போயிடணும். மனசுக்குப் புடிச்ச இடமா பார்த்து கொஞ்சம் நிலம் வாங்கணும். ஐநூறு மாடுகள் வளர்க்க, மேய்க்கத் தகுந்த இடமா வாங்கணும். அதாவது பால்பண்ணை. கொஞ்சம் தள்ளி பெரிசா ஒரு தோப்பு ஏற்படுத்தணும். குரங்குகளை அங்கு குடியேற வைக்கணும். கொஞ்சம் தொலைவா நின்னுகிட்டு அந்த குரங்குகளை வேடிக்கை பார்க்கணும், பிறகு மாடுகள் மேய்ச்சு, சுத்தம் பண்ணி, பால் திறந்து அப்படி வேலை செய்யணும்.&lt;br /&gt;&lt;br /&gt;    அந்தப் பண்ணைக்கு நடுவுல, இரண்டு ரூம், மூணு ரூம் இருக்கற வீடு கட்டிக்கிட்டு, நாம நடிச்ச படத்தை நாம போட்டு பார்த்துகிட்டு, அப்ப காமிரா பின்னால யார் இருந்தாங்க, என்ன நடந்தது, எப்படி அந்த படத்து கதை உருவாச்சுன்னு ரீ-கலெக்ட் பண்ணி உட்கார்ந்திருக்கணும். இப்படி ஒரு ஆசை என் மனசுல உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;    இந்த வேலைகளுக்கு நடுவே தினமும் நேரம் கிடைக்கறப்ப ‘ஓம்’ங்கற சப்தத்துல மனசு லயிக்க வைக்கணும். எங்க வீட்ல பார்த்திருப்பீங்க, &lt;br /&gt;&lt;br /&gt;  எப்பவும் ஓம்னு ஒரு ஓலி வர்ற மாதிரி கேஸட் ஏற்பாடு பண்ணி, டேப் ரிக்கார்டர்ல போட்டு கேட்டுக்கிட்டு இருப்பேன். தியானம் பண்ற நேரத்தை அதிகமாக்கி, அந்த ஓம்கார ஒலியிலே மனச நிக்க வைக்கணும். விழிச்சு கண்ணு திறந்த உடனே மறுபடி மாடு, குரங்குன்னு வேல செய்ய வேடிக்கை பார்க்கப் போயிடணும்.&lt;br /&gt;&lt;br /&gt;    “மாடு-பால் பண்ணை புரியுது. எதுக்கு குரங்குகளுக்குன்னு தோப்பு வளர்த்து வேடிக்கை பார்க்கற விஷயம்”.&lt;br /&gt;&lt;br /&gt;    “ரொம்ப வேகமா சலனமாகிற மனசு குரங்கு. அதிகம் சலனமில்லாத,அதே சமயம் அப்படியே கல்லா நிக்கற மனசு பசு. இது இரண்டும் எனக்குள்ள இருக்கு. குரங்கை வேடிக்கை பார்க்கணும். பசுவோட பழகணும். குரங்கை வேடிக்கை பார்க்க வேடிக்கை பார்க்க, என் மனசு அதைவிட எவ்வளவோ மோசமா- தேவையில்லாது ஆடுதுன்னு புரியுது. குரங்கு குதி போடறதை, ஆடறதை சேஷ்டைன்னு சொல்றோம். அப்போ அதை விட அதிகமா ஆடற என் மனசை என்னான்னு சொல்றது.&lt;br /&gt;&lt;br /&gt;    ரோட்ல ஒரு ஆள் குடிச்சுட்டு விழுந்து கிடக்கான்னு வெச்சுக்குங்க, அதைப் பார்க்கறப்போ, இந்த முட்டாள்தனம் செய்யவே கூடாதுன்னு தோணுதில்ல. அதே மாதிரி குரங்கு ஒரு இடத்துல உட்கார்ந்து அலைஞ்சுக்கிட்டே இருக்கறத பார்க்கற போது, அலையற மனசை கண்ட்ரோல் பண்ற எண்ணம் வரும். அதாவது குரங்கை உத்துக் கவனிக்கற மாதிரி அலையற மனசை, குதி போடற மனசை, உத்துக் கவனிக்க ஆரம்பிச்சுருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;    நம்ம மனசை நாமே உத்துப் பார்க்கறப்போ அது கொஞ்சம் கொஞ்சமா ஒரு நிதானத்துக்கு வந்துரும். இதுதான் என் எதிர்காலத் திட்டம். இது யோக சாதனையா, இல்லே, வெறும் விஷயமா, தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;    ஆனா இப்படி ஒரு அமைதியான வாழ்க்கை வாழணும்னு மனசுல ஒரு திட்டம், ஆசை இருக்கு. இந்த மாதிரி விஷயங்களுக்கு வாத்தியாரா ஒருத்தர்கிட்ட போகாது யாரையும் போய் இது என்ன, இது எப்படின்னு விசாரிக்காது, மனசுல பட்டதை மனசுல பட்ட விதமே நடத்திவிட்டுப் போறாது நல்லதுன்னு தோணுது. பாடம்னு கேட்கப்போனா பத்துவிதமான ஆட்கள் பத்து விதமான அபிப்பிராயத்தோட வராங்க.&lt;br /&gt;&lt;br /&gt;    இவரு தப்பு, அது சரி, இப்படி தப்பு, அப்படி சரிங்கறாங்க. மனசுக்குத் தெரியும், கவனமா உத்து கேட்டா சரியான வழி மனசு காட்டும். மனசுதான் சரியான குரு.&lt;br /&gt;&lt;br /&gt;    மனசு குருன்னு ஏத்துக்கிட்ட பிறகு அடடா அவரு அப்படி செய்யறாரே.. இது நல்ல மெத்தேடா தெரியுதேன்னு ஜகா வாங்கக் கூடாது. சரியோ, தவறோ; நல்லதோ, கெட்டதோ மனசு சொல்ற வழில போகணும்.&lt;br /&gt;இந்த மனசு குருன்னு வெச்சுக்கறபோது ரொம்ப பிடிவாதமும் தேவையில்லை. கடவுளைப்பார்த்துட்டு தான் மறுவேலைன்னு ராப்பகலா வெறி புடிச்சா மாதிரி மாறிடக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;    கடவுளை பார்க்க முடிஞ்சபோது பார்க்கலாம்ன்னு நிதானமா இருக்கணும். அதே சமயம் நிதானம் சோம்பலாயிடக்கூடாது. ஒரு மென்டல் பேலன்ஸ் வேணும். இதை ரஜனீஷ் படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். அப்பப்ப புனால இருக்கற ஆஸ்ரமம் போவேன். நல்ல சிநேகிதர்கள் அங்கே இருக்காங்க. அங்க போய், ஆறு நாள், ஏழு நாள் எல்லாம் மறந்துட்டு இருப்பேன். ஒரு புது உணர்வோடு நிறைவோட திரும்பி வருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    பகவான் ரஜனீஷ் ஒரு முழுமையான குரு. திறந்த மனசோட அவரைப் படிச்சா பல விஷயங்களை சரியான கோணத்துல புரிஞ்சுக்க முடியும். ரஜனீஷ் புரிஞ்சுக்கறதுக்கு முன்னே நமக்கு தெரிஞ்ச விஷயங்களிலேர்ந்து விடுபடணும். நாம நினைச்சுட்டு இருக்கற கடவுள், மதம், பூசாரி, ஆச்சாரம், பூஜை இதுலேர்ந்து விடுபடணும். இப்படி விடுபடறது எல்லாருக்கும் கஷ்டம். அதனால்தான் ரஜனீஷ் பத்தி நான் அதிகம் யார்கிட்டயும் பேசறதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;          எங்க குருன்னு அவரை யார் கிட்டயும் அறிமுகப்படுத்தறதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;           ஆமா..நான் ஒண்ணு கேட்கறேன், தப்பா நினைக்காதீங்க, தியானம், ஹடயோகம் இப்படி ஏதேதோ பேசறீங்க. ஆனா இவ்வளவு சிகரெட் பிடிக்கறீங்களே.. பாலகுமாரன், இது சரியா, சுத்திப் பாருங்க. ஒண்ணு ரெண்டு, மூணு ,நாலு பத்து பன்னிரெண்டு. அடேங்கப்பா... ஒன்னவர்ல பன்னிரெண்டு கிங்சைஸ் சிகரெட்டா. ஜாஸ்தி இல்லே. அதே சமயம் இருமறதில்லையே நீங்க, அது எப்படி.”&lt;br /&gt;&lt;br /&gt;    ரஜினியின் நீண்ட விளக்கத்தின் கடைசியாய் என் முதுகில் ஒரு கேள்விக் குத்து விழுந்தது. நான் சட்டென்று இருண்டேன். என் சிகரெட் பழக்கம் பலர் சுட்டிக் காட்டி இடித்துரைத்த விஷயம்தான். ஆனால் ஒன்று, பதிலுக்கு பதில் என்பது போல் தியானம் பற்றி பேசுகிற நீ என்ன யோக்கியதையில் சிகரெட் பழக்கம் தொடருகிறாய்.ஏன் மனக் கட்டுப்பாடு இல்லை. இது தீயது என்று தெரிந்தும் ஏன் விட முடியவில்லை என்று சொல்லாது சொல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    முதன் முறையாய் என்னைச் சுற்றி நான் போட்ட சிகரெட் துண்டுகள் அசிங்கமாகத் தெரிந்து எனக்கு.ரஜினிகாந்த் என் சிகரெட் பழக்கம் கேட்டு விட்டு, சாதாரணமாய் படப்பிடிப்புக்கு எழுந்து போய் விட்டார். நான் தொடர்ந்து புகைப்பிடித்தபடி யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;    இதைவிட முடியாதா, இந்த கொடிய பழக்கத்திலிருந்து என்னால் நகர முடியாதா. என் மனம் இதற்குப் பக்குவப்படவில்லையா. ஆமெனில் என் தியானத்திற்கு-அது தொடர்பான பேச்சுக்கு என்ன மதிப்பு. அன்று இரவும் சிகரெட் பிடித்தேன். யோசித்தேன். என் மனம் ஒரு அளவுக்கு பக்குவப்பட காரணமாய் இருந்த என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் நோக்கி மனசுள் பேசினேன். &lt;br /&gt;&lt;br /&gt;  ‘சிகரெட் பழக்கம் விட விரும்புகின்றேன். உதவி செய்ய வேண்டும். தயவு செய்து இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்தும் வலிவு தர வேண்டும்.’ கெஞ்சினேன். ‘ஆமா நீங்க ஏன் இவ்ளோ சிகரெட் பிடிக்கறீங்க.’ ரஜினியின் கேள்வி காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    மனசு சிகரெட் எடுக்கும் போதெல்லாம் பிரார்த்தனையை குரு நோக்கி செய்தது. நவம்பர் மாதம் முப்பதாம் தேதி இரவு ஒரு பாக்கெட் சிகரெட்டோடு உட்கார்ந்து, தொடர்ந்து ஒன்பது சிகரெட்டுகள் பிடித்துவிட்டு, பாக்கெட்டை கசக்கிப் போட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;  இன்று வரை ஒரு சிகரெட் கூட பிடிக்கவில்லை. எரிச்சல் இல்லாது, பல்கடித்து வேதனைப்படுத்தும் கொடூரம் இல்லாது, சிகரெட் பிடிக்கும் பழக்கம் என்னை விட்டு அகன்று விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;    இனி எந்தக் காரணம் கொண்டும் சிகரெட் பிடிக்க மாட்டேன் என்பது எனக்குள் உறுதியாகி விட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-3306512289808240378?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/3306512289808240378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=3306512289808240378' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3306512289808240378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3306512289808240378'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/04/5.html' title='சூரியனோடு சில நாட்கள் - 5-- பாலகுமாரன் பேசுகிறார்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-8245563733240506554</id><published>2010-04-24T20:45:00.000-07:00</published><updated>2010-04-24T20:51:18.269-07:00</updated><title type='text'>கற்றுக் கொண்டால் குற்றமில்லை -  நல்ல உணவுப் பழக்கம்</title><content type='html'>எங்கள் வீட்டில் எல்லோரும் எங்கோ கிளம்ப வேண்டியிருந்தது. வேகமாய், எளிமையாய் ஏதாவது தயார் செய்து விடுகிறேன் என்று என் துணைவியார் சொன்னார். “எதற்கு சிரமம்? வெளியே சாப்பிட்டுக்கலாம்”, என்று நான் சொல்ல, என் இரண்டு குழந்தைகளும் எகிறி குதித்து பல ஹோட்டல்கள் பெயரைச் சொன்னார்கள். பல சிற்றுண்டிகள் பெயரைச் சொன்னார்கள். எங்கே சீக்கிரம் உணவு தயாராகுமோ அங்கே போகலாம் என்று ஒரு விரைவு உணவுக் கடைக்குப் போனோம். குழந்தைகள் கொடுத்த உணவுப்பட்டியல் கைக்கு வர தாமதாமாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;  ரசித்து சாப்பிட்டவரை சந்தோஷம் என்று காசு கொடுத்து விட்டு வந்தோம். சாப்பிட்ட அரை மணியில் சிறிது சிறிதாய் ஏப்பம் வந்தது. அடுத்த ஒரு மணியில் இரைப்பையிலிருந்து நீர் கிளம்பி நெஞ்சைத் தாக்கியது. இரண்டு மணி நேரம் பொறுத்து வயிற்றில் இடைவிடாது சங்கடம், வீட்டுக்கு வந்ததும் வயிற்றைக் காலி செய்ய வேண்டிய கட்டாயம். அதுவும் கூட ஒரு வேதனையான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;  அன்று இரவு படிக்கக் கூட முடியாமல் ஒரு ஆயாசமும், மந்தமும் பற்றிக் கொண்டது, எனக்கு மட்டும் தான் இப்படியா அல்லது எல்லோருக்குமா? வீட்டில் உள்ளவர்களை விசாரித்தேன். யாரெல்லாம் உணவுக் கடையில் விதம் விதமாய் தின்றோமோ அவர் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன். “நம்ம வீட்ல யாருக்குமே வயிறுபலம் கிடையாது”. என் அம்மா அடிக்கடி சொல்வாள். கொஞ்சம் பழக்கம் பிசகினாலும் பிய்த்துக் கொள்ளும் என்று அலுத்துக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;  ‘செரிமானம் பரம்பரை சமாச்சாரமா? இதற்கும் மரபு அணுக்களுக்கும் சம்பந்தம் உண்டா? அந்த விரைவு உணவுவிடுதியில் வேறு சில நண்பர்களை பார்த்தோமே? பெரிய பட்டளமாய் உயர டேபிளைச் சுற்றி நின்றபடி ஏகப்பட்ட விஷயங்களை ஆர்டர் செய்தார்கள், அங்கும் வயிற்றுப் பொருமல் உண்டா, யாரைச் சந்திக்தோம்..யோசித்து டெலிபோனில் எண்கள் சுழற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  “மத்தியானம் போனான், வரவேயில்லையே” நான் தேடியவனின் தாயார் கவலையோடு பேசினார்கள். மறுநாள் காலை வயிறு ஊதித் திணறிக் கொண்டிருந்தது. மகள், மகன் இருவருமே என்னை விடவும் மோசமான நிலையில் இருந்தார்கள். சுருண்டு படுத்தார்கள், உற்சாகமின்றி நடந்தார்கள். அன்று வழக்கத்தை விட அதிக தூரம் வேண்டுமென்றே வேகமாக நடந்தேன், எப்படியாவது வயிற்றிலுள்ள விஷயத்தை வெளியேற்றி விடவேண்டும் என்று விரும்பினேன். உண்ட இருபத்திநாலு மணி நேரம் கழித்து உள்ளே கண்ட இடங்களை ரணப்படுத்தி விட்டு அந்த உணவு வெளியேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;  படிக்கவோ, எழுதவோ முடியவில்லை என்பது மட்டுமில்லை. சுமுகமாகப் பேசவும் முடியவில்லை. வயதாகிவிட்டதால் ஜீரண சக்தி குறைந்து விட்டது என்று நான் நினைக்க, என் மகளும், மகனும் பட்ட அவஸ்தை ஞாபகம் வந்தது. நான் போனில் தேடிய நண்பரிடமிருந்து இரண்டு நாள் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. “வயிற்றுப் போக்கு புரட்டி எடுத்து விட்டது. அது தான் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்ன விஷயம்”, என்று கேட்க, அதே விஷயத்தை அவரிடம் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  சமீபமாய் உணவு என்கிற விஷயத்தில் மிகப்பெரிய மாறுதல் தென்னிந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. எல்லா உணவு வகையிலும் விதவிதமான மசாலாக்கள் கலக்கப்படுகின்றன, ஒருவித வாசனை கலந்த காரம் கோதுமை ரொட்டியோடும், பன்னோடும் வெண்ணெய் வதக்கி புரட்டப்படுகிறது. வாசனை தலைமயிரைப் பிடித்து இழுக்க, ருசி கண் சொருக வைக்கிறது. சாலையோரத்தில் கும்பலாய் ஆண்களும், பெண்களுமாய் நின்று கொண்டும், பேசிக் கொண்டும் சாப்பிட, என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று புரியாமலேயே சாப்பிட நேரிடுகிறது, மனசு உணவோடு ஒட்டவில்லை. மற்றவரோடு பேசிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;  உணவும் தவறு, உணவு உண்ணும் முறையும் பிசகு, இது இந்தத் தலைமுறையையே பலவீனமடையச் செய்து கொண்டிருப்பதை நான் உணர்கிறேன். எல்லாம் கிடக்க, இந்தக் கட்டுரை அஜீரணம் பற்றியோ என்று யாரேனும் அலுத்துக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;&lt;strong&gt;உணவு ஞானத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. வாழ்க்கையின் வெற்றிப்படிகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  நான் இடைவிடாமல் ஏதேதோ சிந்தித்துக் கொண்டே இருக்கிறவன். அந்தப் பிரபலமான விரைவு உணவு என் யோசிப்பை எரிச்சலடையச் செய்து விட்டது. தொடர்ச்சியின்மை ஏற்பட்டு விட்டது. மிக உற்று கவனித்த போது, எதிர்மறையான யோசிப்பு எனக்கு ஏற்பட்டது. அதாவது, வயிற்றுப் பொருமலில் யோசிப்பு செம்மை திசைமாறி, வக்கிரமாக சிந்திக்க வைத்து விட்டது. விதண்டாவாதம் தொடர ஆரம்பித்துவிட்டது. நம்மில் பலபேர் கோபமடைவதும், ஆத்திரமடைவதும், அசூயை அடைவதும் உணவினால் தான் என்பது என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;  இந்த இயற்கை உணவு பற்றி ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருந்தாலும், இதைப் பற்றி திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னவர் நண்பர் திரு சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மூன்று வருடங்கள் முன்பே “ரொம்ப குண்டா இருக்கீங்க பாலகுமாரன். உடம்பு கனம் தாங்காம கால் அகட்டி நடக்கறீங்க, படியேறினா மூச்சு வாங்குது. அநியாயத்துக்கு சிகரெட் பிடிக்கிறீங்க. நீங்க ஒரு நல்ல ரைட்டர், ஆனா, உங்களைப் பத்தி கவலையா இருக்கு” என்று சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;  அவர் சொன்ன உணவு அப்போதைக்கு சிரிப்பை தந்தது. கோஸ், முள்ளங்கி, கேரட் எல்லாவற்றையும் வெட்டி சமைக்காமல் உண்பது, பழரசம் அருந்துவது நவதானியம் போட்ட கஞ்சி குடிப்பது என்றெல்லாம் சொன்னார். