Thursday, June 4, 2009

பொன்னூஞ்சல் – எழுத்துச்சித்தருடன் ஒரு பேட்டி – பாகம் -3

கிருஷ்ணதுளசி :இப்பொழுது உங்களை ஐ யா என்றும் குரு என்றும் அழைக்கிறார்களே. இது புது டிரண்டாக இருக்கிறதே. இந்த டிரண்ட் உங்களுக்கு உவப்புத்தானா?

பாலகுமாரன்: எனக்கு மறுப்பேதும் இல்லை. என்னை ஐ யா என்று அழைத்தாலும், பாலகுமாரா என்று அழைத்தாலும் ஒன்றே. என்னுடைய மூப்பின் காரணமாக என்னை ஐ யா என்று அழைக்கிறார்கள். என்னுடைய விஷய கன த்தின் காரணமாக, அதைப் புரிந்து கொண்டு வியப்பவர்கள் குரு என்று கூப்பிடுகிறார்கள். என்னை நன்கு அறிந்த சிலர் எனக்குள் சின்ன சின்னதாக இருக்கும் சில சிறப்புகளையும் கண்டுபிடித்து வியந்து போய் குரு என்று நமஸ்கரிக்கிறார்கள். ஏதோ ஒரு வகையில் வழிக்காட்டியாக, கைவிளக்காக, வெளிச்சமாக நான் அவர்களுக்கு இருந்திருப்பதை நன்றியோடு உணர்ந்து குரு என்று சொல்பவர்களும் உண்டு. எப்படி அழைத்தாலும் எனக்கு ஆட்சேபணை இல்லை. இதில் நான் உச்சிக் குளிர்ந்து நிலைத் தடுமாறவும் இல்லை. நான் எங்கேயிருக்கிறேன், என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்ற தெளிவு எனக்கு பலமாக இருக்கிறது.

கிருஷ்ணதுளசி :எழுதுவதை ஏன் குறைத்து விட்டீர்கள்?

பாலகுமாரன்:
ஒரு ஓய்வு போலவும் ஒரு இடைவெளி வேண்டும் என்ற நினைப்பாலும் நான் எழுதுவதை குறைத்துக் கொண்டிருக்கிறேன். நான் வெறும் அரட்டைக்காரன் அல்ல . நான் உழைப்பதற்கு அஞ்சியதே இல்லை. நான்கு மணி நேரத் தூக்கம். வாரத்தில் ஏழு நாளும் வேலை என்று இடையறாது உழைத்துக் கொண்டிருந்தவன் நான். இருதய அறுவை சிகிச்சைக்கு பிறகும் இருபத்தியேழு நாட்களில் எழுந்து உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன். மிக உற்சாகமாக வேலை செய்வதும், வேலையின் மீது காதலோடு இருப்பதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

‘உடையார்’ என்ற என்னுடைய மிகப் பெரிய கள மான அந்த நாவலை எழுதி முடித்து விட்டு அது கொடுத்த அயர்ச்சியில் சற்று அமைதியாக இருக்கிறேன். ஆனாலும் மரண த்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையைப் பற்றியும், இ ராஜேந்திர சோழனைப் பற்றியும் நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மீக அனுபவங்களை ஒன்று சேர்த்து ‘காதலாகிக் கனிந்து’ என்ற ஒரு புத்தகம் வந்திருக்கிறது. மகான் ராகவேந்திரர் பற்றி ‘பிருந்தாவனம்’ என்ற பெயரில் இன்னொரு புத்தகம் வெளி வ ந்திருக்கிறது. நான் தொடர்ந்து எழுதுவேன். எழுதிக் குவிக்கின்ற எண்ணம் மட்டுப்பட்டிருக்கிறது. உடல் நலமும் அதற்கு காரணம். நோய் என்று ஏதும் இல்லை. ஆனாலும் குறைந்தப்பட்சம் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியமாக இருக்கிறது. உடம்பு தூக்கம் வேண்டும் என்று கேட்கிறது. அதனால் உடம்போடு இயைந்து ஒத்துழைத்து அதன் சொல் கேட்டு அதற்கு ஏற்றபடி என் வேலை நேரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்.

தொழிற்சாலை இயங்கி கொண்டிருக்கிறது. கொஞ்சம் உற்பத்திக் குறைவு அவ்வளவே.


