Thursday, May 8, 2008

ஐயா , உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா? - பதிலளிக்கிறார் பாலகுமாரன்

ஐயா , உங்கள் வீடு மதுரையா? சிதம்பரமா?



உலகத்தில் இதைவிட முட்டாள்தனமான கேள்வி எதுவும் இருக்க முடியாது. ஒரு வீடு மதுரையாக இருந்தால் என்ன. சிதம்பரமாக இருந்தால் என்ன. அந்த வீட்டிற்குள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள். என் வீடு ஒரு பொழுது சிதம்பரம், ஒரு பொழுது மதுரை. எந்த நேரம் சிதம்பரம், எந்த நேரம் மதுரை என்பது உமக்கு சொல்வதற்கில்லை. இப்படித்தான் எல்லா வீடும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.




பசுவை ஏன் தெய்வமாக கொண்டாடுகிறார்கள்?

பசுவின் பால் உணவோடு சம்ப ந்தப்பட்டது. உணவு உயிர் வாழ்தலோடு சம்ந்தப்பட்டது. உயிர் வாழ்தலோடு சம்ந்தப்பட்ட எல்லா விஷயங்களும் தெய்வம்தான். பசு மட்டும் அல்ல, பூமியும் தெய்வம்தான். உயிர் வாழ அதுதான் உணவு தருகிறது. அப்பொழுது ஏன் பாம்பை வணங்குகிறார்கள். அதுவும் உயிர் வாழ்தலோடு சம்மந்தப்பட்டதுதான். பாம்பு கொத்தினால் உயிர் வாழ முடியாது.




ஐயா ,நமீதாவின் தமிழ்....?



கொஞ்சும் சலங்கை. குழறும் தமிழ்.
சொல்லும் அதன் பொருளும் ஒன்றாக வெளிப்பட்டு மற்றவருக்கு புரிய வைக்கவேண்டும். நமீதா பேசுவது நமக்கு புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் சொல்லும், பொருளும் குழறலாக இருந்தால் தவறில்லை. கொஞ்சலாக இருக்கும்போது காதுக்கு இதமாக இருக்கிறது.

4 comments:

  1. welcome and thanks a lot for your suggestion , Roshini..

    ReplyDelete
  2. இரண்டு பளபள சரிகை பாடருக்கு நடுவில் நேர்த்தியாக நெய்த பட்டுபோல பசுவைப் பற்றிய தங்கள் கேள்வியும் அதற்கான விளக்கமும் அருமை. மிக்க நன்றி...

    ReplyDelete
  3. vanakkam.
    Iyyavirkku ennudaiya namaskaram.
    Pasuvai patri iyya oru variyil miga arumaiyana vilakkam koduthu irukirar. eppadithan ella veedum iruka vendum enbadu en viruppam endrathu nandru. nandri. vazhthukal.
    Rekhamanavazhagan

    ReplyDelete