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாகவும், பழக்கப்பட்ட உணவின் ருசி காரணமாகவும் எல்லா இடங்களிலும் சமைத்த உணவுதான் கிடைக்கிறது என்ற நிர்ப்பந்தம் காரணமாகவும், நான் சைதை துரைசாமியை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால், இன்று அந்த உணவுக்கு மாறினேன். இதற்கு தூண்டுகோலாய் சினிமா டைரக்டர் வேலுபிரபாகரனும் நிறையப் பேசினார். மாதத்தில் பதினைந்து நாட்கள் சமைத்த உணவும், இன்னொரு பதினைந்து நாட்கள் சமைக்காத உணவும் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை விளக்கினார். விரைவு உணவால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தாலும் ஆரோக்கியத்தின் மீது ஏற்பட்ட ஆசையாலும், ஒரு நாள் இரவு இயற்கை உணவு என்று ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;          ஆனால், நான்கு நாட்கள் கடந்ததும் எண்ணெயும், மசாலாவும், வர்ணமும், வாசனையுமாய் இருந்த உணவு சர்வ நிச்சயமாய் விஷமென்று தெரிந்தது. அது படுத்தியபாடு நினைவிற்கு வந்தது. வீடு ரொம்ப வினோதமாய் என்னைப் பார்த்தது. “ஐயோ பாவம். உருளைக்கிழங்கு பொடிமாஸும், வெங்காய சாம்பாருமாக விரும்பி சாப்பிட்டு வந்தவன், என்ன பாவம் செய்தானோ, இப்படி பச்சைத்தழை தின்கிறான்”. “எல்லாவற்றையும் போட்டு ஒருகொதி வேகவைத்து உப்பும் மிளகும் போட்டுத் தரட்டுமா” என் வீட்டில் உன்னை பரிதாபமாய் பார்த்துக் கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  நான் மறுத்துவிட்டு உண்ணத் துவங்கினேன். என் வீட்டை குஷிப்படுத்துவதற்காக ‘ம்மா’ என்று காளை போல் குரல் கொடுத்தேன், தலைகுனிந்து முட்டுவதாய் நடித்தேன். “பசுவுக்கு அகத்திக்கீரை, பாலகுமாரனுக்கு கோஸு கீரை” என் பிள்ளை புதுக்கவிதை எழுதினான். நொந்து கொள்ளத் துவங்கினால் சிறிய வார்த்தைகூட பெரிதாய் நோகடிக்கும். விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் மிகக்கடினமான விஷயமும் ஜாலியாகப் போகும். “நல்லாயிருக்குப்பா..சாப்பிட முடியாது” நான் சொல்ல, என் வீடும் என் தட்டில் கை வைத்தது. இன்னும் காய்கறிகளும், பழங்களும் நறுக்கப்பட்டன, பேசிக்கொண்டே சாப்பிட்டதில் உணவு போனவிதம் தெரியவில்லை. வயிறு நிரம்பிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;       அன்று சமைத்த உணவை எல்லாரும் புறக்கணித்தோம். மறுநாள் காலை வயிறு துடைத்து விட்டது போல் சுத்தமாயிற்று. நார்ச்சத்து உணவு என்பதால், உடம்பு லேசானது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. டைரக்டர் வேலு பிரபாகரன் சொன்னதுபோல், உடைத்த பூண்டு ஐந்து பற்களோடு ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டேன். பொட்டுக் கடலையோடு பூண்டு சாப்பிட பூண்டின் காரம் தெரியவில்லை. மறுநாள் அதற்கு மறுநாள் என்று தினமும் இரவு வேளை மட்டும் நான் இயற்கை உணவை எடுத்துக் கொண்டேன். என் வீடும் அவ்வப்போது இதை மேற்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;        எங்கு பார்த்தாலும் இந்த வழிநடைக் கடைகள். இடைவிடாது, அதில் குழுமும் மக்கள். அநேகமாய் இளைஞர்கள் ஒரு பெரிய கும்பலாய் உடம்பை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்ற பயம் எனக்கு வந்து விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;உடம்பைப் பேணுதல் என்பதை இந்தச் சமூகம் சரியாக செய்யவில்லை என்று தோன்றுகிறது. விளையாட்டு சூரர்கள் யாரும் இல்லாது போனாலும் பரவாயில்லை, உற்சாகமான மக்கள் ஒரு தேசத்தின் பொக்கிஷம்.&lt;/strong&gt; உற்சாகமான ஜனங்கள் இவ்வளவு மசாலா சாப்பிடக்கூடாது. நாள் தவறாது நடைப்பாதையில் உண்ணக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;  நாள் முழுவதுமாய் இயற்கை உணவுக்கு மாற நாளாகும். ஆனால் ஒருவேளை நான் சமைக்காத உணவை உண்ணும்போதே உடம்பு வெகு ஆரோக்கியமாய் இருக்கிறது. “மனசு பத்திப் பேசற பாலகுமாரன், எதுக்கு உணவு பத்தி பேசறாரு?” உங்களில் சிலருக்கு இந்தக் கேள்வி வரக்கூடும். திருமூலர் திருமந்திரம் பாட்டு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;“உடம்பார் அழியின் உயிரார் அழிவார்.&lt;br /&gt;  திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்.&lt;br /&gt;  உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்.&lt;br /&gt;  உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; வளர்த்தல் என்பதற்கு கெடுத்துக் கொள்ளாமலிருந்தால் போதும் என்கிற அர்த்தமும் சொல்ல வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே நச்சுப்புகை, காசு கொடுத்து விஷம் சாப்பிடவேண்டுமா? ஒரு வேளையாவது இயற்கை உணவை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவுப் பழக்கத்தை கற்றுக் கொள்வது நல்லது. அது குற்றமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-8245563733240506554?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/8245563733240506554/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=8245563733240506554' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8245563733240506554'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8245563733240506554'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/04/blog-post.html' title='கற்றுக் கொண்டால் குற்றமில்லை -  நல்ல உணவுப் பழக்கம்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-7709611598810633676</id><published>2010-02-12T19:01:00.000-08:00</published><updated>2010-02-12T19:11:24.414-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -4</title><content type='html'>“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் ரஜினிகாந்த்    கேட்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன்.........&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று யாரேனும் கேட்டால் அதற்குப் பதில் சொல்வது சரியா..தவறா.&lt;br /&gt;&lt;br /&gt;தயங்காமல் பதில் சொல்வதுதான் சரி என்பது என் வாதம். மற்றவரைப் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு அவருக்கு விளக்கிச் சொல்லும்படியான அறிவு ஒருவருக்கு உண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாம்; இல்லாது போகலாம். ஆனால் கேட்டவுடன் பதில் சொல்லிவிடுவது நல்லது என்பது என் அபிப்பிராயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குப் பதில் சொல்லத் தகுதியிருக்கிறதா என்று யோசிப்பதை விட, தவறாக அவரைப் பற்றி அபிப்பிராயம் சொல்லி விடப் போகிறோமே என்று கவலைப்பட்டு அடக்கிக் கொள்வதை விட, கேட்டவுடன், ‘நீ இப்படி, இவ்விதம்’. என்று பதில் சொல்வது உத்தமம் என்பது என் எண்ணம். காரணம் ஒருநாளும் மற்றவரைத் துல்லியமாக எடை போட்டுக்காட்ட இன்னொருவரால் முடியாது. அதே சமயம் நம்மை அபிப்பிராயம் கேட்பதற்கு கர்வப்பட்டு விடவும் கூடாது. அந்த நேரம் அந்த மனிதர் பற்றி மனதில் என்னவித எண்ண அலைகள் ஓடுகிறது என்று உற்றுக் கவனிக்க, இதுவரை அவர் பழகி வந்ததால் உள்ளே ஏற்பட்டிருக்கும் ஒரு அபிப்பிராயக் கட்டுமானம் இயல்பாய் வெளியே வந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அதை வெளியே கொண்டு வந்து வார்த்தையாக்கிப் போடுவதுதான் மிகப் பெரிய தர்மகாரியம் என்பது என் கருத்து. எதிரே கேள்வி கேட்டவருக்கு என்ன பிடிக்குமோ அந்த விதமாய் பேசும் தந்திரசாலிகள் பலர் உண்டு, அவரால் அபிப்பிராயம் கேட்டவர்களுக்கு தீங்கு நேரலாம். மிகக் கூடுதலான புகழ்ச்சி வார்த்தைகளைக் கவனமாய் சேர்த்து வீசி அபிப்பிராயம் கேட்டவரை திக்குமுக்காட வைக்கலாம். வார்த்தைகளில் தேன் தடவி திகட்டத் திகட்ட உண்னக் கொடுக்கலாம். உண்மை ருசியற்றது. அதில் கசப்போ,இனிப்போ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்ட நேரத்தில் உள்ளே தோன்றும் உணர்வலைகளைக் கவனித்து இப்படி நினைக்கிறேன் என்று சொல்வதே கேட்டவர்க்கு உதவி. நட்புக்கு தரும் மரியாதை.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிகாந்த் கேட்டதும் நான் ஒரு நிமிட நேரம் மெளனமாய் இருந்தேன். பதினேழு பதினெட்டு வருட தொடர்பை, உள்ளே உள்ள கம்ப்யூட்டர் வெகுவேகமாய் திரட்டி ஒரு தகவல், ஒரு அபிப்பிராயம் தந்தது. அந்த அபிப்பிராயம் ஒரு உணர்வாக இருந்தது. இனி வார்த்தைகள் ஆக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் தொண்டையைச் செருமிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அருள் மிகுந்த வாழ்க்கை உங்களுடையது என்பதாய் தோன்றுகிறது. உற்று உற்று பல நேரம் உங்கள் முகத்தை-கை-கால் அமைப்பை-அவைகள் நகரும் விதங்களை, நீங்கள் நடப்பதை, நிற்பதை, அமர்வதை, சட்டென்று மற்றவர் வருகைக்கு, சிரிப்புக்கு எதிரொலிப்பதைப் பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அருள் நிறைந்த அமைப்பு நீங்கள். முகத்தில் அழகு தாண்டி ஒரு சுகம் இருக்கிறது. அதாவது உங்கள் &lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S3YXczPWmHI/AAAAAAAAArM/kze6oF3f5I4/s1600-h/rajini.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5437559383654832242" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 269px" alt="" src="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S3YXczPWmHI/AAAAAAAAArM/kze6oF3f5I4/s320/rajini.jpg" border="0" /&gt;&lt;/a&gt;முகத்தைப் பார்க்கும்போது ஒரு சுகம் ஏற்படுகிறது. நீங்கள் ரொம்ப திடசாலியான- ஆஜானுபாகுவான மனிதர் இல்லை. உங்கள் தசை அமைப்பு, கட்டுமஸ்தான விஷயம் இல்லை. ஆனாலும் உங்கள் அசைவு முழுவதிலும் ஒரு துடிப்பு தெரிகிறது. அந்தத் துடிப்பில் ஒரு ஒயில் இருக்கிறாது. அந்த ஒயிலான துடிப்பு தான் எல்லோரையும் கவர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“பாலா சார்.. நான் என்ன கேட்கறேன்.. நீங்க என்ன சொல்றீங்க”.&lt;br /&gt;&lt;br /&gt;“மனசுல பட்டதைச் சொல்றேன். நீங்க கேட்டதால சொல்றேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. நீங்க பேசுங்க” ரஜினி என்னை விஷயத்துக்கு நகர்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்கள் செயல்கள், உங்கள் தீர்மானங்கள் இதனால் கிடைக்கும் வெற்றிகள் உங்களால், உங்கள் முயற்சியால் கிடைப்பதை விட, வேறு ஏதோ ஒரு சக்தியால் கிடைக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் மிகக் கவனமாய், அற்புதமாய் ஆட்டி வைக்கப்படுகிறீர்கள். பிராபல்யம் நோக்கி படிப்படியாய் நகர்த்தப்பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு உள்மனதில் தெரிந்தும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் உங்களிடம் ஆட்டமும் இல்லை.உங்கள் பிராபல்யம் குறித்து உங்களிடம் பெரிய அலட்டலும் இல்லை. ரஜினிகாந்த் இப்படி எல்லாரிடமும் இனிமையாய் இருக்கிறாரே; சகஜமாய் பழகுகிறாரே; பந்தா இல்லையே.. இந்தப் பணிவு பொய்யா, நடிப்பா, நான் உற்று கவனித்திருக்கிறேன். மிக மிக இயல்பான பணியில் இருக்கிறீர்கள். ‘கொஞ்ச நேரம் தொடர்ந்து கம்பீரமான பந்தா அலட்டல் பண்ணுங்க’ என்றால் உங்களால் முடியாது. அல்லது தப்புத் தப்பாய் பந்தா பண்ணுவீர்கள், பிடிக்காது செய்யும் செயலைப் போல அது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணிவும் இறையருள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் வெற்றி என்னைத் தாக்கி தாழ்வு செய்யாதிருக்கட்டும் என்று எவரிடமோ கைகூப்பி வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள். வெற்றி என்பது ஆலகால விஷம். அதை விழுங்கிய எவரையும் அது ஆட வைக்கும். அதிகம் அதிர வைக்கும். அதை விழுங்கித்தான் ஆகவேண்டும். அதே சமயம் அது குடலுக்கும் போய்விடக்கூடாது. அது விழுங்கப்பட்டு தொண்டையிலேயே நிறுத்தப்படுவது தான் சிறப்பு, நிறுத்தப்பட்டு விட்டது உங்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் யூனிட்டில் வருகிற சாப்பாடே போதும் என்று சொல்ல முடிகிறது; அதை ரசித்துச் சாப்பிட முடிகிறது. சாதாரண அம்பாஸிடர் காரில் போக மனம் ஒப்புக் கொள்கிறது. நேற்று ஜெயித்தவர்கள் எல்லாம் காண்டசாவில் ஊரைக் கலக்கிக் கொண்டிருக்க, தன் செல்வத்தைப் பறையறிவிக்கிற எண்ணமே இல்லாது நகர முடிகிறது. இறையருளால் வெற்றியும், அந்த வெற்றியினோடு பணிவும் இருப்பதால்தான் இன்றைய வேலைகளில் தெளிவு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சினிமாவுக்கு என்ன வேண்டும். ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு எது எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க முடிகிறது.அப்படி தீர்மானிக்க எல்லோரையும் அணுகி அபிப்பிராயம் கேட்க முடிகிறது. நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத அபிப்பிராயம் சொன்னாலும் அதை அமைதியாய் செவிமடுக்க உங்களால் இயலுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ இப்போது என்னைக் கேட்கிறீர்களே, என்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று ,இது பெரிய விஷயம். நீங்கள் கேட்காமலேயே உங்களைப் புகழ்ச்சியில் குளிப்பாட்ட ஆட்கள் இருக்கிறார்கள், குளிப்பாட்டுகிறார்கள். எனக்கு கொஞ்சம் புகழ்ச்சி தேவைப்படுகிறது. கொடு என்றா இப்போது கேட்டீர்கள், இல்லையே, உண்மை பேசு என்றீர்கள். இவ்வளவு அருளும், அருளால் பணிவும் பெற்ற ரஜினிகாந்த் நடிகர்தானா. நடிகர் மட்டும்தானா.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைச் சார்ந்த உலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் செய்தது போதுமோ.. தலைவனாய் ஏற்று இருக்கிறார்கள். நீங்கள் வழிகாட்டியிருக்கிறீர்களா. இறைவன் கொடுத்த வரத்தை நீங்கள் முழுமையாய் பயன்படுத்தினீர்களா. இல்லை என்பது என் அபிப்பிராயம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-7709611598810633676?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/7709611598810633676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=7709611598810633676' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7709611598810633676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7709611598810633676'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/02/4.html' title='சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -4'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S3YXczPWmHI/AAAAAAAAArM/kze6oF3f5I4/s72-c/rajini.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-832726065077170646</id><published>2010-02-04T19:27:00.000-08:00</published><updated>2010-02-04T19:31:51.890-08:00</updated><title type='text'>உடையார் -  சில எதிரொலிகள்</title><content type='html'>&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S2uQwNVba5I/AAAAAAAAAq8/5YuQ16i3onQ/s1600-h/Image(949).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5434596533240294290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 300px" alt="" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S2uQwNVba5I/AAAAAAAAAq8/5YuQ16i3onQ/s400/Image(949).jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;பெருவுடையாரான இராஜராஜேச்சரமுடையார்க்கு, உடையார் இராஜராஜதேவர் எழுப்பிய ஆலயம் பற்றியும், அப்பேரரசன் காலத்து நிகழ்வுகளையும் கண் முன்னே காண்கின்ற அற்புதத்தைத் தகுதி உடையாரான தாங்கள் ‘உடையார்’ மூலம் சாதித்திருக்கிறீர்கள். வரலாறு எழுதும் எழுத்தாளர்களான எங்களது படைப்புகள் ஒரு போதும் கடைக்கோடியில் உள்ள ஒரு பாமரனிடம் சென்றடைந்தில்லை, காரணம் அவை புள்ளி விவரங்கள் தாம். அவை புள்ளி விவரங்கள் தாம், அந்தப் புள்ளிகளைக் கோலமாககிக் காட்டும் மாயாஜாலம் தங்களைப் போன்றவர்களால் மட்டுமே இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடையாரைப் படைப்பதற்கு தாங்கள் புரியும் களவேள்வி, கல்வெட்டுப் படிப்பு, தேடும் ஆதாரங்கள், உண்மை காண முயலும் தவிப்பு &lt;span class=""&gt;ஆகியவ&lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S2uQ9EccYgI/AAAAAAAAArE/nTLspM25jx8/s1600-h/Image(950).