கிருஷ்ணதுளசி :மீண்டும் குதிரை கவிதைகள் எழுதியிருக்கிறீர்களே. இன்னும் பல குதிரை கவிதைகள் வருமா?

பாலகுமாரன்: ஒரு எழுத்தாளனிடமிருந்து என்ன வரும், எப்பொழுது வரும் என்று சொல்லமுடியாது. அந்த எழுத்தாளனால் கூட யூகிக்க முடியாது. இன்னும் கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. ஆனாலும் என்ன வரும் என்று சத்தியமாக சொல்ல முடியவில்லை. குதிரை கவிதைகள் மட்டுமல்ல அடி ஆழ்த்தில் இருக்கின்ற கடவுள் தேடலை கவிதை ஆக்குகின்ற ஒரு எண்ணம் இருக்கிறது. நான் உணர்ந்த, கன த்த, இருண்ட, அடர்த்தியான ஒரு தனிமையை கவிதை ஆக்க முயற்சிக்கவும் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இது தமிழுக்கு புதிதாக இருக்கக் கூடும்.


கிருஷ்ணதுளசி :உங்களுக்கு பெண் வாசகர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்களே இது உண்மையா?

பாலகுமாரன்: அப்படி ஒரு சர்வே இங்கு யாரும் எடுத்தாக தெரியவில்லை. நானும் எடுக்கவில்லை. வாசகரை ஆண் என்றும் பெண் என்றும் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு உவப்பில்லை. ஆணாயினும் சரி ,பெண்ணாயினும் சரி சந்திக்க நேர்ந்தால் அந்த வாசகரோடு அவரைப் பற்றிய விஷயங்களை கிரஹித்துக் கொள்வது என் வழக்கம். அவரைப் படிக்கத் தூண்டுவதும் என் இயல்பு. என்ன படித்திருக்கிறார், எப்படி படித்திருக்கிறார் என்று பார்ப்பது என் பழக்கம். பெண் வாசகர்கள் தான் அதிகம் என்று எவரேனும் ஒரு பட்டியலிட்டால் என க்கு அதில் ஆட்சேபணையும் இல்லை. ஒரு எழுத்தாளருக்கு பெண் வாசகர்கள் அதிகமாக இருப்பதில் யாருக்கு வருத்தம் இருக்க முடியும்.


கிருஷ்ணதுளசி :உங்களை சந்திக்கும் வாசகர்களிடம் நீங்கள் என்ன பேசுவீர்கள்?

பாலகுமாரன்: வாசகரிடம் இலக்கியம் தான் பேச வேண்டும் என்று நான் எந்தக் கட்டுபாடும் விதித்துக் கொள்ளவில்லை. அந்த வாசகரின் தொழில் பற்றியும், அந்த தொழிலில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் பற்றியும், அவர் குடும்பம் பற்றியும், குடும்பத்தினுடைய மேன்மைப் பற்றியும், அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் நான் பேசுவது உண்டு. அவையும் இலக்கியம் தான் என்பது என் அபிப்ராயம்.

7 comments:

said...

Blog varukiratha enru thinamum ethirparthukondu ahatrkaka kathu kondu iruntha engali pondravarkalluku oru inba athirchi. Kelvikal ukku iyawin bathilkal oondrum muthucharangal. Maranthirku piraku ulla vazahai patrium rajendra cholan ai patriim ariya avalaga ullom.nalla kelvikalai therunthuedutha krishnathulasi ikku engal nanri

Kalai vinoth

said...

Indha kelvi padhil pagudhiai parthathum romba santhoshamaga irundhathu. adhuvum andha mudhal kelvikana padhil romba arpudham, particularly andha kadaisi 3 varigal.- Chandru

said...

Its very glad to see the new post afte long period of time.i feel as if i had conversation with iyya in person.

said...

வெகுநாட்கள் சென்றபின் தாய்வீடு சென்றது போன்ற உணர்வைத்தந்துள்ளது தங்கள் பகுதி... நன்றி....

said...

ரொம்ப நாட்களுக்கு பிறகு பாலா... அருமை, நன்றி. மீண்டும் குதிரை கவிதை!! எந்த புத்தகம் என்று சொல்ல முடியுமா. படிக்கதுடிக்கும் - வரதராஜன்...

said...

how many days we are waiting for????

said...

where we are getting our ayya novels??