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5434596754192097794" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/S2uQ9EccYgI/AAAAAAAAArE/nTLspM25jx8/s320/Image(950).jpg" border="0" /&gt;&lt;/a&gt;ற்றை&lt;/span&gt; நன்கறிந்தவன் என்ற முறையில் எழுதுகிறேன். தங்களின் இப்புதினம் அஸ்வமேத வெற்றி. வரலாற்றில் ஒரு சில மாறுதல்களுக்காகச் சிலர் முணு முணுக்கலாம். ஆனால், அப்படியே வரலாறு எழுதுவது புதினமாகாது. ஆங்காங்கே கற்பனை எனும் தேனருவி பாய வேண்டும். அந்த அருவியின் குளிர்ச்சியை, மூலிகைக் கலப்பின் சுகத்தை என்னால் முழுதும் நுகர முடிந்தது. வரலாற்றுப் புதினம் எழுதுவது என்பது பின்னோக்கிப் பயணிக்கும் ஜால வித்தை. அப்பயணத்தில் எத்தனையோ மேடு பள்ளங்கள், வழுக்குப் பாறைகள், அத்தனையும் கடந்து வாசகர்களுக்கோர் சுகமான தடத்தைக் காட்டி, அதில் உடையாரைப் பயணிக்கச் செய்திருக்கிறீர்கள். தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இராஜராஜேச்சரமுடைய பரமசாமி என்றும் துணை நிற்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;குடவாயில் முனைவர்&lt;br /&gt;பாலசுப்ரமணியன்,&lt;br /&gt;தஞ்சாவூர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-832726065077170646?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/832726065077170646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=832726065077170646' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/832726065077170646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/832726065077170646'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/02/blog-post_04.html' title='உடையார் -  சில எதிரொலிகள்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/S2uQwNVba5I/AAAAAAAAAq8/5YuQ16i3onQ/s72-c/Image(949).jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-6918285997990883336</id><published>2010-02-04T07:03:00.000-08:00</published><updated>2010-02-04T07:05:52.686-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள்</title><content type='html'>&lt;span class=""&gt;                              சங்கருக்கு&lt;/span&gt; தூக்கம் என்பது மிக மிகப் பிடித்தமான விஷயம். குறிப்பிட்ட நேரத்தில் சோறு இல்லாமல் இருந்துவிடலாம். தூக்கமில்லாமல் இருந்துவிட முடியுமா? தூங்கினால் தானே சோம்பல் நீங்கும். சோம்பல் நீங்கினால் தானே சுறுசுறுப்பாக இருக்க முடியும். சுறுசுறுப்பாய் இருந்தால் தானே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். எனவே, வாழ்வை ஜெயிப்பதற்ககு தூக்கம் அவசியம் என்பது சங்கரின் வாதம்.&lt;br /&gt;&lt;br /&gt;           வாதம் சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;           ஆனால், எப்போது தூக்கம்... எவ்வளவு நேரம் தூக்கம் என்பது மிகப் பெரிய கேள்வி. எட்டரை மணிக்கு பள்ளிக்கூடம் என்றால், ஏழு ஐம்பத்தைந்து வரை தூங்குவது சங்கரின் வழக்கம். ஒன்பது மணிக்கு கல்லூரி என்றால், எட்டு நாற்பது வரையும் தூங்கலாம் என்பது அவன் கணக்கு. அரக்கப் பரக்க பல் தேய்த்து, குளித்து, புறப்பட்டு ஸ்கூட்டரில் போய் கல்லூரி வாசலில் இறங்கி, கட்டி வந்த இட்லியை வகுப்பாசிரியர் வரும் முன்பு குத்தி அடைத்து சாப்பிடுவது பழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;           உண்டவுடன் மறுபடியும் தூக்கம் வரும். ஆனால், கண் விழித்தபடியே தூங்குவதற்கு சங்கர் கற்றுக் கொண்டு விட்டான். ஒரு ஆசிரியர் போய் அடுத்த ஆசிரியர் வருவதற்குள் மேஜையில் சாய்ந்து தூங்கி விடுவான். கேண்டீனில் நல்ல சாப்பாடு. பிறகு புல்வெளித் தூக்கம். அப்புறம், மறுபடியும் வகுப்பறை. சோம்பலான பொழுதுகள். மாலை ஐந்து மணிக்கு மேல் சங்கர் உடம்பில் அந்த சுறுசுறுப்பு குடியேறும். பன்னிரண்டு மணி வரை ஆட்டம் போட முடியும்... பார்த்த சினிமாவையே அலுக்காமல் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;           பள்ளியும், கல்லூரியும் சங்கரை புரிந்து கொண்டன. கடைசி நிமிடம் படித்து தேர்வாகி விடுகிற மாணவன் என்று அறிந்து கொண்டது. ஆனால், வேலை செய்த கம்பெனி-சங்கரின் சோம்பலை ஏற்கவில்லை. தாமதமாக வருவதை விரும்பவில்லை. ‘கம்ப்யூட்டர்’ எதிரே உட்கார்ந்து கொண்டே தூங்குவதை அனுமதிக்கவில்லை. வேலை சம்பந்தப்பட்ட புத்தகத்தை விரித்து வைத்தபடியே தூங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையாய் எச்சரிக்கைத் தரப்பட்டது. மறுபடியும் இது தொடர-வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;           வீட்டில் உண்மையைச் சொல்லாமல், ‘கம்பெனி ஊத்தி மூடிக்கிச்சு’ என்றான். வேறிடத்தில் வேலை தேடப் போகிறேன் என்று வீட்டில் காசு வாங்கினான். வேலை தேடாது சென்னையில் எந்த இடங்களெல்லாம் தூங்கலாம் என்று தேடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;           தூக்கத்திற்குப் பிறகு உணவில் ஈடுபாடு. உண்ட பிறகு தூக்கம் தான் முக்கியம். கூடப் படித்தவர்கள் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று சம்பளம் வாங்க தினமும் கை செலவிற்கு வீட்டில் நூறு ரூபாய் வாங்குவதே இவனது லட்சியமாக இருந்தது. எதனாலோ சங்கருக்கு முன்னேற வேண்டுமென்ற ஆசை அறவே இல்லை. சோம்பலை உதற மனம் வரவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;           சோம்பல் ஒரு பழக்கம். படிந்து விட்டால் நீக்குவது மிக மிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ் பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது என்பவைகளில் சுவை வேண்டும். தோல்வியைக் கண்டு கலவரம் வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;           சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். தோல்வி பழக்கமானால், சோம்பல் பழக்கமாகும். தோற்றுப் போனதற்கு ஆயிரமாயிரம் சமாதானங்கள் உள்ளே தோன்றும். அதிருஷ்டமில்லை என்றும், படிப்பில் இந்தத் தேர்வுமுறையே தவறு என்றும் சொல்லத் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;           ‘எனக்கு விருப்பம் படிப்பு இல்ல’ என்று சொல்பவர்கள், வேறு ஏதாவது விஷயத்தில் முதன்மையானவராய் இருக்க வேண்டும். அங்கேயும் அவர்கள் ஒப்புக்குச் சப்பாணியாய் இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;           ‘எல்லாரும் முதலாவதா வந்துட்டா எப்படி? முப்பதாவதா வருவதற்கு ஆள் வேணுமில்லை’என்று ஏகடியம் பேசுவார்கள். எந்த வேலை கொடுக்கப்பட்டதோ அதில் விருப்பத்தோடு வேலையில் ஈடுபடுபவர்கள் வெகு சிலரே. விருப்பத்தோடு வேலையில் ஈடுப்படுவது ஒரு கலை. மேஜை துடைப்பதோ, பந்தி பரிமாறுவதோ, வாயிற்காப்போன் வேலையோ, வெள்ளை அடிக்கிற தொழிலோ-அது உள்ளே புகுந்துவிட்டால் அற்புதம் என்று பலரை சொல்ல வைக்க வேண்டும். அவனை நம்பலாம் என்ற பாராட்டைப் பெற வேண்டும். விருப்பத்தோடு வேலை செய்வதுதான் வெற்றியின் முதல் படி.&lt;br /&gt;&lt;br /&gt;           கல்யாண சமையல் கண்டிராக்டர் ஒருவர் சென்னையில் இருக்கிறார். சில கோடிகளுக்கு அவர் இப்போது அதிபதி. சமையல் எனக்கு பரம்பரைத் தொழில் அல்ல. அடுத்த போர்ஷனில் உள்ள ஒருவர் மைசூர்பாகு கிளறி விற்றுக்கொண்டிருந்தார். காலையில் தின்பண்டம் செய்து முடித்துவிட்டு, மாலையில் பெரிய கடாயைத் தேய்ப்பார். பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த நான், அவர் பெரிய கடாயைத் தேய்ப்பதைப் பார்த்து நானும் சுத்தம் செய்ய ஆசைப்பட்டேன். கடாயின் உட்பகுதி வெள்ளை வெளேர் என்று மாறும் வரை செங்கற்பொடியால் தேய்த்துக் கொடுத்தேன். அந்த மனிதர் எனக்கு மைசூர்பாகு செய்ய சொல்லிக் கொடுத்தார். மிகக் கவனமாக அதைச் செய்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;           விதிவசத்தால் என் உறவுகள் என்னை வீட்டை விட்டு துரத்தியபோது, பட்சணக் கரண்டி தான் வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. வியர்வை பொங்க அடுப்புக்கெதிரே உட்கார்ந்து நூறு பேருக்கு சமைப்பது ஒரு சுகம். வாலிப வயதில் சம்பளம் தந்தாலும், தராது போனாலும் சமையல் காண்டிராக்டர்களோடு சமைக்கப் போய் விடுவேன். விருந்து சமைக்காத நாள் வெறும் நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;           கல்யாண ‘டென்ஷன்கள்’ இல்லாத நாள் கொஞ்சம் கஷ்டமான நாள். ‘டென்ஷன்’ தான் சுகம். பரபரப்பு தான் சந்தோஷம். பிரச்சனைகள் தான் பலம். பிறர் பாராட்டே ஆசிர்வாதம், தங்கப்பதக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;          இடித்துரைத்தால் துடித்துப் போய்விடுவேன். இது இயல்பாகி விட்டது. வேலை சுத்தம் தான் வெள்ளை உடுப்பு போன்ற கவுரவம்.&lt;br /&gt;&lt;br /&gt;           ‘யாருய்யா சமையல்... நல்லா இருந்துதே? என்று பேசியபடியே கை கழுவ போவார்கள். காதும்,நெஞ்சும் குளிரும். அறிமுகப்படுத்திக் கொள்ளத் தோன்றாது. ஒரு இடத்தில் கொடி பறந்தால், பத்து இடத்திலிருந்து அழைப்பு வருவது நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;           இந்தியாவில் காசு சம்பாதிப்பது எளிது, நல்ல உழைப்பிற்கு மரியாதை அதிகம். ஒரு இடத்திலும் அலட்சியமில்லாமல் இருக்கின்ற புத்தி, இறைவன் கொடுக்கின்ற வரம். இது பிறவியிலேயே வரவேண்டும். இதைப் பெரிதாய் வளர்த்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;           ஓய்வு என்பது சோம்பலின் நண்பன். ஓய்வை உள்ளே நுழையவிட்டால், சோம்பலும் வரும்.     அடுத்த வேலை தான் ஓய்வு. இன்னொரு சவால் தான் இன்னொரு தினம்.&lt;br /&gt;&lt;br /&gt;           எனக்கு நான்கு மணி நேரத்தூக்கம் போதும். புத்தி சுறுசுறுப்பாகி விடும். சோம்பலற்று இருக்க பிரச்சனைகள் சந்திப்பது நல்லது. ஒரே நாளில் மூன்று கல்யாணங்கள் ஒத்துக் கொள்வதும் .நாலைந்து விருந்துகள் ஏற்பாடு செய்வதும் எனக்கு குதூகலமான விஷயம் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;           இம்மாதிரி வேலை பளு நினைவாற்றலை உசுப்பி விடும். நல்ல நினைவாற்றல் உங்களைத் தூங்கவிடாது. அலாரமில்லாமல் எழுந்திருக்க வைத்து விடும். அலாரம் அடித்த பிறகும் தூங்குவது என்பது நோயுற்றவர்களுக்கே ஏற்படும். சோம்பல் ஒரு நோய்.&lt;br /&gt;&lt;br /&gt;           அவருடைய சமையல் சுவை, பந்தி விசாரணை, கட்டுசாதக்கூடை, பருப்புத் தேங்காய் உட்பட பட்சணப்பை, தாம்பூலப் பரிசு சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;     அடுத்த வீட்டுக்காரருக்கு உதவியாக பட்சணக்கடாய் தேய்த்துக் கழுவிய அவர், இன்று சுபமாக இருப்பதற்கு சோம்பல் என்ற சொல்லே அவரது அகராதியில் இல்லாததே காரணம். வாழ்க்கையில் வசதிகள் வந்த பிறகும்.ஓய்வு நாடாத உழைப்பு தான் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;           சோம்பலை எதிர்க்க என்ன வழி?&lt;br /&gt;  &lt;br /&gt;           குறைவாக உண்ணுதல். அரை வயிறு உணவு பசியை அடக்கும். உறக்கம் வரவழைக்காது. உறங்கும் போது உறக்கத்தை விரும்பாமல், எழுந்தும் செய்யவேண்டிய வேலைகளை நினைத்துக் கொண்டு தூங்குவது நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;           தூக்கம் கலைந்த பிறகு தூக்கம் தொடருவது பேராபத்து, ‘கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேன்’ என்று சொல்வது கேவலம். மூளையிலிருந்து உறக்கம் கலைந்த மறுநிமிடம், எழுந்துவிட வேண்டும். பல் தேய்க்க நீர்பட்டவுடன் புத்தி சுறுசுறுப்பாகி விட வேண்டும். முதல் வேலையான பல் தேய்த்தலை முழு முனைப்போடு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;           அடுத்த வேலையான முகம் கழுவுவதும். தேநீர் அருந்துதலும், செய்திதாள் வாசித்தலும் கூடுதலான கவனத்தோடு செய்யப்பட வேண்டும். எழுந்ததும் முதல் அரை மணியை சோம்பலோடு கழித்தால், அந்த நாள் முழுவதும் உற்சாகம் குறைந்தபடிதான் காணப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;           நுரையீரல் முழுவதும் காற்றை உள்ளிழுத்து செய்கின்ற யோகாசன உடற்பயிற்சிகள் சோம்பலை விரட்ட உதவும். புத்திக்குள் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். குறைவாக உண்ணுதல் போல்  குறைவாக பேசுதலும் அயர்ச்சிக்கு எதிரானது. உரக்கக் கத்தி ஆரவாரிக்கிற போது, சக்தி சிதறல் அதிகரிக்கிறது. இதனால் உடம்பு துவண்டுபோகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;           ஆனால் மூளையில் அலட்டல் மிச்சமிருக்கிறது. அந்த அலட்டல்-கனவாக உங்களை அலைக்கழிக்கும். நல்ல தூக்கம் இல்லாது போகும். பேச்சு குறைத்தால்,நன்கு தூங்கலாம். நல்ல தூக்கம், நாலு மணி நேரம் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;           ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கழித்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிருஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார். குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்’. என்று பட்டுக்கோட்டையாரின் பாடல் ஒன்று உண்டு . இது அர்த்தம் பொதிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;           அநியாயமாய் ஏகத்துக்கும் தூங்குபவரை கேலி செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;           தூக்கம் ஒரு மருந்து, அது,அளவு தாண்டக்கூடாது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும்,எப்போதும் பாட்டு கேட்பதும் தூக்கம் கவிழ்க்கும்.பொழுதுபோக்கு என்பது பிழைப்புக்கான வேலையாக இருந்தால், அதாவது வேலையே பொழுதுபோக்காக இருந்தால் வெற்றி நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;           பொழுதுபோக்கிற்கான சினிமா நாடக,இசை,இலக்கியம் போன்றவற்றின் மேன்மக்கள் அந்த பொழுதுபோக்கிற்காக மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஊன் உறக்கமின்றி அலைகிறார்கள். உழைப்புதான் பிரபலமாவதற்கு ஓரே வழி. அதிருஷ்டத்தில் உயர்ந்தாலும், உழைப்பே நிலையான மரியாதையைத் தரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-6918285997990883336?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/6918285997990883336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=6918285997990883336' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/6918285997990883336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/6918285997990883336'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2010/02/blog-post.html' title='கற்றுக் கொண்டால் குற்றமில்லை - சோம்பல் அறுங்கள்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-3732266799788056703</id><published>2009-12-02T17:04:00.000-08:00</published><updated>2009-12-02T17:49:36.623-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி  ராம்சுரத்குமார்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளொளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார். &lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/SxcR7CsZkII/AAAAAAAAAqs/6BJItEnYunE/s1600-h/Picture_001.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5410813183341990018" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 286px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/SxcR7CsZkII/AAAAAAAAAqs/6BJItEnYunE/s400/Picture_001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்க நாணயமயமான சிரிப்பு.. தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்து விட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார். பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படி சாத்தியம்? கேட்டார்கள். “இந்தப் பெயரைச் சொன்னால் போதும்.. எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவை கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி, உணவு வாங்க ஒரு கொட்டாங்சச்சி, கையிலே சிறு கோல் . இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை யோகி ராம்சுரத்குமார் என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்?’ என்று கேட்டபோது “கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயர் எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார் என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் மனைவிக்குள் சண்டை, மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார். ‘ரொம்ப நல்லது, செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன். அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னாயிற்று..?&lt;br /&gt;&lt;br /&gt;எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“பகவான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்தேன், வேலை செய்யவில்லை. மாறாக என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்துவிடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரை சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார். உங்களுடைய பக்தராக”,என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு செளக்கியமாக வாழ்ந்தது.&lt;br /&gt;பக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்.. வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்.. அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது ‘வந்தே மாதரம்’ என்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றும் ‘ராம ராம ராம’ என்றும் ‘ஓம் ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, யோகி ராம்சுரத்குமாரை தரிசித்து விட்டுப் போகலாம் என்று வந்தார். தான் திருப்பதிக்கு போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்கு போக வேண்டுமா..? இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் சரியென்று சொல்லி, ‘வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்த பிச்சைக்காரன் யார் என்று கேளுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்க சொன்னது ஞாபகம் வந்தது. ‘பெருமாளே.. திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்?’ என்று உரக்க வினவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ நேனே” என்று கருவரையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெளிவாக புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது.. தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்து போய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு..&lt;br /&gt;அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான், அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக் கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, “யோக்கியதை இருந்தால் கூப்பிடுங்கள், எனக்கு யோக்கியதை இருந்தால் பேசுங்கள், எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்த கதவு திறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘உனக்கு என்ன வேண்டும்..?’&lt;br /&gt;&lt;br /&gt;‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. என்க்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா ? கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பதறினார். இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா? என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார். எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது. வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுக்கோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துக்கள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது, உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞானியிடம் என்ன கேட்பது..? நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளொளியைப் பெருக்கி, இறை தரிசனம் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;யோகி ராம்சுரத்குமார்....20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலும் பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலை செங்கம் ரோடில் அவருடைய ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக &lt;span class=""&gt;நடக்கி&lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/SxcS3RflyII/AAAAAAAAAq0/pr-qXiJCgNM/s1600-h/Picture_004.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5410814218106947714" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 286px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/SxcS3RflyII/AAAAAAAAAq0/pr-qXiJCgNM/s400/Picture_004.jpg" border="0" /&gt;&lt;/a&gt;றது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“ யோகி ராம்சுரத்குமார்!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி ராம்சுரத்குமார்!&lt;br /&gt;&lt;br /&gt;யோகி ராம்சுரத்குமார்! ”&lt;br /&gt;&lt;br /&gt;என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்” என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-3732266799788056703?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/3732266799788056703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=3732266799788056703' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3732266799788056703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/3732266799788056703'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2009/12/blog-post.html' title='திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி  ராம்சுரத்குமார்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/SxcR7CsZkII/AAAAAAAAAqs/6BJItEnYunE/s72-c/Picture_001.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-7559923783751480072</id><published>2009-11-30T16:47:00.000-08:00</published><updated>2009-11-30T17:27:03.269-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு, பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதை கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விளைவு மிகச் &lt;a href="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/SxRo5Me40WI/AAAAAAAAAps/H7ESnPQCBms/s1600/Picture+(10).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5410064384191418722" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 202px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/SxRo5Me40WI/AAAAAAAAAps/H7ESnPQCBms/s320/Picture+(10).jpg" border="0" /&gt;&lt;/a&gt;சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு “யோகி ராம்சுரத்குமார்” என்று பின்னால் பெயர் வந்தது. இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளைநிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது. ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க... “இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். ‘எத்தனை மகான்களை தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனிதமான இடம்.’. அவருக்கு மெய்சிலிர்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவலிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது. இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அதுவே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது’ . இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன... இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்... இந்தத் தவிப்பு... இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே... இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே, அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ?. உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறு விதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியமால் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப்படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்கு கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது. அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும், மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. இன்னும் சற்று வயதான பிறகு, கடவுள் தேடலை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, கடவுள் தேடலை கடைசி வரை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் இருந்தது. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.&lt;br /&gt;கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தை கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தக் பள்ளிக்கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. அவர் நிர்வாகத்திடம் முறையிட, ‘இது போதும்’ என்று நிர்வாகம் அலட்சியப்படுத்த, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பையன்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பள்ளிக்கூடம் சரியாகும்வரை வரத் தேவையில்லை என்று கட்டளையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாகம் எகிறியது. ஆனால், இவர் விடாப்பிடியாக நின்றார். ஊர்மக்கள் ஒன்று கூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம் நடக்கத் துவங்கியது. சிறிய வருமானம்;ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது, சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்... அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை.. பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. அவ்வாறே, தெற்கே போக ரயில் ஏறினார். டிக்கெட்டையும் பணப்பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டார். ஆனால், மூன்று ரயில் நிலையங்கள் தாண்டுவதற்குள் டிக்கெட்டும், பணப்பையும் காணாமல் போயின! பதறிப் போய் நான்காவது ரயில் நிலையத்தில் கீழிறங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது? ரமண மகரிஷியைத் தேடிப் போவதா.. அரவிந்தரை நோக்கிப் போவதா.. மெளனமாக வீடு திரும்புவதா? ஆரம்பித்த காரியம் சுணங்குகிறதே. ஏன் இப்படி? கடவுள் தேடலை கடவுளே விரும்பவில்லையோ?&lt;br /&gt;&lt;br /&gt;தயங்கினார்; குழம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார். ஆசிரியர் அவரை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யார் கையேந்தி கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது. கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை, ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல்வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை; உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்ததுதான் தெரிந்து கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அதே நேரம் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரிய வர, இடிந்து போனார். அற்புதமான இரண்டு ஞானிகளுடன் நெருங்கி இல்லாமல், மறுபடியும் குடும்ப பாரம் இழுக்க வந்தேனே.. என்று கவலைப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரை இழக்க விரும்பவில்லை. எனவே ராமதாஸை நோக்கி விடுமுறையில் பயணம் துவங்கினார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். “இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும் கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். அதனால் ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாக பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது, கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்கு போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமமே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.&lt;br /&gt;உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன &lt;span class=""&gt;செ&lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/SxRqLeEwwsI/AAAAAAAAAp0/cMmv62n3s9s/s1600/Picture+(121).jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5410065797662950082" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 245px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/SxRqLeEwwsI/AAAAAAAAAp0/cMmv62n3s9s/s400/Picture+(121).jpg" border="0" /&gt;&lt;/a&gt;ய்கிறோம்&lt;/span&gt; என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப்பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை; கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-7559923783751480072?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/7559923783751480072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=7559923783751480072' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7559923783751480072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/7559923783751480072'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2009/11/blog-post_30.html' title='திருவண்ணாமலை வந்த காசி மகான் - யோகி ராம்சுரத்குமார்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/SxRo5Me40WI/AAAAAAAAAps/H7ESnPQCBms/s72-c/Picture+(10).jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-6338156324290009200</id><published>2009-11-28T09:41:00.000-08:00</published><updated>2009-11-28T10:10:53.492-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -3</title><content type='html'>&lt;p&gt;சந்தேகம் வந்தபோது மனசு சட்டென்று வெகுதூரம் பின்னோக்கிப் போயிற்று.&lt;/p&gt;&lt;p&gt; தர்மயுத்தம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எனக்கு ரஜினிகாந்த் அவர்களோடு பழக்கம் ஏற்பட்டது. ரஜினிகாந்தின் பரபரப்பான நேரம் அது. வெற்றிகள் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு விதத்தில் அவர் எல்லோராலும் கவரப்பட்டார். அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் உச்சக்கட்டம் அடைந்திருந்த காலம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;சாவி பத்திரிக்கையின் சார்பாய் அவரை பேட்டி காணச் சென்றிருந்தேன். காலை எட்டு மணி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;“டிபன் சாப்பிட்டீங்களா”. ரஜினி கேட்டார்.&lt;br /&gt;“இல்லை”. &lt;/p&gt;&lt;p&gt;“கார் எங்கே’- தேடினார்.&lt;br /&gt;அவருடைய கார் எங்கேயோ போயிருந்தது.&lt;br /&gt;“எதில் வந்திருக்கிறீர்கள்”.&lt;br /&gt;“ஸ்கூட்டர்”&lt;br /&gt;“வாங்க போவோம்”&lt;br /&gt;&lt;br /&gt;நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய, ரஜினிகாந்த் என்னிடமிருந்து வண்டியை வாங்கிக் கொண்டார். நான் பிலியனில் ஏறிக் கொள்ள, வண்டியை அவர் ஓட்டினார். டிரைவ்-இன் ஓட்டலுக்கு வண்டி போயிற்று,&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் அதிகமில்லாத அந்த நேரத்தில் நிறைய மனம் விட்டுப் பேசினார். அவர் பேசிய விஷயங்கள் பலது எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன. என் வாழ்க்கையில் அந்தப் பேச்சுகள் மிகவும் உதவின. அவர் சொன்ன நேரடி வாக்கியங்கள் நினைவில் இல்லை. அதனால் அதன் சாராம்சம் சொல்கிறேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;“எவர் உயர்ந்தாலும், உன்னதமான நிலைக்கு வந்தாலும் அவரைத் தூற்ற, அந்த நிலையிலிருந்து அவரைச் சாய்க்க, உலகத்தின் ஒரு பகுதி கடுமையாய் முயலும், அதுவும் மிகச் சாதாரணமாய் இருந்தவர் முன்னேறினால் அவருக்கு எதிரிகள் உடனே உருவாகி விடுவார்கள். &lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxFkJHUBhNI/AAAAAAAAApk/m0GhMM3Zeqk/s1600/scan0008.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409214735193310418" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 228px" alt="" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxFkJHUBhNI/AAAAAAAAApk/m0GhMM3Zeqk/s320/scan0008.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு யோக்கியதை இருந்தும் உயர்வு கிடைக்கவில்லை. யோக்கியதை இல்லாத இவனுக்குக் கிடைத்து விட்டது என்று சிலர் பொறாமைப்படுவார்கள். இவ்வளவு உயரத்துக்கு இவர் வந்துடுவார்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா இன்னும் க்ளோசா ஒட்டிட்டிருந்திருப்பேனே. தெரியாத போயிடுத்து. இப்ப ஓட்ட ட்ரை பண்ணுவோம். ஒட்டவிடலைன்னா தொந்தரவு பண்ணுவோம். எனக்கு தெரியும்டா உன்னைப் பத்தி, என்கிட்ட டீ வாங்கி குடிச்சவந்தான் என்று சொல்லி எரிச்சல் மூட்டுவோம் என்று வேறு சிலர் முயல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டக்டரா, கன்னடமா, தமிழ்,  இங்கிலீஷ்,  ஃப்ரெஞ்ச் எதுவும் தெரியாதா. டான்ஸ் வராதா...நாவல் படிக்கிற பழக்கம் இல்லையா. ஸ்கேட்டிங், ரைஃபிள் ஷுட்டிங். ஒண்ணும் தெரியாதா. பின்ன எப்படி இவ்வளவு உயரத்துல. ஏதோ குருட்டு அதிர்ஷ்டமா. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவுத்துவிட்டு உனக்கு என்ன தெரியலை பார்னு குழப்பி வுட்டுரலாம். இப்படியும் சிலர் முயல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லோரையும் அமைதியாய் அதிகம் எதிர்ப்பு காட்டாது சமாளித்தாக வேண்டும். அளவுக்கு மீறிய பொறுமை வேண்டும். பொறுமையே சிறிதும் இல்லாத நான் வன்முறையாய், வலுக்கட்டாயமாய் மெளனத்தை-அமைதியை வரவழைத்துக் கொள்கிறேன். சில சமயம் சிதறடித்து விடுகிறேன். நான் பெரிய தத்துவவாதியில்லை, நான் அதிகம் புத்தகம் படித்ததில்லை. ஆனால் இரவில் மனம் நொந்து புரண்டு படுக்கிறபோது எனக்கு நடந்த வேதனைகளின் வேர் எது என்று யோசிக்கிறபோது வாழ்க்கை மொத்தமும் பிடிபட்டுப் போவது போல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்கள் ஆரம்பத்தில் இப்படித் தான் வேதனைப்படுத்துவார்கள். தாங்கிக் கொள் என்று தெளிவாய் தெரிகிறது. எதிர்த்தால் சரிவு நிச்சயம். அதனால் பிறர் ஹிம்சையைத் தாங்கி அமைதியாய் நமது அடுத்த வேலையைச் செய்ய.. இன்னும் உயர்வு வரும். மனிதர்கள் தாக்கவே முடியாத உயர்வுக்குப் போய்விட வேண்டும். அதற்கு வேறு எதிலும் கவனம் சிதறாது உழைக்கவேண்டும்.”&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இது ரஜினிக்கு மட்டுமல்ல, பாலகுமாரனுக்கும் பொருந்தும். செய்யும் வேலைக்குக் கேலி வரும். அது மனிதர் குணம். நமக்கு அடுத்த வேலை தான் கவனம். கேலி சாதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளாய் அன்று இருந்த ரஜினி, வார்த்தைகளை உள்வாங்கி ஜெயித்திருக்கிறார். உங்களுக்கு இது அது தெரியுமா எனக் கேட்டு, இழிவுபடுத்துவார்கள் என்று நினைத்த ரஜினிகாந்த், இன்று சித்தர்கள் பாடல் பற்றி சொல்லச் சொல்லி கேட்கிறார். ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் தத்துவங்கள் பற்றி படிக்கிறார். ரமணர் வாழ்க்கை பற்றியும், வாக்கு பற்றியும் அதிகம் தெரிந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தத்துவங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் பெருமையான விஷயம் இல்லை. அவைகளை உள்வாங்கி ஒட்டி வாழ்தல் முக்கியம் என்பது புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் கோபப்படுவதில்லை. ஆனால் தீர்மனாமாய் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிகாந்த் இனிமையாய் இருக்கிறார். ஆனால், எல்லாவற்றுக்கும் இணக்கமாய் இருந்து விடுவதில்லை. மனசு விட்டு பாராட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பாலகுமார் சார், அந்த காலேஜ் அட்மிஷன் பத்தி யுவராணி பேசறாது நல்லாயிருந்தது.’&lt;br /&gt;&lt;br /&gt;நான் அன்றைய ஷுட்டிங்கிற்கு எழுதிக் கொடுத்து விட்டு வேறு வேலைக்குப் போய் விட்டேன். ஆனாலும் கூப்பிட்டு பாராட்டி, “ரஜினி சார்.. நான் நேத்து ஷுட்டிங்க்கு வரலைன்றதுக்காக இப்படி கூப்பிட்டு பாராட்டறா மாதிரி..”&lt;br /&gt;&lt;br /&gt;“கடவுளே.. மனசாரப் பாராட்டக் கூடாதா. ஏன் சந்தேகமாவே பார்க்கறீங்க. எனக்கு பிடிக்காத விஷயத்தை மூஞ்சிக்கு நேர சொல்லி விடுவேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;“இதுவரைக்கும் சொன்னதில்லை”&lt;br /&gt;&lt;br /&gt;“பிடிக்காதது எதுவும் இதுவரை உங்களாண்ட எனக்குத் தெரியலை. சொல்லலை”&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சட்டென்று ஒருநாள் மெத்தென்ற குட்டு விழுந்தது.&lt;/p&gt;&lt;p&gt;“இந்த ஸீனை இப்படி ஆரம்பிச்சா என்ன..” அவர் சொல்ல ஆரம்பிக்க, அதனுடைய நூல் புரிந்து கொண்ட நான் அதே விதமாகவே யோசித்து வைத்திருந்த சந்தோஷத்தில் குறுக்கிட்டு, “க்ரெக்ட்.. இது சொன்னதுக்கப்புறம் அந்த டயலாக் தொடர்ச்சிய..”&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று உற்றுப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாலகுமார் சார்.. உங்கக்கிட்ட ஒரு தப்பு இருக்கு.. சொல்லட்டா”.&lt;br /&gt;“சொல்லுங்க சார்”.&lt;br /&gt;“ஸ்பீட் ரொம்ப ஜாஸ்தி. இது தேவையில்லை. என்னை முழுக்கப் பேசவிடறதேயில்லை நீங்க. ஒரு இடம் தொட்டவுடனே மடமடன்னு கம்ப்யூட்டர் கணக்கா போயிடறீங்க. போலாம். தப்பில்லை. எதிராளியைப் பேசவிட்டு அப்புறம் உங்க நேரம் வரபோது பேசுங்க”.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சார். ஸீன் சொல்லுங்க”&lt;br /&gt;சொன்னார். சொன்ன பிறகு கருத்து கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஸீன் ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. முடித்த விதம் உறுத்தியது.&lt;br /&gt;சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“பார்த்தீங்களா.. கரெக்ட்டுன்னு கத்தினீங்களே.. இப்ப இது திசைமாறி இருக்கறது புரியுதா”&lt;br /&gt;&lt;br /&gt;“புரியுது சார்..” நான் ஸீனைத் தொடர்ந்து சிந்திக்க தள்ளிப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று போகும் முன் என்னைத் தேடி கை குலுக்கிவிட்டு முகத்தை உற்றுப் பார்த்து விட்டுப்போனார். அந்த வினாடி நேரத்தில் எனக்கு அவர் எண்ணம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“புத்தி சொல்வது போல் எங்கோ உங்கள் மனதை மிதித்து விட்டேனா. ஆமெனில் மன்னிக்க,” முகம் பேசியது. மறுநாள் நேரடியாய் வாய் வார்த்தையாகவும் சொல்லப்பட்டது.&lt;/p&gt;&lt;p&gt;“ஆமா.. பாலகுமார் சார். என்னைப் பத்தி என்ன நினைக்கறீங்க. என்கிட்ட ஏதாவது குறை இருக்கா”. ஒருநாள் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொன்னேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-6338156324290009200?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/6338156324290009200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=6338156324290009200' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/6338156324290009200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/6338156324290009200'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2009/11/3.html' title='சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார் -3'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxFkJHUBhNI/AAAAAAAAApk/m0GhMM3Zeqk/s72-c/scan0008.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-4590291292121058512</id><published>2009-11-27T23:37:00.000-08:00</published><updated>2009-11-28T00:56:36.818-08:00</updated><title type='text'>சொர்க்கம் நடுவிலே  - பாலகுமாரன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDiIsADGuI/AAAAAAAAApc/EaiQoONUsxw/s1600/scan0002.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409071791350160098" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 304px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDiIsADGuI/AAAAAAAAApc/EaiQoONUsxw/s400/scan0002.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;"ஜெய விஜயீ பவ"&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;என் பெயர் கேசவன் நாராயணன். சோழ நாட்டின் உபதளபதி. நான் அந்தணன். ஆனாலும் போர் தொழில் செய்பவன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;நான் இறந்து ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDWKjTRXEI/AAAAAAAAApM/SrZlQvl2QSI/s1600/scan0001.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்போது பூமியிலுமில்லாமல் பிரபஞ்சத்திலுமில்லாமல் இடையிலே ஆகாயத்தில் அலைக்கழிகிறேன். இங்கே காலம் வித்தியாசமானது. சூரியன் உதிப்பது , மறைவது என்று எதுவுமே இல்லை. எந்நேரமும் மங்கலான ஒரு வெளிச்சம் மட்டுமே உள்ளது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDgvracNSI/AAAAAAAAApU/lrmEBQSETCo/s1600/scan0001.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409070262184064290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 367px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDgvracNSI/AAAAAAAAApU/lrmEBQSETCo/s400/scan0001.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமா ? பனி படர்ந்த நேரத்து விடியற்காலை வெளிச்சம் போல மிகப் பிரம்மாண்டமான வெளி . அதில் தனியே இருப்பது போன்ற உணர்வு. பூமியில் பார்ப்பதும், கேட்பதும் உடல் வழியே நடைபெறுகிறது அல்லவா ? அது இங்கே சாத்தியமில்லை. எல்லாமே உணர்வு தான். &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;.......................................... கீழே தொண்டை நாட்டின் ஒரு பகுதியான திருவான்மியூருக்கும் , மயிலாப்பூருக்கும் நடுவே ஒரு இடத்தில் ஒரு பெண் நடந்து கொண்டிருக்கிறாள் ...........................திடீரென்று அவளைச் சுற்றி ஒரு வெற்றிடம் உண்டானது. &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இறப்பதற்கு சில விநாடிகள் முன்பு மனிதர்களைச் சுற்றி இப்படி ஒரு வெற்றிடம் உண்டாகும். அந்த வெற்றிடம் உடம்புக்குள் இருக்கின்ற உயிர்ச்சக்தியை உறிஞ்சி வெளியே இழுத்துப் போடும். அப்படி இழுத்துப் போடுவதற்கு சுற்றிலும் இருக்கின்ற சக்திகள் உதவி செய்யும் . அப்படித் தான் இந்தப் பெண்ணை சுற்றியும் வெற்றிடம் உண்டாகியது. அவள் உயிரை உறிஞ்சுவதற்கு வெளியே இருக்கின்ற சக்திகளும் தயாராக இருந்தன. .......&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-4590291292121058512?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/4590291292121058512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=4590291292121058512' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/4590291292121058512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/4590291292121058512'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2009/11/blog-post_8193.html' title='சொர்க்கம் நடுவிலே  - பாலகுமாரன்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDiIsADGuI/AAAAAAAAApc/EaiQoONUsxw/s72-c/scan0002.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-8413666915319968271</id><published>2009-11-27T22:23:00.000-08:00</published><updated>2009-11-27T23:36:33.365-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>கற்றுக்கொண்டால் குற்றமில்லை</title><content type='html'>&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அறிதல் என்பது ஒரு மனிதனின் ஆயுள் முழுவதும் பரவிக்கிடக்கிற விஷயம். அறிதலில் வேகமும், அறிய வேண்டிய தேவையும் மனிதனின் ஒரு காலகட்டத்தில் அதிகமாகவும், ஒரு காலகட்டத்தில் குறைவாகவும் இருக்குமே தவிர, அறிதலற்ற வாழ்க்கை என்பதில்லை. அறிதல் என்பது இவ்வுலகத்தின் தொடர்ந்த நியதி. அறிதலில் இன்னொரு விதமான வார்த்தை பாகுதான் கற்றுக்கொள்ளல். இந்த கட்டுரையை படிக்கவும் இதை பற்றி சிந்திக்கவும் நீங்கள் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இதை படிப்பதின் மூலமும் ஒன்றை கற்றுக் கொள்கிறீர்கள். சிந்திக்கிறீர்கள், படித்ததைப் பற்றி சிந்திப்பது கற்றுக் கொள்வதில் ஒரு பகுதி, ஒரு பரிமாணம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதைப் போலவே பார்ப்பதும், பேசுவதும், எதையோ இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. கற்றுக் கொள்வது என்றால் என்ன? செய்ததை செய்வது. கொச்சையாக சொன்னால் காப்பியடிப்பது, அப்படி செய்வதில், அல்லது காப்பியடிப்பதில் ஒரு வளர்ச்சியை காண்கிறீர்கள். நெருப்புக்கு பயந்த ஆதி மனிதன், காட்டு தீயில் பொசுங்கி போன கன்று மாமிசத்தை தின்று பார்த்து விட்டு ஒரு ருசியை கண்டு கொண்டான். ஒரு உணவை இப்படி பக்குவப்படுத்தலாமோ என்று கற்றுக் கொண்டான். அப்படி கற்றுக் கொண்டதுதான் இன்றைய இடியாப்பம், வடைகறியாக, பிஸ்கட் ஐஸ்கிரீமாக, தந்தூரி சிக்கனாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடையும், உறைவிடமும் இப்படி மாறி இருப்பதை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ளமுடியும், ஒரு தனி மனித வளர்ச்சியில் இந்த கற்றுக் கொள்வதுதான் அளவிடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கற்றுக் கொள்வது என்பது தனி மனித வளர்ச்சி என்பது மட்டுமல்லாது, சமூக வளர்ச்சியாகவும் கருதப்படும். வளர்ச்சி தலைமுறை தலைமுறையாக வளரும் விஷயம். இந்த வளர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு நிர்பந்தம். நான் கம்ப்யூட்டர் தெரிந்து கொள்ளாமலேயே மத்திம வயதை தாண்டிவிட்டேன். என் பிள்ளை கற்றுக்கொண்டே ஆகவேண்டும், இல்லாவிடில் அவன் வாழ்க்கை சிக்கலாகும். இது அவனுக்கு ஏற்பட்ட நிர்பந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே கற்றுக்கொள்வது காப்பியடிப்பது மட்டுமல்ல அதை தாண்டியும் போவது. அதே பதினாறாம் வாய்ப்பாடுதான். கருவிதான் வேறு. கற்றுக்கொண்டே இருப்பதில் முன்னேறிக் கொண்டே இருப்பதும் ஒரு நிர்ப்பந்தம்தான். சரி, ஏன் கற்கவேண்டும்? வாலிழந்த நரிக்கூட்டத்தில் வாலுள்ள நரி விநோதம். பைத்தியம். நெருப்பு எதற்கு என்று பச்சையாக மாமிசம் சாப்பிட்டால் இளக்காரமாகும். ஏதோ போல் இருக்கும். உணவில் மட்டுமல்ல இனி குடுமியும், கோவணமும்தான் உடை. என் மூதாதையர்கள் அப்படிதான் இருந்தார்கள் என்று நாம் பேசக்கூட அனுமதிக்கவில்லை. பேண்ட் அத்தியாவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றுக்கொள்வதில் ஊரோடு ஒத்து வாழ் என்கிற அர்த்தமும் உள்ளடங்கி இருக்கிறது. அப்படி ஒட்டவில்லையெனில் ‘பல கற்றும் கல்லார்’ என்று சொல்லப்படாமல் இருப்பதற்கே &lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDOoB-27YI/AAAAAAAAApE/OamgvxpqFjE/s1600/DSC_0087.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409050339594136962" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 266px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDOoB-27YI/AAAAAAAAApE/OamgvxpqFjE/s400/DSC_0087.JPG" border="0" /&gt;&lt;/a&gt;நாம் கற்றாக வேண்டும். எதற்கு எழுதப் படிக்க தெரிய வேண்டும் என்ற காலம் போய் நிச்சயம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற காலம் வந்து விட்டது. நானும் உங்களுக்கு சிலதை கற்றுக்கொடுக்கப் போகிறேன். நான் எங்கோ கற்று கவனித்து தெளிந்து செயல்பட்டதை உங்களுக்கு சொல்லப்போகிறேன். நீங்கள் இதற்கு பிற்பாடு கவனித்து தெளிந்து பிறருக்கு நான் சொன்னதை காட்டிலும் தெளிவாய் சொல்லக்கூடும். இப்படிதான் மனிதன் இனம் வாழ்ந்தது. இனியும் வாழும்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு யாரும் சொல்லித் தராததை சொல்லப் போவதில்லை. இவை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம், தெரிந்திருப்பின் கட்டுரையை புறக்கணித்து விடுங்கள். தெரியாதிருப்பின் கவனித்துக் கொள்ளுங்கள். நான் விஞ்ஞானி இல்லை. வேறு எந்த ஞானமும் கைவரப்படவில்லை. என் நாற்பத்தேழு வயதில் நான் ஊன்றி கவனித்து பழகியவைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்புகிறேன். எனவேதான் கற்றுத்தருகிறேன் என்ற கர்வம் காட்டுவதுகூட செய்யாதிருக்க தோன்றியது. அனுபவ பகிர்தலை அவசியமான பாடம் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;       என்&lt;/span&gt; அனுபவத்தை நீங்கள் அறிந்து கொண்டால் அதாவது கற்றுக் கொண்டால் பெரிய குற்றம் வந்துவிடாது என்கிற தலைப்பு கொடுத்தேன். இது அவையடக்கமாக சொல்லப்பட்ட தலைப்பு அல்ல. ஆராய்ந்து ஆராய்ந்து ஆதார விளக்கங்களுடன் அதற்கான புத்தக குறிப்புடன் இந்த கட்டுரை எழுதப்படவில்லை என்பதற்காகவே இந்த தலைப்போடு இக்கட்டுரையை தொடர்கிறேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;காலையில் எழுந்திருப்பது என்கிற விஷயத்திலிருந்து பேசத் துவங்கி விடுவோமா, உறக்கம் கலைந்து படுக்கையை விட்டு எழுந்திருப்பது எப்படி என்பதைப் பற்றி பேசுவோமா?&lt;br /&gt;&lt;br /&gt;மதரீதியான எந்த விளக்கமும் நான் உங்களுக்கு சொல்லப் போவதில்லை. வலது உள்ளங்கையில் சரஸ்வதி இருக்கிறாள் என்றெல்லாம் விளக்கப் போவதில்லை, ‘முருகா’ என்று படுக்கையில் அலறிவிட்டு அமர்ந்தபடியே படுக்கையை விட்டு எழுந்திரு என்கிற உபந்நியாசம் இல்லை. இவையெல்லாம் தனிப்பட்ட விஷயம். உங்கள் இஷ்டம். இவையாவுமே நன்றாக விழிப்பு கொடுத்தவுடன் வரும் முற்றிலும் மனம் தெளிவடைந்த பிறகு வரும் செயல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லப் போவது வேறு. உறக்கத்திற்கும் விழித்தபின் ஏற்படும் முழுத் தெளிவுக்கும் பின் உருவாகும் ஒரு நிலை. உறக்கம் கலைந்து மறுபடி உறக்கம் வருமே, மறுபடி உறங்கத் தோன்றுமே அந்தநேரம் அந்த நேரத்தில் இரண்டு செயல்கள் செய்யும் சாத்தியம் உண்டு. ஒன்று அந்த தூக்கத்தைப்பற்றி, ஆராய்ந்து, இரண்டு விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்தை ஆராய்வது என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்தை ஏன் ஆராய வேண்டும். உறக்கம் அற்புதமான விஷயம். அது உடலின் சோர்வு மட்டுமல்ல, உள்மனதின் விழிப்பு. உள் மனத்தின் ஒரு வித விழிப்பு நிலைதான் கனவுகளாக வருகின்றன. அந்த கனவு அநேகமாக விழித்த பிறகு மறந்து போகும், அல்லது வேறு ஒரு கற்பனையாக போய்விடும். அந்த விழிப்பும், உறக்கமற்ற ஒரு மெளன நிலையில் கனவு ஏதும் கண்டிருந்தால் யோசித்து பார்ப்பது நல்லது. அங்கே கண்ட கனவை நினைவு கூரல் எளிது. அங்கே நினைவுபடுத்திக் கொள்ள பல நேரம் அந்த கனவுக்கு அர்த்தம் புரிந்துவிடும். நமது மனவிகாரம் ஆசை, குறிப்பாய் பறக்கிற கனவு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு முன்னேறும் ஆசை அதிகமிருக்கின்றது என்று பொருள். தற்போது செய்ய அரியதாய் இருப்பதை செய்ய வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே ‘இப்படி கனவு வருகிறதே என்ன பலன்’ என்று ஆராய வேண்டாம். வேறு யாரையும் கேட்க வேண்டாம். அந்த பாதி விழிப்பு நிலையிலேயே நம் மனசு என்ன சொல்கின்றது என்று நமக்கு நிச்சயம் தெரியும். உங்கள் உள்மனதை உங்களை விட தெரிந்தவர் வேறு யாரும் இருக்கமுடியாது. அப்போது கனவைப் பற்றி தெரியவிட்டாலும் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள அதுதான் மிகச்சரியான நேரம். விழித்த பிறகு என்னவோ கனவு வந்ததே, என்ன அது என்று தேடல் இருக்கும். சில சமயம் சுத்தமாய் துடைத்து விட்டதைப் போல் மறந்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஏன் கனவை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும், உங்களை அறிய உங்கள் கனவுகள் உதவி செய்யும், உங்களை அறிவதைவிட மிகப்பெரிய வேலை இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. நாகரீகம் கருதியோ, நற்பயன் கருதியோ வெளியுலகில் நீங்கள் போட்டுக் கொண்டு இருக்கும் வேஷம் தேவையில்லாதது. உண்மையான உங்களை உங்கள் கனவுகள் அடையாளாம் காட்டும். தன்னை தெரிந்தவனுக்குப் பிறரை அறிதல் எளிது. பிறரை அறிய தன்னை அறிவதே முதல்படி. தன்னையும் பிறரையும் அறியவேண்டிய அவசியம் உலகில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;எனவேதான் நன்கு விழித்த நிலைக்கு முன்பு புரண்டு மறுபடியும் தூங்கும் நேரத்தை உன்னிப்பாய்க் கவனிக்கச் சொல்கிறேன். அந்த பாதி விழிப்பு நேரம் மிக முக்கியம் என்கிறேன். இதைப் படித்த இரவே தூங்கும் முன்பு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பாதி விழித்த நிலையில் மனதை கவனிக்க வேண்டும் என்று ஆவல் கொள்ளுங்கள். அவ்வப்போது மறந்துபோனாலும், இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பிறகு, தினசரி விழிப்பு நிலையில் மனதைக் கவனிப்பது பழக்கமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. கனவே வரவில்லை எதைக் கவனிப்பது ஆழ்ந்த உறக்கம், சலனமில்லாத தூக்கம் இதில் கவனிக்க என்ன இருக்கிறது ஏதுமில்லை. அப்போது விழித்துக் கொள்வதைப் பற்றி யோசிப்போம். விழித்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்போம். விழித்து என்ன செய்ய வேண்டும். இன்றைய வேலைகள் என்னென்ன எதுஎது நிச்சயம் செய்தாக வேண்டும் என்று யோசிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்வதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். கண்மூடி உடம்பு அயர்ந்து தூங்கும், தூக்கத்தின் தொடர்ச்சி உடம்பை விட்டு சற்றும் நீங்காது இருக்கும். ஆனால் மனசு மட்டும் விழித்துக் கொள்ளும். புற சத்தங்கள் அதிகமாகத் தாக்காது காதில் விழுந்தாலும் அந்த சத்தத்தை மனசு ஏற்காது. தூங்கும் நிலையே ஒருவகை தியான நிலை. அல்லது இப்படி சொல்லலாம். தியானம் செய்யும் போது இப்படி ஒரு முக்கால் தூக்க நிலை ஏற்படும். புற சத்தங்களால் பாதிக்கப்படாத ஒரு மெளனம் இருக்கும். அந்த மெளன நேரத்தில் நமது எண்ணங்களில் சார்புத் தன்மை இருக்காது. வேறுவிதமாக சொல்வது என்றால் விருப்பு-வெறுப்பு இருக்காது. தியானம் பழகாமல் இந்த பாதி விழிப்பு நிலையில் மனசை யோசிக்க பயன்படுத்தினால் போதும். நம்முடைய விஷயங்கள் பற்றி, நமது கோபதாபங்கள் பற்றி நமது ஆசைகள் அபிலாஷை பற்றி நம்மால் மிகத் தெளிவாக யோசிக்க முடியும். அதிலுள்ள நியாய அநியாய நிலையைப் பற்றி அல்லது அதை முடிக்கும் காலம் பற்றி, செயல்பட வேண்டிய வேகம் பற்றி கட்டுப்படுகின்ற உறுதி பற்றி தெள்ளத் தெளிவாக நமக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயம் கவனமாக இருக்க வேண்டும். இப்படி சார்பு இல்லாமல் யோசிக்கும் போதே சில சமயம் மனசு முழு விழிப்பு கொள்ளும். உடம்போ உறக்கத்திலிருந்து மீளாது இருக்கும். சோம்பல் உடம்பை அழுத்திக் கொண்டு இருக்கும். அந்த நேரம் மனசு கற்பனைக்குப் போக வாய்ப்பு உண்டு. அதாவது மனசு முழுவதும் விழித்துக் கொண்டு கதை பண்ண ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே துணிச்சலாய், “அடச்சீ போ” என்று மனசை அறுத்து விட வேண்டும். இங்கே மனசை அறுக்க சுலபமான வழி எழுந்து படுக்கையில் உட்கார்ந்து விடுவதுதான் முழு விழிப்பையும் அனுபவிக்கத் துவங்குவதுதான். அடுத்த முறை முதல் விழிப்பு வந்த போது கண்ட கனவு பற்றியோ அல்லது மேற்கொள்ளப் போகும் நினைவு பற்றியோ மனதை யோசிக்க வைக்க முயலுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரை புரியலையே என்று படித்து விட்டு சொல்ல வேண்டாம். நான் சொன்னதை பழகிப் பார்த்து விட்டுப் பேசுங்கள். அப்போது நான் சொன்னதையும் தாண்டி பலதும் புரியும். “நானா எங்க எழுந்துக்கறேன், அப்படி எழுந்தாத்தானே பாதி முழிப்பு எங்க வீட்டுல சுளீர்ன்னு தண்ணி ஊத்தி அடிச்சித்தான் எழுப்புவாங்க, நான் அலறிதான் எழுந்திருப்பேன்” என்பவர்களுக்கும் இக்கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“தினம் ராத்திரி தண்ணி போட்டோமா, காலையில புரண்டு படுத்தா தலை நோவறாதுதான் தெரியுது. கனவும் தெரியலை காட்சியும் தெரியலை” என்று சொல்பவர்களுக்கும் எந்தக் கட்டுரையும் அவசியமில்லை.&lt;br /&gt;படுக்கையில் இருந்து எழுந்து பிறகு என்ன செய்ய வேண்டும்? என்று சொல்கிறேன்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;strong&gt;.........................................“அநேகமாய் ஒரு நாளின் மனோநிலையை அந்த நேரமே தீர்மானிக்கும். படுகையைவிட்டு எழுந்திருக்கும் இந்நேரம் எரிச்சலோ வெறுப்போ வருமானால் அந்த நாள் முழுவதும் தொடர்ந்து அந்த மனோநிலையாய் அவ்விதம் பாதிக்கப்படுகிறது”................&lt;span style="color:#006600;"&gt;தொடரும்&lt;/span&gt;.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-8413666915319968271?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/8413666915319968271/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=8413666915319968271' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8413666915319968271'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8413666915319968271'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2009/11/blog-post_9280.html' title='கற்றுக்கொண்டால் குற்றமில்லை'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxDOoB-27YI/AAAAAAAAApE/OamgvxpqFjE/s72-c/DSC_0087.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-8617130054100741159</id><published>2009-11-27T21:34:00.000-08:00</published><updated>2009-11-27T21:49:41.027-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>வெற்றி வேண்டுமெனில் - உடலின் ஆட்சி</title><content type='html'>&lt;span class=""&gt;                      காமம்&lt;/span&gt; தான் ஆரம்பத்திலிருந்து இன்றளவும் இவ்வுலகத்தை ஆட்சி செய்யும் சக்தியாக இருக்கிறது. ‘கூடல்’ என்பது மனிதருக்கான விதிமுறையாக மட்டுமில்லை, உலகின் எல்லா உயிர்களின் இயல்பாக இருக்கிறது. நாய், பூனை, ஆடு, மாடு, சிங்கம், புலி, யானை, குதிரை போன்றவைகளோடு தாவரங்களும் புழு, பூச்சி முதலான உயிரினங்களும் கலவையில் களிக்கின்றன. இன்னும் ஆராய்ந்து பார்த்தால் நீரும், நிலமும் புணர்ந்து தாவரங்கள். தாவரம், வெயிலோடு கூடி பச்சையம். வெளியில் காற்று நுழைந்து மழை, குளிர், வெப்பப்பரவல் என்று இடையறாது இடையறாது எதுவோ எதனோடோ கூடல் நடத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                        இதைக்&lt;/span&gt; கண்டு உணர்ந்து சனாதன தர்மம் என்கிற இந்துமதம் ‘ஆவுடையார் லிங்கம்’ என்று ஒரு சிலா ரூபம் உருவகப்படுத்தி கூடலே இவ்வுலகம் என்று மென்மையாய் உணர்த்துகிறது. ‘லிங்கம்’ என்கிற சொல்லுக்கு அடையாளம் என்று அர்த்தம். இவ்வுலகின் அடையாளம் கூடல். கூடலின் ஆதாரம் காமம். காமமே இவ்வுலகை ஆளுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                   &lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;    ஆளுவது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt; எதுவோ அதைப் புரிந்து கொள்ள மறுத்தால் ஆளுபவர்க்கும், ஆளுமைக்கு ஆட்படுபவர்க்கும் மிகப் பெரிய மோதல், முரண்பாடு ஏற்பட்டுவிடும். வாழ்க்கை நிம்மதியற்றுப் போகும். இதுவே இவ்வுலகின் பல பாகங்களில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;                    எதை மிகப் பிரியமாய் வணங்கி, வரவேற்க வேண்டுமோ அதைக் கண்டு நடுங்கி ‘வெட்டி வீழ்த்துவேன்’ என்று விரட்டினால், வெறுத்தால் கலவரமே மிஞ்சும். நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ அதுவே உங்களைப் பல்வேறு ரூபத்தில் வந்து தாக்கி அடிமைப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                              ஏன்&lt;/span&gt; இவ்வுலகம் காமத்தைப் புரிந்து கொள்ளவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                      அடுத்து&lt;/span&gt; வாழும் மனிதரைப் புரிந்துகொள்ளாதவர், காமத்தையும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் காமம் என்பதை உணர்ந்து அனுபவிக்க அடுத்தவர் தேவை. வேறு ஒரு உயிருள்ள உடல் தேவை. வாழ்ந்து மலர்ந்த மனிதர் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                         தசையைத்&lt;/span&gt; தசை உரசுவது மட்டுமே காமத்தைத் தீர்த்துவிடாது. நிர்வாணப்படுத்துவது மட்டுமே ஜெயித்தாகிவிடாது. மதித்தால்தான் காமம் கண்டு மகிழ முதல்படி. பிறரை மதிக்க மனதில் பணிவு வேண்டும். பணிவு தன் மீது நம்பிக்கை உள்ளவருக்கு எளிதில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                        தன்&lt;/span&gt; மீது நம்பிக்கை இல்லாதவரே காமத்தை வெறுத்து இழிவுபடுத்தி வெளியே பேசியும், மனதுக்குள்ளே காமத்தைப் பெரிய ஆலமரமாய் வளர்த்தும் வாழ்வார்கள். இது இரட்டை வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                         தாயும்&lt;/span&gt;, தந்தையும்  கூடுவதை பல இரவுகள் கண் விழித்துப் பார்த்த  ஒரு சிறுவன் இதில் சிக்கித் தவியாய் தவித்தான். அடக்க முடியாது தாயை தவறாகத் தொட, தந்தையிடம் நாயாய் அடிப்பட்டான். படிப்பை புறக்கணித்து பம்பாய் போனான். ஒரு வீட்டில் தட்டு கழுவி, வயிறு வளர்க்க, அவ்வீடு ஒரு மதபோதகரிடம் அடிக்கடி போக அவனும் போதகருக்கு நெருக்கமாகி, ஓரினச்சேர்க்கைக்கு உதவி, அவ்வுதவியால் உயர் இடம் பெற்று போதகரைப் போலவே காமம் புறக்கணித்து அதை இழிவாகப் பேசி எப்படி கட்டுப்படுத்துவதென்று ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் அறிவுரை கொடுத்து மற்றவரை வியக்க வைத்து, அவனும் போதகராகி செல்வம் சேர்த்து ஆண்களை, பெண்களை விலைக்கு வாங்கி இடையறாது ஈடுபட்டு நோய்ப்பட்டு தெற்கே திரும்பி வைத்தீஸ்வரன் கோயிலே கதியென்று கிடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;                     ‘எனக்கு சொல்லித் தரவேயில்லை. அடித்து நொறுக்கினார்களே தவிர, ஆவேசமாகப் பேசி, இழிவுபடுத்தி மனம் குன்ற வைத்தார்களே தவிர, இது தவறு என்று விளக்கிப் பேசியிருப்பின் புரிந்துகொண்டிருப்பேன். நாற்பத்தேழு வயதில் தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும், ஓஷோவும் படித்து தான் காமம் கவனமாகக் கையாள வேண்டிய விஷயம் என்று புரிந்துகொண்டேன். பதினாறு வயதில் தவறு செய்து கடுமையாகக் கண்டிக்கப்பட்டு முப்பது வருடங்கள் குப்பையாய் வாழ்ந்து விட்டேன். காசு கொடுத்து காமம் வாங்கிவிட்டால் காமம் இனிக்காது. கசக்கும். குமட்டும். நேசிக்காத பெண்களோடு வாழ்தல் அபத்தம். கேவலம். எனக்கும் எவர் மீதும் நேசிப்பு இல்லையே. அதனால் கனவில் நேசிப்பு உள்ளவர்களை உருவகப்படுத்தி அவர்களை மனசுக்குள்ளே கூடிக் குலவி வாழ்ந்தேன். கற்பனைகள் வளர வளர காமவேட்டை மிக சுகம் என்று நினைத்தேன். நிர்வாணமாய் பார்த்த பெண்களை மனசுக்குள் இடையாறது கூடினேன். மனம், உடம்பு இரண்டும் நோய்ப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                             வேறு&lt;/span&gt; எதுவும் முழுமையாய் யோசிக்க முடியாமல் காமவிகார எண்ணங்கள் முட்டி மோதின. நான் பொருளாதார ரீதியாகவும் தோல்வியுற்றேன்.    என் விழிப்புணர்வு செத்துப் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;                            இன்னமும் உடல் நோயுற்றப் பிறகும் காமம் அகலவில்லை. மனசுக்குள் நூறு நூறு கற்பனைகள். எனக்கு நானே பேசிக்கொள்கிற அளவுக்கு பகல் கனவுகள். ஒரு நாள் நிச்சயம் எனக்குப் பைத்தியம் பிடிக்கும்’ என்று அழுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                சிறுவயதில்&lt;/span&gt; கற்பனைகளில் மிதந்து இடையறாது உடம்பை உஷ்ணப்படுத்தியதில் பிரச்சனைகள் வந்துவிட்டன. எதிரே யுவதிகள் நின்றபோது உபயோகப்படுத்த முடியவில்லை. எனவே, மீண்டும் கற்பனைகள். கனவுகள் என்று குழப்பம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                              இது&lt;/span&gt; நேராதிருக்க என்ன வழி ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                            காமம்&lt;/span&gt; என்பது என்ன என்பதை இளம் வயதிலேயே பேசி புரிய வைக்க வேண்டும். இந்த உறுப்புகள்-வம்சவிருத்தியின் பொருட்டு, இந்த உணர்வுகள்-நல்ல குழந்தைகள் பெறுவதன் பொருட்டு என்று கூற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                காசு&lt;/span&gt;, பணம், அதிகாரம், அந்தஸ்து போதுமா? திருமணம் நடந்து, குழந்தைகள் பெறுதல் மிக முக்கியம். வாழ்வு அப்போதுதான் முழுவட்டம், வடிவம் பெறுகிறது. குழந்தை இல்லாதவர் படும் துயரம் என்ன தெரியுமா என்று உதாரணம் காட்டிப் பேசவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                     &lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;காமம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt; அனுபவிக்க அமைதி தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                      அமைதி&lt;/span&gt; என்பது என்ன? பயமற்று இருத்தல். எப்போது காமம் குறித்த பயம் போகும். முறைப்படி உறவுகொண்டால், நிம்மதியாய் எவர் இடையூறுமின்றி அனுபவிக்கலாம். அனுபவிக்க இச்சமூகம் எல்லா வசதியும் செய்து தரும். மற்றவைகளைக் கண்டிக்கும். கள்ளத்தனத்தை இழிவுபடுத்தும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;                                ‘கணவனின் துணையோடுதான் காமனை வென்றாக வேண்டும்’. என்பது கருத்துள்ள பாடல். உயர்ந்த அனுபவ வாக்கியம். இதே விதமாய் மனைவியிடம்தான் ருசியான உடலுறவு சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                     ஏன்&lt;/span&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                   மனைவி&lt;/span&gt; ஒரு பொறுப்பு. அவளைப் பேணுதல் ஒரு கடமை. அவள் உனது குழந்தைகளின் தாய். உனக்கு ஸ்நேகிதி. நோய்ப்பட்டபோது தாதி. சுகத்துக்கு மட்டுமான பெண்ணில்லை. வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பங்குகொள்ளும் உறவு. தாய்-தகப்பனை விட்டு புருஷன் வீட்டிற்கு வந்த மனைவியைக் கொஞ்சி, சீராட்டி, ‘நானிருக்கிறேன். எந்த பயமின்றி எதுவும் கேள். மனம்விட்டுப் பேசு’ என்று ஆதரவு செய்ய, அவள் வாரி வழங்குவாள். தந்ததற்கு ஒரு பங்கும் இன்னும் தொடர்ந்து தரவேண்டும் என்ற நினைப்பில் இன்னும் கூடுதலாகவும் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                        இந்தக்&lt;/span&gt; கூடலின் நோக்கம் கூடல் மட்டுமல்ல. குழந்தைப்பேறும் உள்ளடங்கியது. ஒரு வருடம் ஆட்டம் ஆடலாம். மறுவருடம் குழந்தைப் பேறில்லையெனில் கவலை வந்துவிடும். ‘கடவுளே, கடவுளே’ என்று காமத்தில் ஈடுபடவேண்டியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                       இருபத்தியேழு&lt;/span&gt; வருடமாகக் குழந்தைப் பேறில்லாத தம்பதியர்கள் அவர்கள். கணவன் சினிமா பார்த்துவிட்டு கூடலுக்கு அழைத்தபோது, ‘வெறுமே எதுக்கு இது? என்ன பிரயோஜனம்?’என்று மனைவி அலுத்துக் கொண்டாராம். ‘அன்று காமம் அறுந்துவிட்டது. இறைவழிபாடு பக்கம் இருவரும் திரும்பிவிட்டோம்’ என்று நொந்தபடி பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                   அவர்களிடம்&lt;/span&gt; செல்வம் உண்டு. அதிகாரம், அந்தஸ்து உண்டு. அனுபவிக்கத் தடையேதுமில்லை. ஆயினும், காமம் அறுந்தது. ஒரு கணம் அங்கே நம்மை நிறுத்திப் பார்க்க, காமத்தின் அர்த்தம், அபத்தம் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                  காமம்&lt;/span&gt; நன்கு அனுபவிக்க, வீடு வாகன சவுகரியங்கள் நிச்சயம் உதவும். இவைகள் பெற, உயர்ந்த படிப்பு, கடும் உழைப்பு அவசியம். படிக்க வேண்டிய காலகட்டத்தில் படித்து ஜெயித்து வேலையில் அல்லது வியாபாரத்தில் முழுமனதாய் ஈடுபட்டு இளமையிலேயே பலமான பொருளாதார அஸ்திவாரம் போட்டுவிட்டால் சுகம் என்கிற வீடு உயர உயர எழுப்பமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                    காமச்சேறே&lt;/span&gt; கதியென உழன்றால், குடிசை கூட  கட்ட முடியாது.   பாதுகாப்பு தரமுடியாது. ஆணை பெண் நேசிக்கமாட்டாள். நேசிக்காத பெண்ணிடமிருந்து காமம் வராது. வந்தாலும் ருசிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                            போன&lt;/span&gt; தலைமுறையைவிட இந்தத் தலைமுறைக்குக் காமப்பிரச்சனைகள் அதிகம். மிக அதிகம். பெண்களிடம் மணி கேட்கவோ, ஒரு குவளை நீர் கேட்கவோகூட அப்போது பயம். கேட்பதை தவறாக நினைத்துக் கொள்பவர்கள் உண்டு. பெண்ணின் அண்மை இல்லாததால் தொந்தரவின்றி தன் காரியத்தில் ஆண் ஈடுபட முடிந்தது. இப்போது சினிமாவும், பத்திரிகைகளும், ஊடகமும், செல்போனும் பெண்களின் மேனியெழிலை பல கோணங்களில் நெருக்கமாய் காட்ட, இளைஞர்களின் மனம் குழம்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                         கள்ளத்தனமாய்&lt;/span&gt; கெட்ட விஷயங்களைப் பார்க்கும் வசதி அதிகரிக்க இருபாலரும் கள்ளத்தனமாகவே பேசிப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். எது மூளையில் பதியவேண்டுமோ, அதைப் பதிய ஒட்டாது இவ்விஷயங்கள் மறைத்துவிடுகின்றன. எனவே தோல்வி, கண்ணெதிரே பேயாட்டம் ஆடுகிறது. தோல்வியிலிருந்து தப்பி உற்சாகம் பெற, இவ்விஷயங்களைக் கற்பனை செய்யும் முட்டாள்த்தனம் மிகுந்துவிடுகிறது. பிறகு, மீட்சியில்லாத மனநோய்தான் மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                      உடல்&lt;/span&gt; உறுதி முக்கியம் என்பது இளம் வயதிலேயே சொல்லித் தரப்பட வேண்டும். விளையாட்டு வீரராய்த் திகழும் ஆசையை விதைக்க வேண்டும். அப்போது தேவையற்ற பேச்சுகள், தொடர்புகள் குறைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்ளே நம்பிக்கை வெற்றியினால் அதிகரிக்கும். ஆரோக்கியமாய், கட்டழகாய் இருக்கிறோம் என்பதே நல்ல நம்பிக்கை. விளையாட்டு, வெற்றி முக்கியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                                   இந்த&lt;/span&gt; ஆரோக்கியம் படிப்பில், தொழிலில் முழுவதுமாய் ஈடுபட வைக்க  முன்னேறுவது என்பது எளிது. அதுமட்டுமின்றி, இந்த ஆரோக்கியம் பாதுகாப்பு, வைராக்கியம் வளர்க்கும். இந்த உணவு வேண்டாம், இந்தவித கெட்ட படங்கள் வேண்டாம் என்று வரையறைகள் ஏற்படும். வைராக்கியம் இல்லையெனில் வாழ்வே இல்லை. வைராக்கியம்தான் கடும் உழைப்பு தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;                                         ‘ராத்திரி ஆச்சுன்னா தண்ணி போட்டே ஆவணும்’ என்று இருபது வயதில் தோன்றுமாயின், நாற்பது வயது தாண்டுவது அரிது. தாண்டினாலும் நிமிர்ந்த நடை இருக்காது. வெறுமே நோயுற்ற பூனையாய் இடையறாத சலிப்பில் வாழ்வு நகரும். நொந்துகொள்ளல் அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;‘தோன்றின் புகழொடு தோன்றுக. அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று’&lt;/span&gt;&lt;/strong&gt; என்பதற்கு அர்த்தம் எல்லோரும் பிரதமராக, தலைவராக வரவேண்டும் என்பதல்ல. பிறர் பாராட்டும்படி நடந்துகொள்பவரே சிறந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;                                   “நல்லா வச்சிருக்கீங்களே உடம்பை. வெரிகுட்” “பெரிய படிப்பு படிச்சிருக்கீங்களே” “கல்யாணத்துக்கு முன்னாடியே சொந்த வீடு கட்டிட்டீங்களா. வாழ்க, வாழ்க...”, “ஆங்கிலப் பத்திரிகைகளில் நீங்க எழுதின கட்டுரை படிச்சேன். நல்ல சிந்தனை” இம்மாதிரி ஆயிரம் ஆயிரம் பாராட்டுகள், புகழோடு தோன்றியதை உறுதிப்படுத்துகின்றன. நாலு பேர் பாராட்டாது வாழ்வது வாழ்வே அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;                          ‘சினிமா ஆசையில் புருஷனை விட்டு ஓடிவந்து எவனோ அயோக்கியனை நம்பி சீரழிந்து அவனும் ஏமாற்ற, கொலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டாப்பா’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவதற்கு அடியில் கட்டறுந்த காமம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                       இனி&lt;/span&gt; மீட்சி எப்போது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                              &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;காமத்தை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt; நன்கு அனுபவிக்க வேண்டுமென்றால், உண்மையான பிரியம் மட்டுமே உதவி செய்யும். பரஸ்பர அக்கறை பலப்படுத்தும். விலகி இருந்தால்தான் எதிர்ப்பட்டதை நன்கு பார்க்க முடியும். காமத்தை தலையிலேயே தூக்கி சுமந்து திரிந்தால் எதுவும் தெரியாது. சுமையால் சலிப்பு ஏற்படுவதே மிஞ்சும்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                            இளைஞர்களும்&lt;/span&gt;, யுவதிகளும் காமம் குறித்து கேள்வி கேட்க, முதியோர் தட்டாது பதில் சொல்லி நல்வழிப்படுத்தல் அவசியம். ஒதுக்கி மறைத்து வைத்தால் ஆர்வம் அதிகமாகும், பிரச்சனைகள் பெரிதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;                            &lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;   காமம்தான்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt; இவ்வுலகை ஆட்சி செய்கிறது. எது ஆளுகிறதோ அதை அறிவதே நல்லது. அறிவுதான் மரியாதை தரும். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;                                 வாழ்வில் வெற்றிபெற வேண்டுமெனில், காமம் பற்றிய தெளிவோடு இருங்கள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-8617130054100741159?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/8617130054100741159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=8617130054100741159' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8617130054100741159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/8617130054100741159'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2009/11/blog-post_200.html' title='வெற்றி வேண்டுமெனில் - உடலின் ஆட்சி'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-371816675604541644</id><published>2009-11-27T20:58:00.000-08:00</published><updated>2009-11-27T22:22:48.783-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>என்னை சுற்றி சில நடனங்கள் - சுயமாக சிந்தித்து செயல்படுதலே சுதந்திரம்</title><content type='html'>பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா என்று கேட்கிறபொழுதே யாராவது கொடுத்து விட்டார்களா என்பது போலத் தான் தொனிக்கிறது. கொடுத்துப் பெறுவதல்ல சுதந்திரம். அடித்துப் பிடுங்கப்படுவது. பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்று கேட்பீர்களாயின் அதை நோக்கி அவர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு ‘போர்’ முனையில் வெகு வேகமாக தங்களுடைய சுதந்திரம் குறித்து யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் என்பது என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxC91d39eOI/AAAAAAAAAo8/WUL__Zfm5SY/s1600/Picture+117.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5409031878722025698" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 400px" alt="" src="http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxC91d39eOI/AAAAAAAAAo8/WUL__Zfm5SY/s400/Picture+117.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆண்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;-&lt;span style="color:#990000;"&gt;பெண் உறவு முறைகளில் யார் உயர்ந்தவர்கள். யார் தாழ்ந்தவர்கள் என்று பார்ப்பதா அல்லது ஆண் சமையலுக்குப் போகட்டும். நான் அலுவலகத்திற்கு போகிறேன். நீ பாவாடை அணிந்து கொள் என்று அட்டகாசம் செய்வதா. &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;இல்லை&lt;/strong&gt;&lt;strong&gt;. தனக்கு வேண்டும் என்பதை தானே தேர்ந்தெடுத்துக் கொள்கின்ற ஒரு மனப்பக்குவம் வருவதுதான் சுதந்திரம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது அறிவின் பாற்பட்ட சுதந்திரம். &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;‘இந்த ப்ளவுஸ், இந்தப் புடவைக்கு மேச்சா இருக்காடி’ என்று நான்கு தோழிகளோடு இரண்டு ப்ளவுஸுக்கு கடை கடையாய் ஏறுவது சுதந்திரம் என்று எனக்குத் தோன்றவில்லை. எதிலேயோ அடிமைப்பட்டுக் கிடக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘அந்தப் பையன் என்னைப் பார்த்து லவ் யூன்னு சொல்றான். நான் என்ன செய்யட்டும்’ என்று தன்னுடைய தோழிகளோடு ஒருத்தி புலம்புவாளாயின் அவள் சுதந்திரம் பெற்றவளாக நான் நினைக்க மாட்டேன்.&lt;br /&gt;‘நான் வேலைக்குப் போகட்டுமா, வேலைக்குப் போனா ரெண்டாயிரம் ரூபா காசு கிடைக்கும். காசு கிடைச்சா நம்ம வீட்ல அரிசி பருப்புக்கு உதவும்’ என்று அனுமதி கேட்டு கை பிசைந்து நின்றால், அவளுக்கும் ஏதோ அடிமை சிரமம் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் என்பது தன்னுடைய விஷயங்களை தானே மிக சுயமாகச் சிந்தித்து செயலாற்றுவதுதான் என்று நான் நினைக்கிறேன். இந்தச் சுதந்திரம் திருமணமான பெண்களுக்கும், இனி திருமணமாகப் போகிற பெண்களுக்கும் கொடுக்கப்படவில்லை என்பதே என் அபிப்ராயம்.&lt;br /&gt;பெண்களுக்கு சில விஷயங்களில் தீர்மானம் செய்யும் அறிவு போதாது என்று ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிற அகம்பாவம் காரணம் அல்லது அவர்கள் சொல்வது சரிதான் என்று இவர்கள் கிடக்கின்ற அடக்கமும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். அது பட்டுப்புடவையாக இருந்தாலும் சரி, கெட்டிக்கார புருஷனாக இருந்தாலும் சரி. ‘அவன் இல்லையெனில் நான் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்’ என்ற பிடிவாதம் பிடிப்பது ஆரோக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நோய்த்தன்மை இருக்கிறது.&lt;br /&gt;வாழ்க்கையை மிக லகுவாக எடுத்துக் கொள்வதும், அடுத்த கட்டத்திற்கு விரைவாக போவதும், விஷயங்களைத் தானே தீர்மானிப்பதும் வாழ்வின் மிக முக்கியமான அம்சங்கள். இதற்கு பொருளாதார விடுதலை நிச்சயம் உதவி செய்யும். பொருளாதார விடுதலை வேண்டுமாயின், படிப்பு என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கும். படிப்பு என்கிற விஷயத்திற்கு ஒரு முரட்டுத்தனம், வைராக்கியம் தேவைப்படுகிறது. தான் பெண், தான் மெல்லியவள், தான் நாசூக்கானவள், தான் பஞ்சுபோல் மிருதுவானவள் என்ற எண்ணங்களையெல்லாம் உடைத்தெறிந்து மனதில் திண்மையும், மனத்திண்மையால் உடைகளில் மாற்றமும் ஏற்படுத்தி கம்பீரமாக தன்னை நடத்திக் கொண்டு போவதே சுதந்திரத்தின் அடிப்படையான விஷயம்.&lt;br /&gt;ஆரம்ப கட்டங்களில் பெற்றோர்களின் சிறிய ஒத்துழைப்பு இருந்தால் போதும். கூடப் பிறந்தவர்களின் அனுசரணை இருந்தால் போதும். அப்படி வளர்ந்த பிறகும் அது கிடைக்கவில்லையெனில் அந்த இடத்தை விட்டு விலகி தனியாக வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தனிமையை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt; உணர்ந்த எல்லோருமே விடுதலை பெற்றவர் என்பது யோக மார்க்கம் சொல்கின்ற வழி. தனிமையில் இருக்க பயந்து கொண்டுதான் பல பெண்கள் பிறரை சார்ந்தும், சார்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையை தன்மீது ஏவி விட்டால், எந்த நிலையிலும் எப்படியும் சந்திக்கத் தயார் என்ற திமிரும், வீராப்பும் ஒரு பெண்ணுக்கு நிச்சயம் வரவேண்டும். ‘ரெளத்திரம் பழகு’ என்று பாரதி இதைத்தான் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெத்தப்படிப்பு, மெல்லிய ரெளத்திரம், பொருளாதார மேன்மை, தன்னைத் தானே எடைப்போட்டு தான் யார் என்று தெளிகின்ற மேன்மை, அதனால் வரும் உன்னதம் அடைந்த பெண்ணுக்கு சுதந்திரம் காலுக்குக் கீழே இருக்கிறது என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இந்தவித விடுதலை நோக்கி பெண்கள் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பது உண்மை. ஆனால் வெகுதூரம் போகவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2095131948458010810-371816675604541644?l=balakumaranpesukirar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://balakumaranpesukirar.blogspot.com/feeds/371816675604541644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2095131948458010810&amp;postID=371816675604541644' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/371816675604541644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2095131948458010810/posts/default/371816675604541644'/><link rel='alternate' type='text/html' href='http://balakumaranpesukirar.blogspot.com/2009/11/blog-post_27.html' title='என்னை சுற்றி சில நடனங்கள் - சுயமாக சிந்தித்து செயல்படுதலே சுதந்திரம்'/><author><name>கிருஷ்ண துளசி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_O0vTVznhII0/SxC91d39eOI/AAAAAAAAAo8/WUL__Zfm5SY/s72-c/Picture+117.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2095131948458010810.post-8298659596909011950</id><published>2009-11-08T00:54:00.000-08:00</published><updated>2009-11-08T01:07:44.809-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சூரியனோடு சில நாட்கள் - பாலகுமாரன் பேசுகிறார்</title><content type='html'>அது ஒரு ப்ரிவியூ தியேட்டர்...&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம், வழக்கமான தியேட்டர்களில் திரையிடப்படும் முன் இங்கே டெக்னீஷியன்களுக்காகவும், நடிக நடிகையருக்காகவும், விநியோகஸ்தர்களுக்காகவும் திரையிட்டுக் காட்டப்படும். அந்தப் ப்ரிவியூ தியேட்டரில் ‘ஜென்டில்மேன்’ திரையிடப்பட்டிருந்தது. உள்ளே ரஜினி படம் பார்க்கிறார் என்பது எனக்குத் தெரியாது. படம் பார்த்துவிட்டு, சக டெக்னீஷியன்கள் படம் எப்படி என்று அபிப்பிராயம் சொல்வார்கள். கேட்போம் என்று போனேன். படம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தியேட்டரில் நாலு பேர் போகக்கூடிய லிஃப்ட் இருந்தது. ஏறி கதவு சார்த்தி இரண்டாவது மாடி குமிழ் அழுத்த, பெட்டி உயரே நகர்ந்தது, லிஃப்ட் இரண்டாவது மாடி தொட்டது. மாடியில் சிரிப்புச் சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கதவு திறக்க, ரஜினிகாந்த். நான் வெளியே வர முயல, ரஜினி என்னை மறுபடி லிஃப்டுக்குள் தள்ளினார். “பாலகுமார் சார்... க்ளாஸ்... ஏக்ளாஸ் படம், ரொம்ப நல்லா வந்துருக்கு” கைகுலுக்கினார். அவரும் இன்னொரு நண்பரும் உள்ளே வர, லிஃப்ட் கதவு சார்த்தி தரை நோக்கி போகும் குமிழை அந்த நண்பர் அழுத்த, லிஃப்ட் கீழிறங்கத் தொடங்கியது. ஐந்தடிக்கு ஐந்தடிபெட்டியில், அவர் மூச்சு என்மீது படும் அளவு நெருக்கமாய் நின்று படம் பற்றி சில வாக்கியங்கள் சொன்னார். என் காதில் ஏறவில்லை. எல்லாம் பாராட்டுக்கள் என்று தெரிந்தது. ஆனால், மனசுள் வாங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிகாந்த் அருகே இருக்கும் திகைப்பு மட்டுமல்ல காரணம். ஒரு சிறிய வெட்கமும் உள்ளே சேர்ந்தது. அவர் கூறும் பாராட்டுக்களை ஏற்க மறுத்தது. சினிமா ஒரு டீம் ஓர்க். ஒரு படத்தின் வெற்றிக்கு இன்னார்தான் காரணம் என்று கூற இயலாது. ஒரு நூறு பேர் மிக கவனமாய் ஒருங்கிணைந்து, புரிந்து கொண்டு பரஸ்பரம் விட்டுக்கொடுத்து செயலாற்ற வேண்டிய இடம். நாவல் ஒரு தனிமனிதனின் சக்தி. ஒரு நாவல் சிறப்புடையதானால் எழுத்தாளரே கொண்டாடப்பட வேண்டியவர். நாவல் வந்த பத்திரிகையோ, அச்சிட்டவரோ, கம்பாஸிடரோ அங்கு பேசப்படுவதில்லை.&lt;br /&gt;ஆனால் சினிமா நூறு துடுப்புகள் போடப்பட்ட நீண்ட ஓடம். எந்தத் துடுப்பால் படகு வேகமாயிற்று என்று சொல்வது கடினம். நடுவே நாலு துடுப்பு சரியாகப் போடவில்லையெனில், வேகம் குறைந்து ஆட்டம் அதிகமாகும். மற்ற துடுப்புகளுக்குச் சிரமம் வரும் என்பதும் நிச்சயம். போடப்பட்ட நூறு துடுப்பில் ஏழாவது துடுப்பைப் பார்த்து, ரொம்ப சந்தோஷம்... ஜெயிச்சுட்டீங்க என்றால் என்ன பதில் சொல்வான் அந்தத் துடுப்புகாரன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டை ஏற்றும், ஏற்காமலும் கைகூப்பி நிற்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாராட்டிய ரஜினிகாந்துக்கும் இது தெரியும். அவரும் பல நீண்ட ஓடங்களை ஓட்டிய துடுப்புக்காரர்தான். ஜெயித்து கரையேறிய போது, எதிர்ப்பட்ட துடுப்பாளை ரஜினிகாந்த் கைகுலுக்கிப் பாராட்டுகிறார் என்பது சிறிது நேரம் கழிந்து புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லிப்ட் தரை தொட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாப் பெருமையும் டைரக்டருக்கே” என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“உண்மை...” ரஜினி பதில் சொன்னார். “அதோடு கூட இது ஒரு நல்ல டீம். படத்தின் எல்லா கலவையும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கிறது. என் வாழ்த்துக்கள்.” மறுபடி அவர் மூச்சுக்காற்று என்மீது பட்டது. என் காற்றும் அவரைத் தொட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;லிஃப்ட் திறக்க, சரட்டென்று வெளியேறி கார் ஏறிப் பறந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேகமான ஒரு சுழல்பந்து தலை உரசிப் போனது போல, அந்தப் பந்தை எப்படி விளையாடுவது என்று தெரியாத பேட்ஸ்மேன் போல திகைத்துக் கிடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டேய், பாலகுமார் தம்பி, முட்டற மாதிரி ரஜினி எதிர்க்க வந்தே...அதனால் பாராட்டு கிடைச்சுது. ரொம்ப எமோஷனலாயிடாதே... இது மரியாதை...அன்பு. பெரிய முக்கியத்துவம் உனக்கு எதுவும் இல்லை. அடடா... ரஜினியே கைகுலுக்கினார்... நாலுபேர்கிட்ட பேசாதே... சும்மா இரு.’ திகைப்பிலிருந்து வெளிவந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நண்பர்கள் தியேட்டர் வாசலில் பாராட்டினார்கள். இன்னொரு காட்சி ப்ரிவியூ தியேட்டரில் ஆரம்பமாக, வீடு திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படியேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ரஜினி வீட்டுலேர்ந்து போன் வந்தது... ஜெயராம் கேட்டாரு உங்களை”... வீட்டில் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா... இப்பதானே பேசிட்டு வரேன்.” நான் எண்களைச் சுழற்றினேன். ரஜினியின் உதவியாளர் ஜெயராம் போனை எடுத்தார். “அண்ணன் பேசணும்னார் சார்” ஒரு நிமிஷம், சில விநாடிகள் நகர்ந்தன. “ஹலோ பாலகுமார் சார்... பிரமாதமா பண்ணிட்டீங்க... அங்க நிறைய பேச முடியவில்லை, வாசல்ல கும்பல் ஜாஸ்தியாயிடுச்சு. அடுத்த ஷோ நம்மால ஜாம் ஆயிடக்கூடாதுன்னு வண்டியேறிட்டேன். படத்துல பல இடங்கள் தனியா தெரிஞ்சுது. ஷங்கர் யாரு... யார்கிட்ட இருந்தாரு”. பத்து நிமிடங்கள் படத்தின் பல சிறப்புகள் பற்றிப் பேசி.. மனதாரப் பாராட்டி.. வாய் விட்டு சிரித்து.. அப்படியானால் வெறுமே எதிர்ப்பட்டதால் வெளிவந்த பாராட்டில்லையா... உண்மையாகவே என் வேலை பிடித்திருக்கிறதா... இது மனசு திறந்த பாராட்டா...சக தொழிலாளியைக் கட்டிப் பிடித்து உற்சாகமூட்டும் செயலா. &lt;img id="BLOGGER_PHOTO_ID_5401655131071716866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_O0vTVznhII0/SvaIuPayHgI/AAAAAAAAAo0/cR8ADhVrlFc/s400/B+(6).jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா ஒரு டீம் ஓர்க்...&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் சில சங்கடங்கள் உண்டு. நாவலில் கிடைக்கிற தனித்துவம் சினிமாவில் எவருக்கும் கிடையாது. ஒரு காட்சி அமைப்பு, காமிரா, நடிக நடிகையரின் மேக்கப்; செட் ப்ராப்பர்டி, லொகேஷன் போன்றவையும் காரணமாய் இருக்கலாம். ஒரு நல்ல காட்சி வசன பலமின்மையால், வசன பலமிருந்தாலும் காமிரா கோணம் சரியின்மையால் காமிரா, வசனம் சரியாய் இருப்பினும் நடிகர் உணர்ந்து செயலாற்றாததால்; நடிப்பு, காமிரா, வசனம், சரியாய் இருப்பினும் எடிட்டரின் கவனக்குறைவால் சிதையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமா ஒரு நெட்டி வேலை...&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நெட்டி பொம்மையை, கோவில் கட்டடம் போன்ற நெட்டி பொம்மையை நூறு பேர் சேர்ந்து செய்யும் வேலை. ரஜினி தனித்தனியே எல்லோரையும் என்னிடம் பாராட்டினார். “ எனக்கு டைரக்டர் நம்பர் தெரியாது. அதனால் உங்ககிட்ட என் பாராட்டைச் சொல்றேன். ஷங்கர் கிட்டே என் பாராட்டை சொல்லுங்க”.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ரஜினிகாந்தின் பாராட்டு பற்றி யூனிட்டில் சொல்ல, அங்கே பலபேருடைய முகம் மலர்ந்து.. மகிழ்ந்து மறுபடி என்னைச் சொல்லச்சொல்லி கேட்டு புளகாங்கிதமடைவதை நான் உணர்ந்தேன். ரஜினிகாந்த் இங்குள்ள சினிமா கலைஞர்களுக்கு அவ்வளவு முக்கியம். அவர் பாராட்டு மிகப்பெரிய பெருமை.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் ஒரு வெற்றிப் படத்தை இப்படி மனம் நிறைய பாராட்டுபவர்கள் மிகக்குறைவு. ப்ரிவியூ தியேட்டரில் நான் பல முகங்களை உற்றுக் கவனித்திருக்கிறேன். “படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நிச்சயம் நூறு நாள் கவலையேபடாதீங்க”. டைரக்டரிடம் கைகுலுக்கிவிட்டு, தியேட்டர் தாண்டி தெருவுக்கு வந்ததும், எப்படி படம் என்று எதிர்ப்பட்டவர் கேட்க, “ஊத்திக்கிச்சு. ஊத்திக்கிச்சு” என்று நீட்டி முழக்கி சிரிப்பவர்களை கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘கிட்டதட்ட இதே ஸ்டோரி நான் சொன்னேன். எவனும் கேட்கலை, இப்ப அதே கதையே வச்சு சக்ஸஸ் ஆக்கிட்டாம் பார்...’&lt;br /&gt;&lt;br /&gt;“சக்ஸஸுன்றே...”&lt;br /&gt;&lt;br /&gt;“அட, நாப்பது நாள் ஓடும்பா...பாட்டு சரியா அமைஞ்சு போச்சு. நடிகர் சரியா அமைஞ்சு போச்சு.. வசனம் கூட சரியா வுழுந்துடுச்சுப்பா”. இந்த வெற்றி, பிறர் திறமை என்பது ஏற்காமல், தெய்வச் செயல், எதேச்சை என்று பாராட்டும் பாதி மனங்களை கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி முழுமையானவர்...&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒருநாள் அவரிடம், நீங்கள் இத்தனை மனமுவந்து பாராட்டிப் பேசுவீர்கள் என்று நினைக்கவேயில்லை என்று சொல்ல, சிரித்தார் ,நிதானமாய் பேசினார். “சினிமாவில் ஒரு படம்கூட ஃபெயிலியர் ஆக
